Tuesday, October 2, 2007

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...
















அடிக்கடி வலைப்பதிவாளர்களிடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு, 'வரமாத்தேன் போ' என்று சிலர் கிளம்புவதால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே பிறப்பெடுத்த 'திராவிடக் கல்கி', நாட்டாமை முத்துதமிழினி பதிவாளர்களுக்கிடையே உரையாடலோ, விவாதமோ என்ன கண்றாவியோ ஏற்பாடுசெய்கிறார். ஆனால் பதிவர்கூட்டங்களுக்கு வராததுதான் அவரது லேட்டஸ்ட் டிரெண்ட் என்பதால் அவர் மட்டும் ஆஜராகவில்லை.....

(வலைப்பதிவாளர்கள் தங்களுக்குள் சீரியசாகப் பேசிக்கொண்டிருக்கும்போது தலைவிரிகோலமாக மூர்த்தி ஓடிவருகிறார்...)

மூர்த்தி : கிறிஸ்துவன் எப்ப திராவிடன் ஆனான்?

செந்தழல் ரவி ( டென்சனாகிறார்) : டேய் மலேசிய நாதாறி!

சுகுணா : கூல்டவுன் ரவி, கருத்துக்களை நிதானமாக எதிர்கொள்ளவேண்டும்.

குழலி : இப்படித்தான் சொல்வீங்க! ரெண்டுவாரத்திற்கு முன்னால நீங்கமட்டும் மெகாசீரியல் கணக்கா அழுவாச்சிகாவியம் பாடலியா? ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரேக்கிங்பாயிண்ட், கண்மணி அன்போடு காதலன் நான் ....

சுகுணா : ஹலோ, நிறுத்துங்க குழலி, கேப் கிடைச்சா போதுமே குணா, குருதிப்புனல்ன்னு கமல் டயலாக்கோடு வந்திடுவீங்கல்லே! சரி, அதைவிடுங்க, தோழர் மூர்த்தி, உங்க கேள்வியே அபத்தமானது. தோழர் பெரியாரின் விளிப்பில் பார்ப்பனரல்லாத கிறித்துவர், முஸ்லீம்கள் என அனைத்து இந்துவற்ற சமயத்தாரும் அடங்குவர். வித்தியாசங்களை அங்கீகரித்து பன்மையில் ஒருமையைக் காணும் ஒரு அரசியல் நிலைப்பாடு..

ரவி : இதுக்கு மூர்த்தி திட்டினதே பரவாயில்லப்பா, இந்தாள் பேசறது ஒரு இழவும் விளங்கமாட்டேங்குது...

தோழர்கள் : சுகுணா, பெரியாரைத் தோழர்ன்னு சொன்ன அதேவாயால மூர்த்தியையும் எப்படித் தோழர்ன்னு சொல்றீங்க? இதை நாங்கள் கண்டிக்கிறோம்..

அய்யனார் : பெருவெளியில் கிளைத்த பன்மைச்சமவெளியில் எல்லாவற்ரையும் அங்கீகரிக்கும் மனோநிலையும் புனிதங்களின் மீதான கட்டவிழ்ப்புமே தோழர் என்று சுகுணாவைச் சொல்லவைத்தது..

சுகுணா : யோவ், நீ பேசறது எனக்கே புரியலை, போத்ரியா கொட்டேசன்ல்லாம் யூஸ் பண்றியே, காபிரைட் வாங்கிட்டியா?

அய்யனார் : இல்லீங்ண்ணா...

சுகுணா : அப்ப கொஞ்சம் அமைதியா இரு...

மாலன் : எக்ஸ்கியூஸ் மீ, பிரபாகரனுக்கு வயிற்றுவலின்னு தினமலரில் ஒரு கட்டுரை வந்திருக்கு. அதை நான் டிரான்ஸ்லேட் பண்ணிருக்கேன். வாசிச்சுக் காட்டவா?

ரவி : தினமலர்ல தமிழ்ல்லதானே வரும்? அப்புறம் ஏன் டிரான்ஸ்லேட் பண்ணினீங்க?

மாலன் : எனக்குத் தெரியும், அடுத்து இந்துராம் மகள் ஏன் அமெரிக்காவில் படிக்கிறாங்கன்னுதானே கேக்கப்போறீங்க?

ரவி : அவங்க கொரியாவிலையா படிக்கிறங்க?

மாலன் : இல்லையே,

ரவி : அப்புறம் ஏன் நான் கேக்கப்போறேன்?

அய்யனார் : மாலனின் இந்த விஷமத்தை ஏன் செல்லா கண்டிக்கலை?

செல்லா : மாலனுக்கு மஞ்சக்காமாலை

அய்யனார் : என்னது?

செல்லா : ஆமா, பிரபாகரனுக்கு வயிற்றுவலி, மாலனுக்கு மஞ்சக்காமாலை..

அய்யனார் : மாலனை என்ன செய்யலாம்? மாலனை என்ன செய்யலாம்?

செல்லா : நான் நமீதாவையே என்ன செய்யலாம்ன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். இந்தாள் வேற. எனக்கு அழுகை அழுகையா வருது... கண்ணீர் வருது சாமி, நான் போறேன், ஒரு நிமிசம் என் கேமிராவை எடுத்துட்டுப்போறேன்...

ரவி : ஹலோ, அது என்னோட கேமிரா...

(கேட்காமல் செல்லா போய்விடுகிறார்.. இரண்டுநிமிடம் கழித்து உள்ளே வந்து தமிழச்சியிடம் போய்...) நான் போறேன், நான் போறேன்..

தமிழச்சி : வருவியா, வரமாட்டியா? வரலைன்னா உன் பேச்சு கா...

செல்லா : வந்துட்டே....ன். தோழி, அடுத்தமுறையாவது புது ஆயுதத்தோடு வா! சேரி இல்லா ஊருக்குள்ள பிறக்கவேணும் பேரப்புள்ள, தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதானே கருத்து!

சுகுணா : நல்ல கருத்தா இருக்கே, யார் சொன்னது?

செல்லா : வேற யாரு, போக்கிரி விஜய்தான். அடியும் உதையும் கலந்துவச்சு இடுப்பு எலும்பை ஒடிச்சுவச்சா போக்கிரி பொங்கல், கராத்தே அடியைக் கலந்துவச்சா தமிழச்சி பொங்கல், தமிழச்சி பொங்கல்...( குதித்துக் குதித்துக் குத்தாட்டம் போடுகிறார்)எக்ஸ்கியூஸ்மீ தமிழச்சி, புதுசா எடுத்த போட்டோ இருக்கா?

சுகுணா : செல்லா, நீங்க செய்றது நியாயமே கிடையாது. நாங்க எவ்வளவு சீரியசா பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லாம இருக்கீங்க.. தோழர் தமிழச்சி நீங்களும் இதுக்கு உடந்தையா?

தமிழச்சி : நோ நோ, என்க்கு டமில் கொஞ்சும் கொஞ்சும்தான் தெரியும். வருவியா வரமாட்டியால்லாம் டமிலா? நான் கராத்தெஎ, பிளாக்பெல்ட் இத்ல்லாம்தான் டமில்ன்னு நினைச்சேன்..

பொட்டிக்கடை சத்யா : தமிழே தெரியாத நீங்க எப்படி தமிழச்சின்னு பேர்வைக்கலாம்? இது டமிழனுக்கு, சாரி மாமூ, தமிழனுக்கே அவமானம்.

மூர்த்தி : தமிழன் எப்ப திராவிடன் ஆனான் ?

(கூட்டத்திலிருந்த பலர் டென்சனாகின்றனர்)

சுகுணா : தோழர், தமிழர்களுக்கும் திராவிடர்களுக்குமுள்ள வித்தியஅசத்தைப் பெரியார் 1927ல்.......

மூர்த்தி : பெரியார் எப்ப திராவிடன் ஆனார்?

(அதற்கப்புறம் முழுடென்சனான திராவிட ஆப்பாயில் குஞ்சுகளின் கொலைவெறிக்கூத்தை நட்சத்திர வாரம் கொண்டாடும் 'சும்மா டைம்பாஸ் மச்சி' கருந்திரையில் காண்க)