Wednesday, August 6, 2008

தூங்கும்போது காலாட்டுதல்












நீண்டநாட்களாகி விட்டன. இன்னும் மூன்று மாதங்கள் எழுதாமலிருந்தால் தங்கமணி, ரோசாவசந்த் வரிசையில் 'மூத்த வலைப்பதிவர்கள்' பட்டியலில் சேர்வது உறுதி. நிறைய பதிவர்கள் புதிதாக எழுத ஆரம்பித்திருத்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான செய்திதான் என்றபோதும் பெரிதும் ஆழமற்ற இடுகைகளே அதிகம் தென்படுகின்றன. சினிமாச்செய்திகளுக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. ம.க.இ.க, பெரியார் திராவிடர் கழகம் போன்ற மாற்று இயக்கத்தோழர்களின் பதிவுகளும் குறைந்துவருகின்றன. சிறுபத்திரிகை மாதிரி எழுத்துப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் இதில் வருந்துதற்குரிய விஷயங்கள் இரண்டு. 'கலக்கப்போவது யாரு' அசத்தப்போவது யாரு' கோவை குணா, ரோபோ சங்கர் வகையறாக்களைப் போல, ரமேஷ் பிரேம், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனைப் பாவனை செய்யும் மிமிக்ரி கலைஞர்கள் பதிவர்களாக மாறியிருப்பது ஒரு சோகமெனில், நடைமுறை சார்ந்த அரசியல் குறித்த அவதானமோ அக்கறை இவர்களிடம் துளியும் இருப்பதாய்த் தெரியவில்லை. பொத்தாம்பொதுவாக இடதுசார்பு அரசியல்தான் எங்களுடையது என்று சொல்லிக்கொண்டாலும் கூட 90 களுக்குப் பின் உலகமயமாக்கல் நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் நுழைத்திருக்கும் பாரியத்தாக்கங்கள், இன்னமும் உத்தபுரம் போன்ற பகுதிகளில் பேய்ப்பல் காட்டிச்சிரிக்கும் சாதித்திமிர் இவையெல்லாம் குறித்துப் பின்நவீனப்பூசாரிகளிடமிருந்து ஒரு எழுத்தும் வருவதில்லை. போரடிக்கும் லெக்சர்களும் எழுதிப்பழகும் உத்திகளுமே நவீன வலைப்பதிவு எழுத்துக்களாய் மீளவும் மீளவும் வைக்கப்படுகின்றன. இவற்றினின்று விலகிச் சமீபமாய் என்னைக் கவர்ந்த பதிவர் 'வினவு'. பெரிய ஆர்ப்பாட்டம், பின்நவீனத்துவ டிரெய்லர்கள் எதுவுமின்றி இயல்பாக எழுதுகிறார். குறிப்பாக் ஜெயமோகனும் நாவல்பழமும் குறித்த பதிவு ஜெமோவின் வர்க்கச்சார்பைத் தோலுரிக்கிறது. இந்தியாடுடே முஸ்லீம்களுக்கு எதிராய் வெளியிட்டுள்ள சிறப்பிதழ் குறித்து வினவு மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது துயரளிக்கிறது.

----------------------------

வலைப்பதிவுலகப் பரபரப்புச் செய்திகளை வாசிக்க நேரமில்லை. முதலாவதாகப போலி பிரச்சினை ஒருவழியாக முடிவிற்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாக விடாதுகருப்பு பக்கத்தில் மூர்த்தி எழுதிய கடிதம் மட்டும் படிகக நேர்ந்தது. அப்புறம் பெயரிலி அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணியதாக அறிகிறேன். அதுகுறித்தும் முழுதாக ஏதும் தெரியாது. என்றாலும் ஒருநாள் கூகுளில் என் பெயரிட்டுத் தேடியபோது ஒரு அனானிப்பின்னூட்டத்தை வாசிக்க நேர்ந்தது. நான் எனக்கு எதிரான பின்னூட்டங்களை மட்டுறுத்திவிடுவதாகவும் ஆனால் கருத்துச்சுதந்திரம் குறித்துப் போலிக்கூச்சல் போடுவதாகவும் நண்பர் ஒரு வர் எழுதியிருந்தார். திருமணத்திற்குப் பின்னும்கூட 'உன் மனைவியை ஒழுத்ததைக் கதையா எழுதுவியாடா' என்று வந்ததைக்கூட வெளியிட்டிருக்கிறேன். எனவே இத்தகைய குற்றச்சாட்டுகளில் உள்ள அபத்தங்களை நினைத்து சிரிக்க மட்டுமே ஏலும். முன்பு நான் எல்லாவகையான பின்னூட்டங்களையும் வெளியிட்டுக்கொண்டுதானிருந்தேன், அப்பின்னூட்டங்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்றபோதிலும்கூட கருத்துச்சுதந்திரம் என்பதால். ஆனால் பின்னாளில் அத்தகைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். கடைசியாக என் பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம் கூட அவ்வாறாக வலையுலகிற்குத் தொடர்பில்லாத வேறுசில மனிதர்களைப் பற்றி அபத்தமும் ஆதாரமற்றதுமான அவதூறுகளைச் சுமந்துவந்தது. எனன செய்ய? எச்சில் இலைகளைக் குப்பைத்தொட்டிகளில்தானே எறியவேண்டும்!
--------------------------------------

தோழர் தமிழச்சி 'வெளியிட வேண்டாம் என்று ஒரு பின்னூட்டத்தை எழுதியிருந்தார். நீண்டநாட்களாக வெளியிடாமலும் ஆனால் அழிக்காமலும் வைத்திருந்தேன். இந்த எச்சில் இலை பதட்டத்தில் தவறிப்போய் வெளியிட்டுவிட்டேன். உடனடியாகச் சுதாரித்து அழித்தும்விட்டேன். அது மொத்தம் என் வலைப்பக்கத்தில் இருந்ததே மூன்று முதல் அய்ந்துநிமிடங்கள்தானிருக்கும். ஆனால் அதற்குள் அந்தப் பின்னூட்டத்தை வைத்து சர்ச்சை உருவானதாக அறிகிறேன். அது எப்படி இருபத்துநாலுமணிநேரமும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார முடிகிறது என்று தெரியவில்லை. உண்ணவும் மலங்கழிக்கவும் தேவையற்ற தேவர்களாயிருக்கக்கூடும்.

பின் நவீனம் பற்றி நான் ,அய்யனார், சுந்தர் ஆகியோர் அறிவதற்கு முன்னமே தன் தொப்புளுக்குக்கீழே முடிவளர்ந்துவிட்டதாகவும் பெயரிலிரி அண்ணை எழுதியிருந்தாராம். வாழ்க பின்நவீனத்துவத்தாத்தா பெயரிலி அண்ணை!
----------------------------------

இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் கருத்துரிமைக்கான போராட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
------------------------------------------------

ஒருவழியாக மன்மோகன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவை அய்ந்தாண்டுகள் நிலையாக ஆண்ட முதல் பார்ப்பனரல்லாத பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால் சீக்கியச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மன்மோகனாக இருந்தாலும், மாயாவதி மாதிரியான தலித் பிரதமராக இருந்தாலும் இடதுசாரிகளானாலும் அமெரிக்க அடியாட்களாய் மாறுவார்களின்றி வேறில்லை. மாவோயிஸ்ட்களின் அரவணைப்பிலிருக்கும் நேபாளம் என்ன செய்யப்போகிறதென்று பார்ப்போம்.
-------------------------------------
இனி வாரம் ஒருமுறையாவது எழுதவேண்டும். தீவிர இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப்படாத சினிமாக்காரர்கள் குறித்து எழுத எண்ணம். முதலாவதாக கவுண்டமணி குறித்து எழுத ஆசை.‌
+ = &

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍