Saturday, January 5, 2008

திருட்டைப் பற்றி ஒரு தியரி

















இந்தத் தலைப்பே திருடப்பட்டதுதான். திருட்டு என்பது மனித அடிப்படைக் குணாம்சமெங்களிலொன்று. புத்த்கம் திருடுவது, திருடப்பட்ட புத்தகத்தைப் பதிப்பிப்பது, பக்கத்து வீட்ட்டுப்பெண்ணின் உள்ளாடைகளைத் திருடுவது எனத் திருட்டுக்கள் பலவகைப்படும். உண்மையில் சொல்லப்போனால் திருட்டின் தந்தை என்று கடவுளைத்தான் சொல்லவேண்டும். ஆதி மனுசனையும் மனுசியையும் படைத்த கடவுள் அவர்களிடமிருந்து வெட்கத்தைத் திருடிக்கொண்டுதான் படைத்தார். கண்டுபிடித்துக்கொடுத்த திருவாளர் சாத்தானை உலகின் முதல் போலீஸ்காரர் என்று சொல்லலாம், தவறில்லை.எழுத்தை எழுத்தால் எழுதிக்கொண்டிருக்கிறது எழுத்து. இதுவும் ஒரு திருடப்பட்ட வரி, இதுவும்கூட நீர், நீரால் நீரை நீரடித்துச்செல்கிறது என்னும் பதியப்படாத ஒரு வரியிலிருந்து திருடப்பட்டிருக்கலாம். இப்போது திருட்டு முக்கியமா, எனில் இல்லை திருட்டைப் பற்றி ஒரு கதைகூறும் விருப்பம் அல்லது அரிப்புதான் முக்கியம். நாம் முதன்முதலில் கற்றுக்கொண்ட கதையும் திருட்டைப்பற்றித்தான் என்றால் உங்களுக்குப் புரியுமா? எப்படியோ அலிபாபாவின் குகையில் தொலைந்துபோன அந்த 40வது திருடனைக் கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி. இதுவரை திருடியதற்கும் இப்போது திருடப்போவதற்கும் ஏதேனும் குறிப்பு தருவதாய் உத்தேசமில்லை. இதுவரை எல்லாம் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் எது நடக்கிறதோ அதுதானே நடக்கும், மேலும் எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டதும்கூட. எடுக்கப்பட்ட எல்லாமும் கொடுக்கப்படவும் செய்யும். கோபியரின் திருடப்பட்ட சேலைகள் திரவுபதைக்குப் பரிசளிக்கப்பட்டதே திருட்டைப்பற்றிய கதைகளின் நீள்வட்டப்பாதையின் இயக்கம்...மய்யத்தில் தாயக் கட்டங்களைக் கிழிக்க
குச்சிகளைத் தேடிச் சோர்ந்து எண்பதாயிரம் மைல் தொலைவிலிருக்கும்
ஐம்பதாயிரம் வயது கொண்ட அல்லாவிடம் வரம் பெற்றவர் ராவணன்! ராமரை விட இதில் லட்சுமணனுக்கு முக்கியத்துவம் அதிகம். அதுமட்டுமல்ல இந்த ராமாயணத்தில் ராமருக்கும், சீதைக்கும் பிறந்தவர் அனுமன்!""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை. ஷோபனா. 1.ஆங்கிலம் படித்தவர் 2. மேட்டிமையாளர் (எலிடெ) 3. வெள்ளை நிறம் கொண்டவர் 4. நகர்புறப் பண்பாட்டில் வளர்ந்தவர் 5. நாகரிகமானவர் 6. உயர்சாதியான பார்ப்பனர். இந்த முரணின் எதிர்நிலையில் இருப்பவாகள் மற்ற 9 மாணவர்களும். இவர்கள் ஒடுக்கப்பட்ட தலித் துவங்கி தெலுங்கர் முஸ்லிம் கிறித்துவர் உட்பட எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். உடல் உழைப்பாளிகள்.கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு
ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை புதைத்து வைத்திருக்குமாற் போல
'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய் நாஞ்சில் நாடனுக்கு இப்போது வீரநாராயண மங்கலத்து ‘வெள்ளாம்புள்ளையோ’ கொள்ளும் நவீனமயமாதலில் ஆதாரமான கோபம் இருக்கிறது. பந்திப்பாயை விரித்து நுனியிலை பரப்பி உப்புதொட்டு கூட்டுகறி வரை விதிப்படி பரிமாறி பருப்பும் நெய்யும் பெய்து ‘மூட நெய்விட்டு மூக்கு வழிவார’ உண்ணும் பண்பாடு அழிகிறது.ஐபிஎம் இந்தியாவில் அவர்களது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களை 75000 மாக உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. அமெரிக்கா தாண்டி மிக அதிக பணியாளர்கள் பணியாற்றும் இடம் ஐபிஎம்பிற்கு இந்தியா தான். ஆரகிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், என மென்/வன் பொருள் நிறுவனங்கள், மெதுவாக அமெரிக்காவிலிருந்து கடையினை கொஞ்சமாக கொஞ்சமாக காலி செய்து கொண்டு பெங்களூரிலோ, சென்னையிலோ, மும்பையிலோ டேரா போடப் போகிறார்கள். இயந்திரத்தனமான வாழ்க்கையிற்குள் மூழ்கியிருந்தாலும் நீங்கள் தனியாள் அல்ல. உங்கள் ஒவ்வொரு அசைவும் நுட்பமாய் கவனிக்கப்படுகின்றது. திருமணவிழாக்களில்/ஒன்றுகூடலில்/ வழிபாட்டுத்தலங்களில் உங்களைப் பற்றிய கதைகள் சிறகுகளுடன் பறக்கத்தொடங்குகின்றன. இவ்வாறான கதைகள்/கிசுகிசுக்கள் உங்கள் காதிற்குள் விழத் தொடங்கும்போது உங்களது சுதந்திரமான எல்லைகளைச் சுருக்கத் தொடங்குகின்றீர்கள். சொல்லப்படுகிற வரலாற்றிலும் எழுத்திலும் தனது தீவிரமான இடையீட்டை நிகழ்த்தக் கூடிய பெண் எழுத்து என்பது ஒரு மாற்றுச் செயல்பாடே. தற்போதுள்ள எழுத்தின் மொழி ஆண்மைய ஒழுங்கினால் உருவாக்கப் பட்டு பரிபாலிக்கப் படுகிற ஒன்று.இன்று உலகம் முழுவதும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைப் போராளிகள் யுத்தமுனைகளில் தள்ளப்பட்டும் பாலியல் வதைகளுக்குள்ளாக்கப்பட்டும் இயல்பான குழந்தைத்தனங்கள் சிதைக்கப்பட்டும், ஏன்? எதற்கு? யாருக்கு? என்று தெரியாமலேயே சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.ஆடை ஏற்றுமதி வணிகம் செய்துவந்த நீதிபதி சபர்வாலின் இரண்டு மகன்கள் 2004-ம் ஆண்டு இறுதியில் பெரும் வணிகக் கட்டடங்கள் கட்டி விற்கும் 'ரியல் எஸ்டேட்' தொழிலில் முன்னணியில் இருந்த காபுல் சாவ்லா என்பவருடன் பங்குத்தாரராக இணைந்து அத்தொழிலில் ஈடுபட்டனர்

காக்கா வடை 'சுட்ட' கதை 1.

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம், இல்லேல்லே, பாட்டி இருந்துச்சாம், இல்லேல்லே, நரி இருந்துச்சாம், எதுதான் முதல்முதல்ல இருந்துச்சாம். இப்படியும் கூட சொல்லலாம். வடை இல்லையேல் கதை இல்லை. காக்காவைவிட பாட்டியை விட நரியை விட வடையே முக்கியம் என்பதே நீதியாம்.

காக்கா வடை 'சுட்ட' கதை 2

அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. ஒருவேளை வடைக்குப் பதிலாக முறுக்கு என்று வைத்துக்கொண்டால் கதை சொல்ல முடியாதா? இங்கு வடையோ, அடையோ, கதையோ எதுவுமில்லாமல் வருவதில்லை.

3.

நானை நானிடமிருந்து திருடி நானுக்கு விற்கும் ஒரு திருட்டு நான்.

4.

.

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அது பாட்டிகிட்டயிருந்து வடையைத் திருடுச்சாம். மரத்துமேல உக்காந்து காக்கா வடைய சாப்பிடப் போகும்போது பறந்து வந்து கீழே உக்காந்த கழுகு, 'காக்கா காக்கா உன் குரல் அழகாயிருக்கு, ஒரு பாட்டுப் பாடேன்'ன்னுச்சாம். காக்காவும் பாட்டுப்பாடும்போது கீழே விழுந்த வடையைத் தூக்கிட்டு கழுகு பறந்தே போயிடுச்சாம். இருந்தாலும் காக்காவுக்குக் கவலையில்லை. அது திருப்பித் திருப்பிப் பாடுச்சாம், 'ஜாரே ஜகான் ஹி அச்சா, ஜார்ஸ் போனாராம் உச்சா, உச்சா.....