Sunday, April 20, 2008

அலை - ஒரு ஆ-கதை முயற்சி

விசித்திரன் ஒரு கதை எழுதுவதென்று தீர்மானித்தான். டத்தோ நாகராஜ் என்னும் சகபதிவர் அ கவிதை, அ கதை என்றெல்லாம் எழுதிப் பிரபலமானதைத் தொடர்ந்தே அவன் இந்த முடிவிற்கு வந்தான். ஆனால் அ கதை எழுதினால் அது வழக்கம்போல இருக்கும் என்பதால் ஆ கதை எழுதித் தமிழை வளர்த்தே தீருவதென்று கொள்கைமுடிவெடுத்தான். ஆனால் அவனுக்கோ கவிதை எழுத வருமேயொழிய கதை எழுத வராது. (அதுவும்கூடப் பொய், யோனி, முலை, மூத்திரம், குசு, குண்டி, குறி என்றெல்லாம் கெட்டவார்த்தைகளை எழுதி நிரப்பி அவை பின்நவீனத்துவக்கவிதைகள் என்று ஊரை ஏமாற்றி வந்த ஒண்ணாம்நம்பர் கிரிமினல் அவன்.)

இதற்குமுன்பு ஒருமுறை இப்படித்தான் கதை எழுதுவதென்று முடிவெடுத்து நூலகமொன்றிற்குச் சென்று மாலை ஆறுமணிவரை தமிழ்க்கதைப்புத்தகங்களையெல்லாம் புரட்டிப் புரட்டிப் படித்து பிறகு இருட்டத்தொடங்கியபோது வீடுநோக்கி நடந்தான். ஆனால் வரும்வழியில் இயற்கை உபாதை அவனை நெட்டித்தள்ளியதால் ஒரு அரசுக்கட்டணக்கழிப்பறைகுள் நுழைந்து மலங்கழித்துக்கொண்டே தான் ஆற்றப்போகும் இலக்கியச்சேவையை எண்ணிப்பூரித்தபடி ஒரு சிகரெட்டையும் முடித்திருந்தான். ஆனால் கழிப்பறைக் காவலாளியோ இவன் உள்ளேயிருப்பது தெரியாமல் கழிப்பறையைப் பூட்டிவிட்டுப்போய்விட்டார். ஒரு இரவுமுழுக்கக் கழிப்பறையிலேயே கழித்ததையே ஒரு சிறுகதையாக எழுதலாம். ஆனால் ஏனோ அவனுக்கு அதில் விருப்பமில்லை.

(கதையின் தொடர்ச்சியை thuroki.blogspot.comல் காண்க)

No comments: