Saturday, September 19, 2009

'உன்னைப் போல் ஒருவன்' ‍ கமலின் இன்னுமொரு இந்துத்துவச் சினிமா















நான் ‘வெட்னஸ்டே’ படம் பார்த்ததில்லை. ஆனால் ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படம் தந்த மன உளைச்சல் ஏராளம். வெட்னஸ் டே எப்படியிருந்தபோதிலும் அதை ரீமேக் செய்வதற்கான கமலின் தேர்வு அவரது அரசியல் சார்பைத்தான் காட்டுகிறது. இதேபோல கமல் விரும்பி ரீமேக் செய்த இன்னொரு படம் ‘குருதிப்புனல்’. இந்த படம் கோவிந்த் நிஹ்லானியின் துரோகாலை விட சிறந்த படம் என்று பாராட்டியிருப்பார் ‘ஆய்வாளர்’ யமுனாராஜேந்திரன். அ.மார்க்ஸ் குறித்து அவர் கீற்று இணையத்தில் எழுதியிருந்த கட்டுரையில் கீழ்க்கண்ட விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். (கந்தசாமி படத்தில் எல்லோரும் மரத்தில் மனு கட்டித் தொங்கவிடப்போவதைப் போல அ.மாவை அர்ச்சிக்க விரும்புபவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதும் மரமாக கீற்று மாறிவிட்டது வேறு விஷயம்). ஈழப்பிரச்சினை குறித்து அறிவு இல்லாமல் ‘உன்னதசங்கீதம்’ கதை எழுதிய சாருவின் கருத்தை எப்படி அ.மா தனது புதுவிசை இதழில் கையாளலாம் என்று கேள்வி எழுப்பியிருப்பார். ஆனால் ஈழப்பிரச்சினை குறித்து விரிவும் ஆழமும் அகலமும் தேடி ஆராய்ந்த யமுனா உதிர்த்த முத்துதான், ‘குருதிப்புனலில் போராளி பாத்திரத்தில் காட்டப்பட்டிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்’ என்று. அதற்கான ஒரு முகாந்திரத்தைக் கூட குருதிப்புனலில் தேடினால் கிடைக்காது. இது யமுனாவின் ஈழப்பிரச்சினை குறித்த அபாரமான அறிவு. இன்னொரு பக்கம் துரோகாலை விட சிறந்த படத்தில் நக்சல் போராளிகளின் வேலை போலீஸ்காரனின் பதின்பருவக் குழந்தை மீது பாலியல் இச்சை கொள்வது, அது கிடைக்காவிட்டால் இன்னொரு போலீசுக்காரனின் மனைவியைப் பாலியல் புணர்வு செய்வது. இந்தியா என்ன உலகம் முழுக்க இத்தகைய கேடு கெட்ட காரியங்களில் ஈடுபட்டு வருபவர்கள் போலீசும் ராணுவம்தான் என்பது மனித உரிமைகள் மீது ஆரம்பகட்ட அக்கறை கொணடவர்கள் கூட அறிந்த உண்மை. ஆனால் நம் ‘மார்க்சிஸ்டு சினிமா ஆய்வாளர்’ யமுனாவுக்கு மட்டும் அது சூப்பர் படம்.

போகட்டும் குருதிப்புனல் எப்படி ஒரு போலீஸ் சினிமாவோ அதேபோல்தான் இந்த உன்னைப்போல் ஒருவனும். இந்த படத்திலும் எல்லா போலீஸ்காரன்களும் நல்லவன்கள்தான். தன் மனைவியையும் ஒன்பது மாதக் குழந்தையையும் ஊருக்கு அனுப்பி விட்டு பாமைச் செயல் இழக்கும் தேசப்பணியில் ஈடுபடுபவர்கள். உயிருக்கு அஞ்சாத உத்தமர்கள். நல்லது கமல், வாச்சாத்தி தொடங்கி பத்மினி வரை இப்படியான ‘கண்ணியமான’ போலீஸ்களைத்தானே காவல்துறை சுமந்துகொண்டிருக்கிறது. படத்தில் கம்ப்யூட்டர் நிபுணர் சொல்கிறார், ‘அவர் ஒரு பிரைனிதான் மேதை அல்ல’ என்று. பிறகு கமலின் ‘தேசபக்தியை’ப் புரிந்துகொண்டு ‘அவர் மேதைதான்’ என்று ஒத்துக்கொள்கிறார். ஆனால் கமல் எவ்வளவு பெரிய மேதை என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும்.

இந்த சினிமா ஒரு பச்சைப் பார்ப்பானால் எடுக்கப்பட்ட கேடுகெட்ட இந்துத்துவச் சினிமா என்பதற்கு சாட்சி, மூன்று இஸ்லாமிய ‘தீவிரவாதிகளையும்’ ஒரு இந்து ஆயுதவியபாரியையும் வேனில் அழைத்துவரும் காட்சி. ‘தான் தீவிரவாதியானதற்கான காரணத்தை விவரிக்கிறார், ஒரு முஸ்லீம்’. அவரது ‘மூன்றுமனைவிகளுள்’ ஒருவர் பெஸ்ட் பேக்கரி கொலையில் கொல்லப்பட்டவர். அதற்குப் பழிவாங்கத்தான் அவர் கோவையிலே குண்டுவைத்தார். கேட்கிறவன் கேணக்கூ...வா இருந்தா அக்காரவடிசிலில் அமிர்தம் வடியுதுன்னு சொல்றவர்கள்தானடா நீங்கள்! பெஸ்ட்பேக்கரி கொலை நடந்தது 2002ல். கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது 1998ல். இதுதான் கமலின் மேதமை. என்ன சொல்ல வருகிறீர்கள் கமல்? ‘துலுக்கன்கள் எல்லாம் டைம் மிஷின்ல பின்னல் போய் பழிவாங்க குண்டு வைப்பாங்க’ன்னா?

மணிரத்னம் படம் உட்பட பல இந்துத்துவா சினிமாவில் கூட ஒரு பேலன்ஸ் செய்வதற்கு முஸ்லீம்கள் சார்பாக சில நியாயங்கள் சொல்லப்படும். ஆனால் இந்த படத்தில் அதற்கான வாய்ப்பையும் மறுத்து தான் எவ்வளவு மோசமான பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார் கமல். சொல்லப்படும் ஒரே நியாயம் ‘பெஸ்ட் பேக்கரி கொலைச்சம்பவம்’. அதற்கு அருகில் இருக்கும் இந்து ஆயுத வியாபாரி சொல்வான், ‘‘அதான் மூணு பொண்டாட்டியில ஒண்ணுதானே போச்சு, மீதி ரெண்டு இருக்கில்ல’’. தியேட்டரில் சிரிக்கிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கமலஹாசா? அந்த ‘இந்து ஆயுத வியாபாரி’ ஒரு அப்பாவி. ஆயுத வியாபாரம் செய்வதைத் தாண்டி அவனுக்கு வேறு எந்த கிரிமினல் நோக்கமும் கிடையாது.

ஆனால் முஸ்லீம் ‘தீவிரவாதிகள்’, கொலை வெறி தலைக்கு ஏறியவர்கள், மத வெறியர்கள், அது மட்டுமல்ல, தன்னோடு ஒரு முஸ்லீம் ஜீப்பில் உடன் வராதபோதும் அவனுக்குத் துரோகம் செய்யத் தயங்காதவர்கள். அப்புறம் நம் ‘மேதை’ கமலின் கருத்துப்படி ‘மூணு பெண்டாட்டி வைத்துக்கொள்பவர்கள்’. இதோடு மட்டும் கமலின் பார்ப்பன வன்மம் அடங்கவில்லை. நாலு தீவிரவாதிகளையும் அழைத்துச் செல்லும் இரண்டு போலீஸ் அதிகாரிகளில் ஒருவன் ஆரிப் என்னும் முஸ்லீம் அதிகாரி. அப்போது இன்னொரு போலீஸ் அதிகாரியை அழைத்து மோகன்லால் கூறுகிறார், ‘‘ஆரிப் மேல ஒரு கண்ணு வச்சிக்க’. ‘‘யாரை அவங்களோட அனுப்பிச்சிருக்கீங்க?’’ என்று காமன்மேன் கமல் கேட்கும்போது, மோகன்லால் ஆரிப்பின் பெயரைச் சொல்ல, லேசாக முறுவலித்தபடி யோசனையில் ஆழ்கிறார் ‘காமன்மேன் கமல்’. அர்த்தம்... ‘போயும் போயும் துலுக்கனையும் கூட அனுப்பிச்சிரூக்கீங்களேடா’.

போலீஸ் ஸ்டேசனுக்குக் கமல் வந்த அடையாளத்தை ஏட்டு மோகன்லாலிடம் விவரிக்கும்போது சொல்கிறார், ‘‘அவர் தாடி வச்சிருந்தாரு, கையில வெங்கடாசலபதி பை வச்சிருந்தாரு’. உடனே மோகன்லால் கேட்கிறார், ‘‘அப்புறம் என்ன சிலுவை போட்டிருந்தாரா?’’. ஆக மொத்தம் மூன்று மதங்களுக்கான அடையாளம் வெங்கடாச்சலபதி & இந்து, சிலுவை & கிறிஸ்தவன், தாடி & முஸ்லீம். தாடி வைத்தவனை எல்லாம் முஸ்லீமாகவும் முஸ்லீமை எல்லாம் தீவிரவாதியாகவும் காட்டுகிற குறியீட்டுக் காட்சி மிகவும் நுட்பமாக தன் இந்துத்துவ அரசியலை நிறுவிக்கொள்கிறது.

சரி, இந்த ‘காமன் மேன்’ எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்றால், ‘தீவிரவாதத்தைத் தீவிரவாதத்தால் எதிர்க்கிறாராம்’. ங்கோத்தா, இதைத்தானேடா அவனும் செஞ்சான்? ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் பார்த்து வலையுலகில் முதன்முதலாக வந்த விமர்சனத்தில் ஒருவர், ‘மும்பையிலே குண்டு வெடிச்சா தமிழன் கவலைப்படறதில்லை’ என்னும் கமலின் வசனத்தை தமிழ்த்தேசிய நோக்கில் கடுமையாக விமர்சித்திருந்தார். ( கமல் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்பதைப் போல இருந்தது அந்த பதிவு. மற்றபடி தமிழர்களைக் கமல் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதில் அவருக்கு ஒரு கருத்துமாறுபாடும் இருக்காது என்பது வேறு விஷயம்.) ஆனால் அதோடு கமல் விடவில்லை, கமல் சொல்லும் ‘தீவிரவாதம்’, மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு, ஸ்ரீபெரும்புதூர் வரை நீள்கிறது. ஆக கமலின் காமன்மேன் விடுதலைப்புலிகளின் ‘தீவிரவாதத்தையும்’ எதிர்ப்பவர்தான்.

கிளைமாக்ஸ் காட்சியில் கமல் கண்ணீர் வடித்த வசனம் பேசும்போது எதையாவது தூக்கி சொருகலாமா என்றிருக்கிறது. இதில் தேவையில்லாமல் கரம்சந்த் காந்தியையும் இழுத்திருக்கிறார். பாகிஸ்தான் பிரிவினை தனக்கு உவப்பு இல்லை என்றபோதும் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்க வேண்டிய நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர் கரம்சந்த். ஆனால் நீங்கள்...? செப்டம்பர் 11 தாக்கலே முஷ்ரப் ஏற்பாடு செய்தது என்று காட்டுகிற ஒரு டி.வி சேனலை, அதில் உள்ள நீரஜா என்னும் பார்ப்பனத் தொகுப்பாளினியைத் தேர்ந்தெடுத்து நீதி சொல்கிறீர்கள். ஒரு காட்சியில் கமல் கேட்கிறார், ‘மகாத்மா காந்தியைத் தெரியுமா, அவர் பெயரைச் சொல்ல உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?‘ என்று. கமல் தன் பின்புறத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

அப்புறம் படத்தின் தமாஷான இடம் (குரூர நகைச்சுவை) ஒரு பெண்ணின் பிறப்புறப்பு சிதைக்கப் பட்டதற்காக ‘காமன் மேன்’ கண்ணீர் சிந்துவது. உண்மையிலேயே ‘காமன் மேன்’ கண்ணீர் சிந்தியிருந்தால், இஸ்லாமியத் தீவிரவாதமும் வந்திருக்காது, நரேந்திரமோடியும் இன்னொரு முறை முதல்வர் ஆகியிருக்க மாட்டான். இந்த ‘காமென் மேன்’ கயர்லாஞ்சி தொடங்கி இந்தியக் கிராமங்களில் தலித் பெண்கள் உடல் சிதைக்கப்பட்டபோது எவர் மயிற்றை பிடுங்கிக்கொண்டிருந்தார் என்று சொல்ல முடியுமா கமல்?

படத்தில் முஸ்லீம்கள், ஈழக்குழுக்கள் மட்டும் அவமானப்படுத்தபடவில்லை. மனித உரிமைகளும் கூட. என்கவுண்டர் செய்வதில் தப்பில்லை, ஒரு போலீஸ்காரன் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அடித்து நொறுக்கலாம் என்றெல்லாம் கொஞ்சமும் இரக்கமில்லாமல் முன்மொழியும் கமல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மனித உரிமையை வலியுறுத்துகிறார். அது எந்த இடம் என்றால், கமல்ஹாசனின் பெயர் வாக்காளர்பட்டியலில் பெயர் இல்லாதது. இந்த காமன்மேன் என்பவனே ஆதிக்கக்கருத்தியலாலும் பொதுப்புத்தியாலும் கட்டமைக்கப்பட்ட தன்னிலைதான். இவனுக்கு எல்லாம் எந்த மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது.

ஒருவேளை இந்த காட்சிகள் வழியாகக் கூட இது இந்துத்துவ சினிமா என்று தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக படத்தின் கடைசி வசனம் இப்படியாக முடிகிறது, ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’. உடனே ஸ்ருதிஹாசனின் இசையில் பாடல் தொடங்குகிறது, ‘சம்பவமாமி யுகே’. போங்கடா பாப்பாரப் பாடுகளா!

ஒருவேளை வெட்னஸ்டே படத்தில்தான் அத்தனைப் பிரச்சினைகள் என்றே வைத்துக்கொள்வோம். அந்த மலத்தைக் கொஞ்சம்ன் கொஞ்சமாக உருட்டி நம் வீட்டு வாசலுக்குக் கொண்டு வரும் கமல் என்ன மலவண்டா? படத்தில் கமல்ஹாசன் பாத்திரத்திற்குப் பெயர் இல்லை, மத அடையாளம் இல்லை, என்ன வேலை செய்கிறார் என்பதற்கான தகவல்கள் இல்லை, இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பெண்களுக்கே உரித்ததாக, கமலின் மனைவிக்கு முகமும் இல்லை. ஆனால் ஒன்றே ஒன்று இருக்கிறது. அது பூணூல்.

106 comments:

Anonymous said...

நண்பா... படம் நன்றாகத்தான் இருக்கின்றது.. ஆனால் உன் விமர்சனம் தரம் தாழ்ந்து சாக்கடையாய் நாறுகின்றது....... :-( :-)))

Anamika said...

சுகுணாதிவாகர் your suffered from a serious mental Illness called braminophobia,the best medicine for that is to suck osama bin laden's dick
you better go to afganistan and suck
osama bin laden's long dick
that is the only medicine for you

Anonymous said...

visit www.tamilnet.tv

Anonymous said...

விமர்சனம் படித்த மர மண்டைக்கு கூட புரிந்து விடும்... அல்லது
சந்தேகம் வந்து விடும்....
நீ ஒரு முஸ்லீம் தீவிரவாதி என்று....

மணிஜி said...

குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன்..வித்தியாசம் காட்ட நினைப்பவன் குரங்காய்தான் இருப்பேன் என்றால் என்ன செய்வது?எழுத்துக்கும்,பிழைப்புக்கும் இடையில் அலைபாயாதீர் நண்பரே

மணிஜி said...
This comment has been removed by the author.
மணிஜி said...
This comment has been removed by a blog administrator.
மணிஜி said...
This comment has been removed by the author.
அகநாழிகை said...
This comment has been removed by the author.
சுகுணாதிவாகர் said...
This comment has been removed by the author.
யுவகிருஷ்ணா said...

///கந்தசாமி படத்தில் எல்லோரும் மரத்தில் மனு கட்டித் தொங்கவிடப்போவதைப் போல அ.மாவை அர்ச்சிக்க விரும்புபவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதும் மரமாக கீற்று மாறிவிட்டது வேறு விஷயம்///

இந்த பதிவுக்கு அவுட் ஆஃப் த காண்டெக்ஸ்ட் என்றாலும் ரொம்ப ரசித்த வரிகள் இவை.

கீற்று காமெடியன்களின் கூடாரமாகி விட்டது :-)

உன்னைப்போல் ஒருவன்! said...

சாட்டையடி!

யுவகிருஷ்ணா said...

தண்டோரா, அகநாழிகை இருவரின் பின்னூட்டங்களும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அளிக்கிறது :-(

யூ டூ அகநாழிகை?

Athisha said...

பாம் வைக்கறவன்லாம் கெட்ட முஸ்லீமகள்் ... பாவம் பொழைப்புக்காக பாம் விக்கறவன் அப்பாவி இந்து!

அவனைப்போய் திட்டிறீங்களே சுகுணா!

மணிஜி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

சூப்பர் காமெடி பதிவு

http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_9890.html

மணிஜி said...

http://vilambarakkaaran.blogspot.com/2009/07/blog-post_09.html


எதிரில் ஜால்ராவும்,அனானி பெயரில் அபத்தமும் எழுத வேண்டிய அவசியம் இல்லை எனக்கு

மணிஜி said...

மயிரளவு விவாதம் கூட இதுக்கு தேவை இல்லை என்பது என் கருத்து.மொட்டையாய் உங்களுக்கு தோன்றுவதையெல்லாம் விமர்சனம் என்று வாந்தி எடுப்பது வருத்தமாய் இருக்கிறது நண்பரே..

மணிஜி said...

/இவ்வளவு 'தார்மீகக் கோபம்" கொண்ட தண்டோராவும் அகநாழிகையும் கொச்சைத்தனமான, ஒரு பத்திரிகையில் வெளியிடுவதற்காக வேசைப்பிழைப்பு செய்து வரும் என்னிடம் படைப்புகளைக் கொடுப்பது மட்டும் எந்த நீதியில் சேரும்?//

தலைவரே...நீங்கள்தான் அத்தாரிட்டி என்று நினைத்தேன்..ஒரு சராசரி அபிலாஷைதான் அது.பிரசுரமான பதிவர்களீன் கதை,கவிதை எல்லாம் நிச்சயம் மெரிட் அடிப்படையில் என்று நீங்கள் சொல்கிறீர்களா?விவாதம் விமர்சனத்தை பற்றித்தான்...

மணிஜி said...

அகநாழிகை...நீங்கள் என்ன புருட்டஸா?

மணிஜி said...

/பாம் வைக்கறவன்லாம் கெட்ட முஸ்லீமகள்் ... பாவம் பொழைப்புக்காக பாம் விக்கறவன் அப்பாவி இந்து!

அவனைப்போய் திட்டிறீங்களே சுகுணா!//

நோன்பு “கஞ்சி”குடிச்சாச்சா?
போலி செக்யூலரிசம்

மணிகண்டன் said...

***
நீரஜா என்னும் பார்ப்பனத் தொகுப்பாளினியைத் தேர்ந்தெடுத்து நீதி சொல்கிறீர்கள்
***

படத்தில் வந்த பெயர் நடாஷா.

ஆதலால் கிறிஸ்துவ பெண் என்பதால் புகை பிடிப்பதாக காட்டி கமல் பார்ப்பனீயத்தை காட்டினார் என்று சொல்லித் திட்டுங்கள்.

ஜால்ராக்களும் வந்து வாழ்க கோஷம்
எழுப்புவார்கள்.

நாட் குட் அகநாழிகை.

பதி said...

சாட்டையடி வரிகள்.....

சி. சரவணகார்த்திகேயன் said...

tat's a good review.

Thamira said...

ஸாரி சுகுணாதிவாகர், உங்களின் பிற பதிவுகளை நான் வாசித்ததில்லை. இதைப்பற்றி மட்டுமே சொல்வதானால்..

ஒரு கற்பனையான ஃபேண்டஸி வகை படத்துக்கு இத்தனை அர்த்தங்களை கற்பிக்கமுடியுமா என்பது ஆச்சரியம் தருகிறது. நான் கேள்விப்பட்டிருக்கிறேன், குறியீடுகள், உள்நோக்கங்களை விளக்கும் திறன் வாய்ந்த நபர்கள் வலையுலகில் இருக்கிறார்கள் என்று. இப்போதுதான் பார்க்கிறேன். இது எப்படி நீண்ட வாசிப்பினால் கைவரப்பெறுவதா அல்லது இயற்கையிலேயே இருக்கும் திறனா?

உண்மையில் உங்கள் சமூக அக்கறை என்ன? இது போன்ற படங்களால் ஸ்லோ பாய்ஸன் போல மக்கள் மனம் இந்துத்வா நோக்கி கொண்டுசெல்லப்படும் என்பதா? அப்படியெல்லாம் நீங்கள் பயப்படத்தேவையில்லை. அதையெல்லாம் கமல் குண்டூசி முனையளவு கூட செய்யமுடியாது.

சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயாடிவிக்கள், ரெட்ஜெயண்ட் மூவிஸ், விகடன் டாக்கீஸ்கள், விகடன், குமுதம், குங்குமம்கள், விஜய், அஜித், விஷால்கள், விஜய்காந்த, சரத்குமார்கள், தரணி, பேரரசு, எஸ்ஜேசூர்யாக்கள், தினமலர், தினகரன்கள் etc.. etc., இவர்களையெல்லாம் மீறி தமிழ் ரசிகன் ஒரு படத்தைப்பார்த்து தன் தத்துவார்த்தத்தை மாற்றிக்கொள்ளும் நாள் பக்கத்தில் இல்லை நான் எண்ணுகிறேன்.

உங்களைப்போலவே சிந்திக்கும் ஜீவிகளுடன் பகிர்ந்துகொள்ளத்தான் இவற்றை எழுதுகிறீர்கள் என்றாலும் அது தேவையற்ற காரியமே. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே இதுமாதிரி அவர்களே சிந்தித்துக்கொண்டுவிட்டிருப்பார்கள்.

அதிர்ச்சி அலை ஏற்படுத்தி ஆர்டினரி ரசிகனை கலவரப்படுத்தும் நோக்கம் என்றாலும் எத்தனை ஆர்டினரிகள் உங்கள் பதிவை படித்துவிடப்போகிறார்கள் என்றும் தெரியவில்லை. என்ன பிரபல இதழிலா வெளியிட்டுவிட்டீர்கள்?

2002, 1998 என்ற கற்பனைக்கு (கற்பனை என்பதற்கெல்லாம் எதிர் கேள்வி கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன். வரலாற்றுப்புதினங்கள் வாசித்திருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்) அர்த்தம் காண்பது, மோகன்லால் ஆரிஃப் வசனத்தை சரியான உணர்வில் எடுத்துக்கொண்டது, குறியீடுகளை இனம் காண்பது, ஒரு பெண்ணின் துயரத்துக்காக வருந்தும் 'காமன் மேனை' தலித் கொடுமைகளுக்காக ஏன் வருந்தவில்லை என சரியாக கொக்கிப்பிடி போட்டது என இன்னும் பல அரிய பணிகளை செய்திருக்கிறீர்கள்.

உச்சமாக 'காமன் மேனி'ன் யோசனைக்குக்கூட அர்த்தம் கண்டுகொண்டீர்கள் பாருங்கள்..// லேசாக முறுவலித்தபடி யோசனையில் ஆழ்கிறார் ‘காமன்மேன் கமல்’. அர்த்தம்... ‘போயும் போயும் துலுக்கனையும் கூட அனுப்பிச்சிரூக்கீங்களேடா’.// சத்தியமாக சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.. அங்கே நிற்கிறீர்கள் நீங்கள். இதைப்போலவே தமிழ்ரசிகனையோ அல்லது தமிழனையோ கூட தத்துவ விழுங்கல் செய்ய காத்திருக்கும் யாராவது படைப்பாளிகள், படைப்புகளை கூறு போட்டு அவர்களை காத்தருள்வீர்கள் எனவும் நம்புகிறேன். வாழ்க.! தொடர்க உங்கள் பணி.

அப்புறம் கடைசியாக ஒன்று. நீங்கள் பயன்படுத்திய தொனி/சொற்களைவிட (அனானிகள் தவிர்த்த) பின்னூட்டங்கள் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என்றுதான் எண்ணுகிறேன்.

Asadha said...

நான் படம் பார்க்கவில்லை. மணிரத்னம், கமலஹாசனைப் போன்ற அரைவேக்காட்டுச் சித்தாந்திகளின் படங்களை பார்க்காமல் விடுவதன் மூலம் பெரும் மனச்சோர்வுக்கும் ஆற்றாமைக்கும் ஆளாவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உங்கள் விமர்சனம் சரியாயிருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

Asadha said...

நான் படம் பார்க்கவில்லை. மணிரத்னம், கமலஹாசனைப் போன்ற அரைவேக்காட்டுச் சித்தாந்திகளின் படங்களை பார்க்காமல் விடுவதன் மூலம் பெரும் மனச்சோர்வுக்கும் ஆற்றாமைக்கும் ஆளாவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உங்கள் விமர்சனம் சரியாயிருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

Dr.Sarav said...

do u really need to do this ??? u r really suffering from MI.. consult a psychiatrist..

உங்களுடன் said...

yanna solluringa......... orthan oru film pannum pothu one or two mistake varuvathu thavirkamudiyathu. kamalahassan costly communist nu sollalam. but oru actor ha ippadi vimarcippathu sariya

Sanjai Gandhi said...

நான் கமலின் தீவிர ரசிகன் தான். ஆனால் இந்தப் படத்தின் பல காட்சிகள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த பெஸ்ட் பேக்கரி & கோவை குண்டுவெடிப்பு லின்க்.. கொடுமை.. இது அரசியல் பேசும் சிறுபிள்ளைக்கும் தெரியும். இரண்டும் தொடர்பில்லாத சம்பவங்கள் என்று. 3வது மனைவி இறந்துவிட்டதாக சொல்லும் போது அதான் இன்னும் 2 இருக்கே என்று பதில் சொல்ல வைப்பது என்ன மாதிரி நகைச்சுவை என்று புரியவில்லை.
கமல் பொறுப்பில்லாமல் இருந்து விட்டு, தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போனதை சாடியிருபப்து கண்டிக்கத்தக்கது.

மற்றபடி, மேல்தட்டு பொதுப் புத்தியுடன் தான் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ஆதிக்க சாதிகளின் சாயத்தை பூசலாமே தவிர பார்ப்பனர்களை மட்டுமே குறை சொல்ல வேண்டியதில்லை. மற்றவன் எல்லாம் ரொம்ப யோக்கியமாவா இருக்கான்? மதம் என்று வரும் போது யாரும் யாருக்கும் சளைத்தவர்களாக இருப்பதில்லை. இந்துக்களை எதிர்ப்பது மட்டுமே மதசார்பின்மை என்ற திராவிட கலாச்சாரத்தில் வாழ்வது சாபக் கேடு. சங்க பரிவார பயஙகரவாதிகளும் அல் உம்மா , ஹிஸ்புல் பயங்கரவாதிகளும் ஒன்று தான்.

ROSAVASANTH said...

1. சுகுணா விகடனில் வேலைபார்த்தபடி பார்பனியத்தையும் இந்துத்வாவவையும் விமர்சிப்பதை தாக்கி இங்கே எழுதியிருந்தார்கள். எனக்கு இந்த விஷயத்தில் சுகுணாவின் அணுகுமுறை சரியானததாகவே தெரிகிறது. அதிகாரத்தை விகடனும், இந்தியா டுடேயும் கையில் வைத்திருக்கும் போது, அவர்களை பயன்படுத்தி கொள்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி எழுத்துக்கான/குரலுக்கான வெளியாகவும் பயன்படுத்துவதுதான் சரியான அணுகுமுறையாக இன்று இருக்க முடியும். ̀கொள்கையில்லாமல் இருப்பவர்கள்' சமூகத்தில் எப்படி வேண்டுமானாலும் கொழித்து வாழலாம், கொள்கை கொண்டவர்கள் எந்த சமரசமும் செய்யாமல் வருந்தி சாகவேண்டும் என்று காலத்துக்கும் யதார்த்தத்துக்கும் ஒவ்வாமல் (அதே காரியங்களை வேறு இடத்தில் அவர்களும் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு முட்டுகொடுத்தபடி) சிலர் பேசிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது சமரசத்தை உள்ளடக்கியே இருக்க முடியும். சமரசம் மற்றும் தனக்கான வெளியாக பயன்படுத்துதல் இந்த முரண்பாட்டுக்கான சமன்பாட்டில்தான் வாழ்வதின் சிக்கல் உள்ளது. இந்த சிக்கலை கையள்வதுதான் நடைமுறை அரசியலாக இருக்க முடியும். அது குறித்து நெகிழ்வுதன்மையுடன் பேசுவதுதான் வேலையாக இருக்கமுடியும். (ஆனால் ஞாநி ̀இவ்வளவு நாள் குமுதத்தை திட்டிவிட்டு இப்போது அங்கே போய் எழுதுவது என்ன அயோக்கியத்தனம்' என்று சுகுணா கூறும்போதுதான் பிரச்சனை வரும்.)

2. உன்னைப்போல் ஒருவன் இன்னும் பார்க்கவில்லை. கமலை பற்றிய என் தொடர்ந்த அவதானிப்பின் படி சுகுணாவின் விமரசனத்தில் நியாயம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கமலின் ஹேராம் (எடுக்கப்பட்ட/முன்வைக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக) இந்துத்வா சார்பு திரைப்படம் என்று நான் நினைத்தாலும், கமலை இன்னமும் ஹிந்துத்வா பாப்பான், பூணுல் என்ற ஒற்றை வார்த்தைகளை வைத்து நான் விளங்கிக் கொள்ளவில்லை; விளக்கிக்கொள்ள இயலவில்லை. பிரச்சனை இன்னும் சிக்கலானது, இன்னமும் சரிவர விளங்காதது என்று நினைக்கிறேன்.

3. அ.மார்க்ஸுக்கு ஆதரவாக எங்கே வேண்டுமானலும் அவுட் ஆஃப் த காண்டெக்ஸ்டில் சுகுணா எழுதாலாம், பரவாயில்லை. ஆனால் அதில் இன்னும் கொஞ்சம் அறிவு நேர்மையையும் சேர்த்தால்தான் உங்கள் மற்ற எழுத்துக்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளும் நிலைவரும். (நான் யமுனா ராஜேந்திரனை விரும்பி வாசிப்பவன் அல்ல, இதுவரை அவருக்கு ஆதரவாக கருத்து எதுவும் சொன்னதில்லை, தாக்கி மட்டுமே எழுதியிருக்கிறேன் என்று சும்மா சொல்லிக்கொள்கிறேன்.)

அ.மார்க்ஸ் ̀நம் எழுத்தாளர்களுக்கு சமுக பிரச்சனை சார்ந்த அக்கறை/அறிவு இல்லை' என்று தன் சொந்த அறிவிலேயே சொல்லியிருக்கலாம். இந்த மாபெரும் கருத்திற்கு போயும் போயும் சாருநிவேதிதாவை மேற்கோள் காட்டியதால், அதுவும் ஈழப்பிரச்சனை பற்றி பேசும் போது காட்டியதால் யமுனா அது குறித்து எழுதியுள்ளார். சாருவின் எழுத்துக்களில் (அ.மா. முன்வைக்கும் அரசியல்களில் இந்த கெட்டவார்த்தை, பாலியல், பாலியல் தொழிலாளி முத்திரம் போவது போன்றவை தவிர்த்து) மற்ற எந்த சமூக பிரச்சனைகள் குறித்து அறிவும் அக்கறையும் வெளிப்படுகிறது என்பது வேறுபுறம் இருக்கட்டும். ஈழம் பற்றி மிக மோசமான புரட்டுக்கருத்தையும், அச்சு பிச்சு கருத்துக்களையும், எல்லோருக்கு தெரிந்த கருத்துக்களை வெட்டி ஒட்டியது தவிர அவரிடம் வெளிப்பட்டது வேறு என்ன? சுகனையும் மிஞ்சி ̀இந்திய ராணுவத்தால் வல்லுறவு செய்ய பட்ட சிங்கள பெண்களுக்கு பழிவாங்க இலங்கை ராணுவத்தில் சேர்ந்ததான' கட்டமைத்ததை தவிர வேறு சீரியஸ் கருத்தை வெளிப்படுத்தாத நபரின் போலியான ஒரு கருத்தை மேற்கோள் காட்டிய முட்டாள்த்தனத்தை பற்றி யமுனா கேள்வி எழுப்பியுள்ளார். அதை ஒரு சிஷ்ய பாவத்தில் நீங்கள் எதிர்கொண்ட அரசியல் மொண்ணைத்தனம்தான் உங்களிடம் பல இடங்களில் வெளிப்படுகிறது. உங்களை சீரியஸாக எடுத்து கொள்வதில் நெருடலாக இருக்கிறது.

குசும்பன் said...

சுகுணாவுக்கு ஒரு கூளிங் கிளாஸ் பார்சல்!!!! (அப்படியாச்சும் பார்வை மாறுமுல்ல!!!)

குசும்பன் said...

ஆதி இவ்வளோ பெரிய பின்னூட்டம் போட்டு உங்க நேரத்தை வீண் அடிச்சு இருக்கவேண்டாம்:)) ஏன்னா பலன் பூஜ்ஜியம் தான்:)))

வால்பையன் said...

இந்த படமாவது பார்க்கலாம்னு நினைச்சேன்!

Anonymous said...

// இதில் தேவையில்லாமல் கரம்சந்த் காந்தியையும் இழுத்திருக்கிறார். பாகிஸ்தான் பிரிவினை தனக்கு உவப்பு இல்லை என்றபோதும் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்க வேண்டிய நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர் கரம்சந்த்.//

யோவ் அதெல்லாம் செஞ்சது அவரோட புள்ள மோகன்தாஸ். வரலாறு நெம்ப முக்கியம்!

கண்றாவி! said...

நான் படம் பார்க்கவில்லை
ஆனால் உங்கள் விமர்சனம் சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது

படம் பார்த்துவிட்டு எழுகிறேன்

சுகுணாதிவாகர் said...

அகநாழிகை

உங்கள் பின்னூட்டததை நான் வெளியிட விரும்பவில்லை. அது ஒரு வகையில் சுயநலமாகக் கூட இருக்கலாம். ஆனால் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் எல்லாம் வாஜ்பாய் பிரதமர் ஆனால் இந்தியாவை விட்டு வெளியேறி விட வேண்டும் என்கிற வகையான உங்கள் உளறல்களில் எனக்கு உடன்பாடில்லை. மேலும் பார்ப்பனர்களைத் திட்டினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? எந்த அரசியலும் இல்லாது மறைமுகமாக ஆதிக்க அரசியலுக்குத் துணைபோய்க் கொண்டே கொஞ்சம் நகுலன், கொஞ்சம் மௌனி, கொஞ்சம் சு.ரா, அப்புறம் சுஜாதா என சேர்த்துப் பிசைந்து செய்து முடிக்கிற இலக்கியவாதிகள் மீது எனக்கு பெரிதாய் நம்பிக்கை இருப்பதில்லை. அனேகமாய் நீங்கள் நடத்தப் போகும் சிறுபத்திரிகை மணிக்கொடியை விட மோசமானதாகத்தான் இருக்கும் என்பது எனது7 யூகம். எப்படியாயினும் வாழ்த்துக்கள்.

சுகுணாதிவாகர் said...

தண்டோரா,

அந்த உலக சினிமா திரையிடல் உரையாடலுக்கும் அதிஷாவுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அந்த உரையாடலில் இருந்த இன்னொரு நபர் பைத்தியக்காரன். அது ஜாலியாக அடித்த ஒரு கமெண்ட். என்னுடைய விமர்சன பூர்வமான கட்டுரைகள் எனது மனசிலிருந்து வருபவைதான் என்பதைத் தொடர் வாசகர்கள் அறிவார்கள். மேலும் இனிமேல் சர்ச்சைகள் மூலம் பப்ளிகுட்டி பெற வேண்டும் என்னும் தேவையும் எனக்கில்லை. உங்கள் காலத்தின் முன்பு நானும் ஒரு பிரபல பதிவர்தான் தண்டோரா. மேலும் லக்கியை விமர்சித்து பப்ளிசிட்டி தேட வேண்டிய அவசியமும் கிடையாது. அப்படி சொல்வதை லக்கியும் நம்ப மாட்டார். நாம் பதிவில் விமர்சிக்கிறோம் என்பதற்காக நேரில் பார்க்கும்போதெல்லாம் ஜாலியாக சிரித்துப் பேசாமல் கஞ்சி போட்ட காக்கி விறைப்போடு இருக்க வேண்டும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை.

/ செய்வதும்,சொலவதும் கிட்டதட்ட ஒன்றாக இருக்கலாமே என்ற ஆதங்கம்தான்./

இதை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசோதிக்க முயறியுங்கள். நன்றி.

சுகுணாதிவாகர் said...

தகவல் பிழைக்கு மன்னியுங்கள் மணிகண்டன். கமல் உங்களை ரட்சிப்பாராக!

சுகுணாதிவாகர் said...

தாமிரா,

/உங்களின் பிற பதிவுகளை நான் வாசித்ததில்லை./

நல்லது, உங்களுக்கோ, எனக்கோ.

/அதையெல்லாம் கமல் குண்டூசி முனையளவு கூட செய்யமுடியாது. /

உங்களுக்குத் தெரியுமா தாமிரா, தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் நடந்த பல கிராமங்களில் ஆதிக்க சாதிக் கள்ளர்கள், 'போற்றிப் பாடடி மண்ணே" பாடலைப் போட்டு தலித்துகளின் சுயமரியாதையைச் சீண்டினார்கள், அதனால் கலவரங்கள் விளைந்தன என்று. அறிவுஜீவிகளுக்காக, ஆர்டினரி மற்றும் ஸ்பெஷல் வாசகர்களுக்காக என்றெல்லாம் என் எழுத்தின் நோக்கத்தைப் புலனாய்வு செய்கிற மட்டமான வேலையை நிறுத்துங்கள்.நான் எவளு/னுக்காகவும் எழுதவில்லை. என் குரலைப் பதிவு செய்கிறேன். அதிலுள்ள நியாய/அநியாயங்கள் மட்டும் பேசுங்கள்.

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது தண்டோரா, சொல்லுக்குப் பின்னால் மட்டுமல்ல, மௌனங்களுக்கும் புன்னகைக்கும் கணநேர யோசிப்புக்கும் இப்போது நீங்கள் போட்ட பின்னூட்டத்திற்கும் நான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் பதிலுக்கும்.

உங்கள் மேலோட்டமான புரிதலுக்கு நன்றி.

சுகுணாதிவாகர் said...

/kamalahassan costly communist nu sollaலம்./

நல்ல நகைச்சுவை. அப்படியே மலிவுவிலை கம்யூனிஸ்ட்கள் யார் என்பதையும் சொல்லி விட்டால் நல்லது.

சுகுணாதிவாகர் said...

குசும்பன்

பார்வைகள் மாற வேண்டியது எனக்கு அல்ல. நீங்கள் கமலுக்குக் கூலிங் கிளாஸ் அனுப்பவும் முடியாது. ஏனெனில் கறுப்பு, சிவப்பு, காவி என விதம் விதமான கூலிங்கிளாஸ்களை அவரே வைத்திருக்கிறார். எனக்கு உங்கள் எழுத்துக்கள் பிடிக்கும். ஆனால் ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தில் நீங்கள் குசும்பு பண்ண நினைத்தால் எனக்குக் கோபமும் வரும். குறைந்தபட்சம் பதிவில் நான் பேசிய விஷயங்களுக்கு நியாயமான மறுப்பைச் சொல்லவும். அல்லது....

முத்துகுமரன் said...

படத்தின் விமர்சனத்தை பற்றியதல்ல இப்பின்னூட்டம். கீற்றுவில் வந்திருக்கும் கட்டுரைகள் என்னவோ வெறுமனே அ.மா வை அர்ச்சிக்க எழுதப்பட்டது மட்டுமல்ல. அ.மார்க்சின் புதுவிசை கட்டுரைக்கான எதிர்வினைகளே! அது பாலமுருகனின் கட்டுரையாகட்டும், முருகவேளின் கட்டுரையாகட்டும். அ.மார்க்ஸ் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித பிம்பம் அல்ல என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எதிர்வினைகள் என்பது உரையாடலின் தொடர்ச்சியே. அதை கேலி செய்வது போன்றும் அ.மார்க்சிற்காக பரிதாபப்படும் தொனியும் இருக்கிறது. ஈழப்போராட்டம் எல்லா வகைப் பூனைக்குட்டிகளையும் வெளியே இழுத்துப்போட்டிருக்கிறது. புலியிலிருந்து வெளிவந்து பூனைகளை பேசுவதை தவறென்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்

சுகுணாதிவாகர் said...

கரம்சந்த் என்று இங்கே குறிப்பிட்டது காந்தியைத்தான் பாஸ்!

நண்பர் மூர்த்தி தந்தையின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். எனது அனுதாபங்களை மூர்த்தியிடம் தெரிவிக்கவும்.

மணிகண்டன் said...

***
தகவல் பிழைக்கு மன்னியுங்கள் மணிகண்டன். கமல் உங்களை ரட்சிப்பாராக!
***

ஆமன் !

அது தகவல்பிழை மட்டும் அல்ல சுகுணா. எவ்வளவு பதட்டத்துடன் தாங்கள் இந்த படத்தை அணுகி உள்ளீர்கள் என்பதை காட்டும் வாக்கியம். முதலில் நீரஜா என்று பெயர் வைத்தால் பார்ப்பன பெண் என்று அனுமானித்தது அடுத்தது நீரஜா என்ற பெயரை கற்பனை செய்து பார்ப்பனீயம் பார்த்தது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தண்டோரா மற்றும் வாசுதேவன் செய்திருப்பது வன்முறை. தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் சமரசம் செய்து கொள்ளவேயில்லையா என்பதைக் கேட்டுக் கொண்டால் இப்படியான கேள்விகள் வராதென்று நினைக்கிறேன். என்னய்யா ஒருத்தன் பட்டினி கிடந்து சாகனும்னு சொல்றீங்களா? பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது பதிவிலே எழுதப்பட்ட விஷயங்கள்தான் என்று திடமாக நம்புகிறேன்.

தாமிரா, குசும்பன், மற்றும் சிலர்... நீங்கள் செய்திருப்பது வேறு மாதிரியான வன்முறை.

சுகுணா, நீங்கள் எழுதியிருக்கும் சில விஷயங்களோடு (அ.மா, மணிக்கொடி) எனக்கு உடன்பாடில்லையென்ற போதும், இந்த விஷயத்தில் உங்களை முழு முற்றாக ஆதரிக்கிறேன். தொடர்ந்து இது போன்று நீங்கள் எழுத வேண்டுமென்பதே என் ஆசை.

TBCD said...

இப்படியும் ஒரு பார்வை இருக்கலாம் என்று கூட பின்னுட்டிய பலரும் யோசிக்கவில்லையோ.

மதி.இண்டியா said...

ஏண்ணே , பதிவு பதிவா போய் என்னை எல்லாரும் திட்டறாங்க ஓடியாங்கன்னு கூப்பிட வேண்டிய நிலமை வந்துச்சு ?

ஒரேயடியாக அ.மார்க்ஸ் போதை ஏறிப்போச்சு , அந்தாளுக்காவது மாச பேமண்ட் அரபியாவிலிருந்து வருது , பயங்கரவாதிகளை எல்லாம் நல்லவங்கன்னு சொல்றார் ,

ஆனந்தமா பேமெண்ட் வாங்கீட்டுதான இருக்கீங்க ( அங்க சேந்தாலும் சேந்தீங்க , பதிவு போடகூட நேரமில்லாம போச்சே)

உங்களுக்கு ”வளரு”தான் சரி...

மணிஜி said...

/அந்த உலக சினிமா திரையிடல் உரையாடலுக்கும் அதிஷாவுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அந்த உரையாடலில் இருந்த இன்னொரு நபர் பைத்தியக்காரன். அது ஜாலியாக அடித்த ஒரு கமெண்ட். என்னுடைய விமர்சன பூர்வமான கட்டுரைகள் எனது மனசிலிருந்து வருபவைதான் என்பதைத் தொடர் வாசகர்கள் அறிவார்கள். மேலும் இனிமேல் சர்ச்சைகள் மூலம் பப்ளிகுட்டி பெற வேண்டும் என்னும் தேவையும் எனக்கில்லை. உங்கள் காலத்தின் முன்பு நானும் ஒரு பிரபல பதிவர்தான் தண்டோரா. மேலும் லக்கியை விமர்சித்து பப்ளிசிட்டி தேட வேண்டிய அவசியமும் கிடையாது. அப்படி சொல்வதை லக்கியும் நம்ப மாட்டார். நாம் பதிவில் விமர்சிக்கிறோம் என்பதற்காக நேரில் பார்க்கும்போதெல்லாம் ஜாலியாக சிரித்துப் பேசாமல் கஞ்சி போட்ட காக்கி விறைப்போடு இருக்க வேண்டும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை.//


இதை நான் மறுக்கிறேன்..அங்கு சிவராமன் இல்லை.நீங்கள்தான் நான் குறிப்பிட்ட நபர்கள்தான் இருந்தார்கள்..என் பதிவில் உங்களுக்கு இட்ட பதிலகளில் தெரியும் என் நேர்மை...

Gokul said...

அட என்ன சார்,

இந்த படத்தை எத்தனை பேரு பார்த்துர போறாங்க , பாட்டு கிடையாது, வடிவேலு காமெடி கிடையாது.. ஐட்டம் சாங் இல்லை, ஓபனிங் பிரமாண்டமா இல்லை , B/C சென்டர்ல சுத்தமா ஓடாது , ஏ செண்டர்ல மட்டும் ஓடக்கூடிய படத்திற்கு இவ்வளவு பெரிய விமர்சனமா , ஒரு விஜயகாந்த் / சரத்குமார் / விக்ரம் /விஜய் போன்றோர் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை கூட கமலால் ஏற்படுத்த முடியாது , அவர் படத்திற்கு நீங்கள் எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறீர்கள் என்று தெரியவில்லை? உங்களை அறியாமல் நீங்கள் கமலுக்கு ரசிகராகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் :-)

Karthikeyan G said...

// சுகுணாதிவாகர் said...

குசும்பன்

பார்வைகள் மாற வேண்டியது எனக்கு அல்ல. நீங்கள் கமலுக்குக் கூலிங் கிளாஸ் அனுப்பவும் முடியாது. ஏனெனில் கறுப்பு, சிவப்பு, காவி என விதம் விதமான கூலிங்கிளாஸ்களை அவரே வைத்திருக்கிறார். எனக்கு உங்கள் எழுத்துக்கள் பிடிக்கும். ஆனால் ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தில் நீங்கள் குசும்பு பண்ண நினைத்தால் எனக்குக் கோபமும் வரும். குறைந்தபட்சம் பதிவில் நான் பேசிய விஷயங்களுக்கு நியாயமான மறுப்பைச் சொல்லவும். அல்லது....//

Superru..

// சுகுணாதிவாகர் said...
தகவல் பிழைக்கு மன்னியுங்கள் மணிகண்டன். கமல் உங்களை ரட்சிப்பாராக!//

Attakaasam!!!


இந்த பதிவிலுள்ள பலரின் பின்னூடங்கள் அவர்கள் பற்றி என்னில் இருந்த பிம்பங்களை மாற்றியுள்ளது. thanks for the post. :)

ILA (a) இளா said...

//மத அடையாளம் இல்லை//
I guess, you have nt watched the movie indepth. it very carefully mentioned that kamal is muslim. watch or listen the conversation happens with Kamal and kamal's wife before the 2 second call to Mohanlal.(She ask whether he say's Insah Allah) I dont think any brahmin say insah-allah.

2. he gasps when Mohan lal Says Arif Khan Along with them..

ILA (a) இளா said...

ஆதி இவ்வளோ பெரிய பின்னூட்டம் போட்டு உங்க நேரத்தை வீண் அடிச்சு இருக்கவேண்டாம்:)) ஏன்னா பலன் பூஜ்ஜியம் தான்://

முசாராப்பே பூணூல் போட்டாலும் சுகுணாவின் கண்ணுக்கு இந்துத்துவாதான் தெரியும்.

Anonymous said...

do you seriously believe the garbage coming out of you? I am truly scared if so!

yamuna rajendran said...

suguna diwakar-
first stop this nonsense work of propaganda on behalf of a.marx. it is awkward. i saw all the films of nihalani including 'drokal'. i wrote a full article on his whole films. in drokal nihalani did not specifically talk about naxal groups.he is talking about the politics of armed groups in general. i saw 'kurithuppunal' and and yes, i believe some relevance of eelam politic in it,i have my 'scenic' logics for that and i compared it to drokal in two instances, not in one article. please try to read both articles carefully. and i saw 'a wednesday' and wrote an article on films of terrorism. what a pity, your asan's and your's favourate writer 'charu' wrote postively aobut 'a wednesday' and celebrate it is as a best film on terrorism.go and read it in uyirmmai some time back. i am the one who wrote that a wednesday is a facistis film in the same uyirmmai. i am saying the same thing about 'unnai pol oruvan'.ok, tell me your views and please 'thelivaga' pathil sollungal for rosavanth's comments, does 'ipkf singala pengalaiya paaliyal baladthkarathukku utpadithiyathu?' suguna, try to be sensible. do not write bull shit.yamuna rajendran

Suresh ET said...

சுகுணா,

'உன்னை போல் ஒருவன்' நான் இன்னும் பார்க்கவில்லை, பார்பேன் என்றும் தோன்றவில்லை. ஆனால 'A Wednesday' பார்த்தபின், அப்போதே அது குறித்து எழுதியும் உள்ளேன். அதை இங்கே வாசிக்கலாம்: http://englishtamil.blogspot.com/2009/03/wednesday-terrible-idea.html

உங்கள் விமர்சனம் பெரும்பாலும் என் கருத்துக்களோடு ஒட்டியே உள்ளது. குறிப்பாக இது: "The truth is, there is no 'common man.' There are those who are not Dalit, not poor, not illiterate, not political, and not silenced. By virtue of not being any of them he's already immune to their social malaise. Their misery doesn't seem to trouble him. The middle class 'common man' has little in common with majority of his fellow humans. 'Common man' is the last thing he should call himself."

அனால் இங்கே நான் கூற விளைந்த ஒரு விஷயம் யமுனா ராஜேந்திரன் குறித்தது.
நான் அதிகம் தமிழ் பதிவுகளை படிப்பதில்லை -- ஆகையால் தமிழ் பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கிடையே வரும் மோதல்கள் குறித்து ஆழமான் புரிதல் இல்லை. இருந்த போதும் நான் கவனித்த ஒன்று: இங்கே பலரும் தன் இடதிசாரி/மார்க்சிய/கட்டுடுத்தைல் இத்யாதி சித்தாந்தங்களின் அடிப்படையில் சீரான கருத்துக்களை முன்வைக்குறீர்கள் (not always, but on and off). அனால் ஒரு வகையான 'selective application/honesty' இவர்களைப்/உங்களைப் பீடிதிருப்பதாகவே உணர்கிறேன். யமுனா குருதிப் புனல் பற்றிக் கூறியுள்ளதாக நீங்கள் சொல்வதை அப்படிதான் புரிந்து கொள்ள முடிகிறது (அதாவது, யமுனா சறுக்கி உள்ளார்).

ஏனென்றால் இதே யமுனா 'A Wednesday' திரைபடத்தை சரியாகவே இனம் காண்கிறார். அது பற்றி படிக்க: http://inioru.com/?p=2203. இந்தக் கட்டுரையை நீங்கள் படித்தீர்களா தெரியாது, படித்தும் குறிப்பிடவில்லை என்றால் அது நேர்மைக்குரைவே. (அந்தக் கட்டுரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்பது என் எண்ணம் அல்ல.)

அ மார்க்ஸ், வளர்மதி, ஷோபாசக்தி, தமிழவன், கீற்று இத்யாதி என்று பலர் தலைகளும் உருளும் கட்டுரைகளை படித்து கிறுகிறுத்துப் போயுள்ளேன். இவற்றில் நானே நேரடியாக தெளிவாக புரிந்து கொண்ட ஒன்று அ. மார்க்ஸ் நாகர்ஜுனன் மேல் ஆதாரம் இல்லாமல் சேற்றை வாரி அடிக்கிறார் என்பது மட்டும் (நான் நாகார்ஜுனனின் அணைத்து கட்டுரைகளையும் படித்து வருவதால் தப்பித்தேன். இல்லையென்றால் அங்கேயும் குழப்பம் தான்).

இங்கே பின்னூட்டம் இட்ட சிலர் விமர்சனத்தை பற்றி ஏதும் பேசாமல் வெட்டி வசை பாடுகிறார்கள் என்று நொந்து கொள்கிறீர்கள். புரிந்து கொள்ளக் கூடியது தான். அனால் நீங்களே இப்பதிவில் தேவை இல்லாமல் அ.மார்க்ஸ்சையும், யமுனாவையும் இழுத்தது ஒரு முன் மாதிரியாகிவிட்டது. இவ்விஷயத்தில் ரோசாவசந்த் கூறியுள்ளதையே நானும் வழிமொழிகிறேன்.

ILA (a) இளா said...

முதலில் ஒரு முஸ்லிமை தீவிரவாதியாக மட்டும் பார்க்கத்தெரிந்திருக்கும் உங்கள் தட்டையான எண்ணத்தை எண்ணிப்பாருங்கள். முஸ்லிமை தீவிரவாதியாக மட்டுமே எண்ணும் உங்கள் பின்நவீனத்துவத்தை என்ன சொல்வது. படத்தில் கமல் ஒரு இடத்தில் முஸ்லிமென காட்டி இருக்கிறார், ஆனால் எந்த இடத்திலும் அவர் இந்துவாக காட்டவே இல்லை. அப்புறம் எப்படிங்க நீங்க இந்துத்துவான்னு சொல்றீங்க. காரணம் உங்களுக்கு தனிமனிதனின் ஜாதிதான் தெரியும். இதுக்கு பேருதான் பகுத்தறிவா? திடீரென கமல் ஒரு பேட்டியில் அந்த வேடம் ஒரு முஸ்லிம் என்பதை தெளிவு படுத்திவிட்டால், உங்கள் குறுகிய மனதை/எழுத்தை எங்கே போய் வெச்சுப்பீங்க? உங்களுக்கு மட்டும் அவர் ஜாதி தெரிகிறது.. எங்களுக்கு படம்தான் தெரிகிறது. கெளம்புங்க காத்து வரட்டும்.

Anonymous said...

//உங்களுக்குத் தெரியுமா தாமிரா, தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் நடந்த பல கிராமங்களில் ஆதிக்க சாதிக் கள்ளர்கள், 'போற்றிப் பாடடி மண்ணே" பாடலைப் போட்டு தலித்துகளின் சுயமரியாதையைச் சீண்டினார்கள்//
நானும் இது போன்ற நிகழ்வுகளை கேள்விபட்டிருக்கிறேன், குறிப்பாக தலித் தோழர்களின் வீட்டு விழாக்களில் கூட "போற்றி பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே"..என துவங்கும் அப்பாடலை கட்டாயம் போட வேண்டும் என அழிச்சாட்டியும் செய்திருக்கின்றனர். மேலும் சினிமா பார்வையாளனிடம் ஒரு கருத்தை கட்டமைக்குமா? என்றால் நிச்சயம்; தமிழர்களின் பாசம், காதல், காமம் என எல்லாவற்றிலும் சினிமா முக்கிய பங்கு வகுக்கிறது.
-மொண்டி சப்பாணி.

மணிஜி said...

பத்து படிக்கும்போது
பெரியாரின் படத்தை
கட்டிபிடித்து தூங்கிய
சுகுணா..இன்னும்
நீங்கள் விழிக்கவே
இல்லை...
பெரியாரின் பதிவுகள்
என்னிடம் ஏராளம் உள்ளது
நீங்கள் அவர் கொள்கைகளில்
கடவுள் மறுப்பையும்
பிராமண எதிர்ப்பையும்
மட்டுமே???????

Anonymous said...

மொக்கை கவிதை தண்டோரா. இதுபோல எல்லாம் எழுதி உங்கள் போதாமையை நீங்களே பறைசாற்றி கழுத்தறுக்காதீர்கள்.

nagoreismail said...

"உங்களைப்போலவே சிந்திக்கும் ஜீவிகளுடன் பகிர்ந்துகொள்ளத்தான் இவற்றை எழுதுகிறீர்கள் என்றாலும் அது தேவையற்ற காரியமே. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே இதுமாதிரி அவர்களே சிந்தித்துக்கொண்டுவிட்டிருப்பார்கள்."

ஆதிமூலகிருஷ்ணன் சார், நீங்கள் சொல்வது உங்களின் பின்னூட்டத்திற்கும் பொருந்தும் தானே?

nagoreismail said...

தன் இனம் சாராதவர்களின் துயரங்களை ஆணவத்தோடு ரசித்து சிரித்து அநாயசமாக கேலி செய்யும் பண்பு ஒரு சாராரின் ஒட்டுமொத்த அனைவருக்கும் கை வந்த கலை.

அந்த சாராரில் ஒருவரான கமல்ஹாசன் எத்தனையோ முகமூடிகள் தரித்தாலும் கொண்டை வந்து காட்டி கொடுத்து விடும்.

நான் சொன்ன அந்த பண்பு தான் பெஸ்ட் பேக்கரி கொலைச் சம்பவம் குறித்த தனது மனைவியை பறிகொடுத்தவரிடம் 'ஒண்ணு தானே போச்சு' என்ற கேவலம்

Anonymous said...

படம் எல்லாம் நல்லா தான் இருந்துச்சு.. இந்துதுவாவும் இல்ல சந்துதுவாவும் இல்ல.. சும்மா பூதக்கண்ணாடிய வச்சு எதாவது பதிவு போடனுமேன்னு இப்படி கேவலமா ஒரு விமர்சனம்.. இப்போ என்னத்துக்கு இப்படி தொண்டை கிழிய கத்துறீங்க ?! இந்த controversy create பண்ணி பொழப்பு நடத்துற கூட்டம் எப்போ ஒழியுமோ தெரியல.. தூ !!

Anonymous said...

Thank god. Kamal didn't remake Aamir movie!

சென்ஷி said...

//உங்கள் காலத்தின் முன்பு நானும் ஒரு பிரபல பதிவர்தான் தண்டோரா. //

;-))))

இன்னமும் கூட நீங்கள் பிரபல பதிவர்தான் சுகுணா!

Anonymous said...

//கரம்சந்த் என்று இங்கே குறிப்பிட்டது காந்தியைத்தான் பாஸ்!
//

எந்த காந்தி? இந்திராவா இல்ல ராஜீவா?

Anonymous said...

podhaiyil dhan epavum blog eludhuvingala???

உண்மைத்தமிழன் said...

முழுசையும் படிச்சா ஒரு புல் டக்கீலாவை ராவா அடிச்ச மாதிரியிருக்கு..!

எதுக்கும் இருக்கட்டும்னு என் ஆஜரையும் தெரிவிச்சுக்குறேன்..!

சீனு said...

//உண்மையிலேயே ‘காமன் மேன்’ கண்ணீர் சிந்தியிருந்தால், இஸ்லாமியத் தீவிரவாதமும் வந்திருக்காது, நரேந்திரமோடியும் இன்னொரு முறை முதல்வர் ஆகியிருக்க மாட்டான்.//

:))

ஒரு பழைய வலைப்பதிவர் said...

பகுத்தறிவு பேசும் திராவிட நிர்மூடர்களே, பூனை கண்ணை மூடிக்கொள்வதால் உலகம் இருண்டுவிடாது. எல்லா துலுக்கர்களும் தீவிரவாதிகள் அல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை எல்லா தீவிரவாதிகளும் துலுக்கர்களே என்பதும் தான். பொது புத்தி என்று கேவலமாகப் பேசும் ரோசாவசந்த் போன்ற புத்திசாலிகள் பொதுவாக புத்தியற்றவர்களே என்று தங்கள் ஒவ்வொறி பேச்சிலும் எழுத்திலும் காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

உங்கள் மேலான "புத்தி"யைவிட வாழத்தேவையான பொது புத்தியே சிறந்தது.

Anonymous said...

wasteland

தமிழ்நதி said...

சுகுணா,

'உங்கள் அபிமான நடிகரின் இந்துத்வா முகமூடி கிழிந்துதொங்குகிறது"என்ற அழைப்பினை ஏற்று வந்து பின்னூட்டங்களையும் பதிவையும் படித்தேன். இங்கு வந்து பார்த்தால் அ.மார்க்ஸ்க்கு இப்பதிவில் தேவையற்று வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள். எனக்கு கமலில் அபிமானம்; உங்களுக்கு அ.மார்க்ஸ் இல் அபிமானம்:) அப்படியா?

'உன்னைப்போல் ஒருவன்'இன்னும் பார்க்கவில்லை. படம் குறித்து நீங்கள் சொல்லியிருப்பதன் சரி, பிழைகள் எனக்குத் தெரியவில்லை. (இப்படிக் கூர்ந்து பார்க்காவிட்டால் தெரியாமலும் போய்விடச் சாத்தியங்கள் உண்டு.) ஆனால், நீங்கள் அ.மார்க்ஸ் பற்றி இங்கே குறிப்பிட்டிருப்பது... ம்... ரோஸாவசந்த் சொன்னதுதான். மேலும், ஆதிமூலகிருஷ்ணனின் பின்னூட்டத்தோடு பெரிதும் ஒத்துப்போகிறேன்.

ஒரு பதிவிலிருந்து அவரவர்க்கு வேண்டியதைத்தானே எடுத்துக்கொள்கிறோம். கீற்று இணையத்தளம் பல தரமான கட்டுரைகளை வெளியிட்டு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் களமாக இருக்கிறது. அ.மார்க்ஸ் ஐத் திட்டும் கட்டுரைகளை வெளியிட்டார்கள் என்பதற்காக அதை இப்படி விமர்சித்திருப்பது சரியன்று என்பது எனது தனிப்பட்ட கருத்து.

மற்றபடி கருத்து முரண்கள்தானே... அது நண்பர்களுக்குள்ளும் வரலாம். நாம் எப்போதும் நண்பர்கள்தான்; நியாயங்களற்றுப் பேசாதவரையில்.

Ashok D said...

உங்கள் விமர்சனம் எனக்கு பிடிச்சுயிருக்குங்க. விரிவாய் பின்னொரு பொழுதில் நாம் சந்திப்போம். என்னயிருந்தாலும் கமல் நல்ல் காமடி நடிகர். அழகர். hardworker.

//இந்த பதிவிலுள்ள பலரின் பின்னூடங்கள் அவர்கள் பற்றி என்னில் இருந்த பிம்பங்களை மாற்றியுள்ளது. thanks for the post. :)//

கார்த்திக்கு ரிப்பீட்டு.

Shankar said...

சுகுணா திவாகர்...

உன்னைப் போல் ஒருவன் படம் பார்க்கும்போதே, இந்தப் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் வரும் என்பதை உணர முடிந்தது...

நீங்கள் குறிப்பிட்ட அத்தனை குறைகளையும் அந்தப் படம் உள்ளடக்கியிருந்தது நிஜம்தான்.

என்னதான் கமல் பொதுவான பார்வைப் பார்க்க முயன்றாலும் கமல்ஹாஸனால் பிராமணியம், அதன் குறியீடுகளில் ஒன்றான சீனிவாஸ ராமானுஜம் போன்றவற்றிலிருந்து வெளியில் வரவே முடியாது என்பது உண்மையே.

இந்த மாதிரி படங்களை எடுக்க தொடர்ந்து கமல் முனைவதுதான் சமூக ஆபத்து. அவர் படங்களை இந்த சமூகம் பார்க்கிறதோ இல்லையோ... ஆனால் அந்தப் படங்களை தலையில் சுமந்து கொண்டு சேர்க்க வேண்டிய இடம் சேர்க்க நிறைய அப்பாவி கோயிந்துகள் காத்திருக்கிறார்கள்.

ஈழப் போரை ஆயுத வியாபாரம் என்று சித்தரித்த மணிரத்னம், குருதிப்புனல், உபோஓ மாதிரி அரைவேக்காட்டுப் படங்கள் எடுக்கும் கமல் போன்றவர்கள் சமூகத்தின் ஈரலை முழுக்க அழுகடிக்காமல் விடுவதில்லை என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்.

பார்ப்பணர் ஆதிக்கம் அல்லது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவனும்கூட இன்று அந்தப் பதங்களைப் பிரயோகிக்க தயங்குவதுதான் அவாள்களின் வால்களை ரொம்பவே துளிர்க்க்ச செய்துவிடுகிறது. இதைச் சொன்னால் மனநோய் என்பார்கள்.

நீங்கள் அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம். சமூகத்தின் நோயைத் தீர்க்க இந்த மாதிரி மனநோயாளிகள் நிச்சயம் தேவை... குளத்து மீன்கள் போல.

நன்று... நன்றி சுகுணா.

-ஷங்கர்

Anonymous said...

Eventhough I havent seen the film, I could say that your review portrays the true nature of Kamal's intentions and brought out the true side of the few bloggers.

- Hidha

Darren said...

Excellent post.

Darren said...

//ILA said...
திடீரென கமல் ஒரு பேட்டியில் அந்த வேடம் ஒரு முஸ்லிம் என்பதை தெளிவு படுத்திவிட்டால்,//

அது இதைவிட கொடுமை. முஸ்லீம்களிம் தீவிரவாதத்தைப் பார்த்து ஒரு முஸ்லீமே பொங்கிவிட்டான் என்று இந்துத்வா கொக்கரிக்கும்...

கடைநிலைத் தமிழா "உன்னனைப் போல் ஒரு(வன்)" முட்டாள் கிடைக்க கமலகாசன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ரவி said...

great post..

Anonymous said...

சரியான உளறல் இது
உனக்கு ஒசில் பிரியாணி வேண்டுமென்றல் போய் வங்கிக்கோ அதுக்காக இப்படி எல்லாம் எழுதக்கூடாது. நீ சொல்வது உண்மை என்றால் தீவிரவாதி எல்லாம் நல்லவர்கள் போலீஸ் காரன் எல்லாம் பொறுக்கிகள் அப்படித்தானே சொல்ல வாரே.

மோடி யா குஜராத்தில் ஆரம்பித்தான், அவனா ரயில் கொளுத்தினான். ஏன் அவனுக்கும் கோவம் வரக்கூடாதா?.உன் பைத்தியகரதனமான சிந்தனை பார்த்தல் நீ ஒரு மெண்டல் தான். உன் சிந்தனை படி பார்த்தல் இந்துக்கள் எல்லாம் கேனை.அவர்கள் ஒன்றுமே சொல்ல கூடாது செய்ய கூடாது.அப்படியா?.இன்டியா வில் யார் அதிகம் (99%) தீவிரவாதிகள். உனக்கு மூளை இருந்தால் சிந்தித்து பார். சும்மா பிரியாணிக்கும் கேக்க்கும் ஜால்ரா போடாதே.

முத்து said...

"நோன்பு “கஞ்சி”குடிச்சாச்சா?
போலி செக்யூலரிசம்"

good shot

"மயிரளவு விவாதம் கூட இதுக்கு தேவை இல்லை என்பது என் கருத்து.மொட்டையாய் உங்களுக்கு தோன்றுவதையெல்லாம் விமர்சனம் என்று வாந்தி எடுப்பது வருத்தமாய் இருக்கிறது நண்பரே.."

I agree with u

"ila said

உங்களுக்கு மட்டும் அவர் ஜாதி தெரிகிறது.. எங்களுக்கு படம்தான் தெரிகிறது. கெளம்புங்க காத்து வரட்டும்.
முசாராப்பே பூணூல் போட்டாலும் சுகுணாவின் கண்ணுக்கு இந்துத்துவாதான் தெரியும்."

super


Anonymous Anonymous said...

மொக்கை கவிதை தண்டோரா. இதுபோல எல்லாம் எழுதி உங்கள் போதாமையை நீங்களே பறைசாற்றி கழுத்தறுக்காதீர்கள்

இது கூட உனக்கு வரவில்லை என்கிற வயிற்று எரிச்சல் .

Anonymous said...

Ungal parvai engalai yosikka vaithirukurirathu...really it's a nice post..keep it up.

Unknown said...

aganaligai nee pasama vilu padam parka po athan unagu sari muttall

சூனிய விகடன் said...

உன்னைப் பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது. இன்னும் ரெண்டு வருஷத்துல உன்னை கீழ்பாக் ஆஸ்பத்திரியில் வந்து பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சாப்பிடற இலைக்குப் பக்கத்துல மலத்த வச்சிருக்கிற மாதிரி இருந்தது உன் எழுத்துக்கள். ரூமை விட்டு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்....தெளிவு கிடைக்கும்

அஹோரி said...

நல்லா எலுமிச்சம் பழத்த வாங்கி தலைல தேச்சிகோங்க சாமி.

கோவபடாதீங்க ...

இப்படி ஜாதிவெறி பிடிச்ச ஆளுங்களும் இன்னும் இருக்கீங்களா?

இந்த வெறிக்கு என்ன ஊத்துரமாதிரி சில லூசுங்க போட்ட பின்னூட்டத்த சீரியஸ் ஆ எடுத்துகாதீங்க.

சாமீ .... எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க ....

Jeya said...

Goyyale..Padathai Padam madhirira parra vennai..Why u r comparing this in to that? If u r not marry Please don't marry anybody. If u r married...Pavam antha ...Dati.

Anonymous said...

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க. இந்த பதிவர் கூட நீங்க சொல்லுறத தான் சொல்லுறார்

http://manioosai.blogspot.com/2009/09/blog-post.html

Anonymous said...

ILA sonnadhukku unga badhil ethirparkiren suguna...

Kamal is a muslim, Arif Khan is a muslim, Mohanlal is a malayalee in the movie they all fight for ppl's life here irrespective of religion state and other differences.

1. The terrorist speaks about best bakery case is not a flaw but this is what a hindu or muslim terrorist does to incite fellow men belonging to religion citing a true incident and taking phony part in that so that they can be brainwashed.

2. The hindu terrorist karamchand is the worst bastard in the movie when compared to other three muslim terrorists. He does all these things for money. That is why kamal says u r signature is the best.

1 and 2 are not in wednesday and they are kamals thought and that clearly states his view..

Get a life suguna...

I need not justify kamal but just quoting u a dialogue from HaeRam.

Shahrukh says "Naan barath ellai ana naan ramoda thambi than" though a muslim says this, it comes from kamals pen..

All these things apart Kamal did not even match 1% of nasurudden shah acting nd the tamil version is just 10% of hindi version but the changes made by kamal made me like the movie.

Anonymous said...

சென்ட்ரல் ரயில் நிலைத்தில் கழிப்பறை முடியிருந்தால் கூட அது பார்பனர்கள் தான் காரணம் சொல்லும் போலி புரட்சிவாதிகளின் மற்றும் ஒரு விமர்சனம்,

++++++சரி, இந்த ‘காமன் மேன்’ எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்றால், ‘தீவிரவாதத்தைத் தீவிரவாதத்தால் எதிர்க்கிறாராம்’. ங்கோத்தா, இதைத்தானேடா அவனும் செஞ்சான்?++++

இஸ்லாமிய தீவிரவாதியா எந்த தீவிரவாததை எதிர்த்து போராடுகிறார்கள்? தம்பி கொஞ்சம் சொல்லுபா!!!

உன் ஜாதி வெறியை இங்கே காட்டாதே அது சரி பார்பனர்களை எதிர்த்து பேசும் போராடும் நீ மற்ற மேல் ஜாதியனரை எதிர்த்து போராட வேண்டியது தானே அப்படி செய்தால் தலை இருக்காது அதனால் தான் புரட்சி என்ற பெயரில் பிழைப்பு ஓடுகிறது உங்களுக்கு

Unknown said...

சுகுணா, இந்தத் திரைப்படத்தையும் அதிலுள்ள நுண்ணிய அரசியலையும் பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். ஆனால் அதே சமயம் நீங்கள் இக்கருத்துக்களை சொல்ல எடுத்துக் கொண்ட மொழியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

K.R.அதியமான் said...

நண்பர் சுகுணா,

இந்த படத்தின் வசனம் இரா.முருகன் ; இயக்கம் கமல் அல்ல, மூலக்கதையும் கமல் அல்ல. தயாரிப்பு மற்றும் நடிப்பு மட்டும் தான். படத்தில் சில அபத்தங்கள் உண்டுதான். ஆனால் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு கமல் ஒரு பார்பானிய, இந்துத்வாதி, போலி என்று ஒரு முடிவு கட்டக்கூடாது.

பத்தாண்டுகளுக்கு முன் கமல் "ஹே ராம்" படத்தை தயாரித்து, எழுதி, இயக்கினார். அதில் இந்துத்துவா மற்றும் பார்பனீயம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டது. அன்று கமலை இந்துத்துவாவாதிகள் மற்றும் பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். அப்படத்தில் பல இடங்களில் அப்பட்டமாக கமல் எழுதிய வசனங்களை மறுபடியும் பார்க்கவும். முக்கியமாக ஷாருக் கானுடன் நிகழும் உரையாடல்கள். பூனேவில் அந்த ராஜா காந்தியை கொல்ல சதி செய்யும் போது, பின் புலத்தில் ஸ்வாஸ்திக்காவும், இட்டரின் படமும். இவை போல பல நூறு குறியீடுகள்.

அன்று ஒரு மதவெறி எதிர்பாளரக, பார்பனீயத்தை எதிர்பாளராக தெரிந்த கமல் என்ன பச்சோந்தி போல மாறிவிட்டாறா என்ன ?

எம்மை போன்றவர்கள் அப்படி நினைக்கவில்லை. பல சமரசங்களை செய்து, பல அபத்தமான படங்களில் நடித்திருந்தாலும், கமலின் ஆளுமை தமிழ் சினிமா உலகில் முக்கியமானது என்று நினைக்கிறோம். அவரின் பங்களிப்பை மொத்தமாக பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் அது நிகழலாம்..

அ.மார்க்ஸ், ஈழப்போர் உச்சத்தில் இருந்த போது, தமிழகத்தில் எஸ்.எம்.எஸ் வழியாக பரவிய பொய்கள் பற்றி எழுதி கண்டனத்திற்க்குள்ளானார். பல தருணத்தில் அவர் இது போல சறுக்கியுள்ளார். நீங்களும் தான்.
இந்த சறுக்கல்களை மட்டும் வைத்துக்கொண்டு அ.மார்க்ஸ் சுத்த வேஸ்ட் என்று அவரின் மொத்த பங்களிப்பையும் நிராகரிக்க முடியுமா என்ன ? ஒரு ஒப்பிட்டிற்காக சொன்னேன்.

இந்த படத்தின் நுணுக்கங்களை இப்படி எல்லாம் "அர்த்தப்படுத்திக் கொள்ள" முடியும் என்று உங்க பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன்...

K.R.அதியமான் said...

தேவர் மகன் திரைபடம் பற்றி குறிப்பிட்டிருந்திர்கள். ஒரிஜினலாக அந்தப்படம்,
தேவர்களுக்கும், பள்ளர்களுக்கும் நட்ந்த சாதி மோதல்கள், அடக்குமுறைகள் பற்றி எடுப்ப‌தாகத்தான் இருந்தது. ஆனால் அப்படியே அப்பட்டமாக எடுத்தால், திரையரங்குகளையும், கமலையும், இரு தரப்பினரும் கொளுத்தும் அபாயம் இருந்ததால், ஒரு தேவர் குடும்பத்தில் அண்ணன் தம்பி பகையை சொல்லி, அதன் முலம் யாதார்த்தை மறைமுக சொல்ல முயன்றனர். ஆனாலும் அந்த பாடல் (போற்றி பாடட‌டி) தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்தான். (அது இத்தனை விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்திருக்க மாட்டர்கள் போல‌) மேலும் படத்தில் நிலப்பிரவுத்தவ‌ மதிப்பிடுகளை முன்வைப்பது போன்ற அம்சங்கள் இருந்தனதாம். ஆனாலும் ஒரு நல்ல முயற்சி..

என் தனிப்பட்ட கருத்து : பார்பானியம், சாதியம், அடக்குமுறை, ஃபாசிசம், ஏகாதிபத்யம் போன்றவற்றை சுகுணா திவாக‌ர் எந்த அளவிற்க்கு வெறுத்து எதிர்க்கிறாரோ, அதே அளவிற்க்கு கமலும் வெறுத்து எதிர்க்கிறார் என்றே கருதுகிறேன். பல ஆண்டுகளாக கமலில் பேச்சுக்கள், எழுத்துக்கள் மற்றும் பல செயல்கள் மூலம் அப்படி கருதுகிறேன். 1993 சனவரியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் எழுந்த மதக்கலவரங்களின் தொடர்ச்சியாக‌, மும்பாயில் அப்பாவி முஸ்லிம்கள் பல ஆயிரம் பேர்கள் தொடர்ந்து கொல்லப்பட்ட போது, கமல் மற்றும் பலரும் டெல்லி சென்று பிரதமர் நரசிம்மராவிடம், இந்த கொலைகளை உடனடியாக தடுக்க வேண்டும் என்று நேரில் வலியுறுத்தியது போன்ற பல நிகழ்வுகள் நினைவிற்க்கு வருகின்றன. அவர் அறிவுஜீவி என்ற தன்னை நம்பிக்கொண்டு பல அபத்தங்களை தம் படங்களில் செய்த்துள்ளார் தாம். இருந்தாலும் அவரின் அடிப்படையை நான் என்றும் சந்தேகிக்கவில்லை. மிகவும் மதிக்கிறேன்..

சுகுணா,

இந்த படத்தை பார்த்துவிட்டு இவ்வளவு டென்ஸனாகியிருக்க வேண்டாம்.

ARV Loshan said...

கமலில் பிழை பிடிக்க என்றே படம் பார்த்தீர்களா அல்லது பார்ப்பனீயத்தைக் கமல் எங்கெங்கே நுழைக்கிறார் என்று(நுழைக்கிறாரா?) என்று நுணுக்கி நோக்க படம் பார்த்தீர்களா?

அடுத்த படமும் வரும் விரைவில்..

குப்பன்.யாஹூ said...

மாதவராஜ், உண்மை தமிழான் அலல்து பைத்தியக்காரன் பதிவில் இருந்துதான் உங்கள் பதிவு வந்தேன்.

உன்னை போல் ஒருவன் திரைப்பட விமர்சனம்.

நண்பரே உங்கள் பார்வை (அணுகுமுறை) மிகத் தவறாக உள்ளது. மாற்றி கொள்ளுங்கள், இந்த படம் குறித்து அல்ல, பொதுவான அன்றாட உண்மை வாழ்விலும் சொல்கிறேன்.

Please develop positive attitudde . The easiest job in this world is finding faults on others. Please change this habit.
Develop the habit of encouraging appreciating, supporting others., You will see different world.

I also had negative attitude like you 5 years back. I too said manirathanm is fool, ARRAHMAN is stupid, kamal is waste etc. When i got positive attitude i am able to see a happy enjoyable world.

கமலை திட்டினால் நம் மீது அதிக கவனம் வரும், அதிக பின்னூட்டம் வரும் என்ற ஆசை போல.

மற்ற படி மாதவராஜ், ஜ்யோவ் சுந்தர், உண்மை தமிழன் சொன்னது போல உங்கள் பதிவு என்ன்னுள் பெரிய டாக்காத்தை ஏற்படுத்த வில்லை. I would say madhavaraj & unmai tamilan has exaggerated your post.


As a friend I am saying, please develop positive attitude, that will help your life and carrier too.

குப்பன்.யாஹூ said...

Now only I have read few comments and your replies .

To Taamiraa you said Tevars were sung the song POTRI PAADADI PENNE and attacked Daliths. That is 100% wrong information friend.

I was physically present during that caste fights. I was 1/2 km away when ex MLA Gopalakrishnan's (Sankarankoil ADMK MLA, Dalith)brother's hand was attacked.

I have friends who have connection with John panidyan, pasupathi paandiyan (Daliths), Karathe selvin naadar, Karuippasami pandiyan (tevar- sitting Tenkasi MLA, DMK secretary Nellai, that time he was ADMK state joint secreaty), Tangaraj pandiyan (that time he was ADMK district secretary, Rajyasabha MP, ootthumalai jameendar), S.Velaiyaa (ex admk MLA (MLA when caste fight was on, Tevar), admk nellai distrcit secretary, Paalai darmalingam (ADMK MLA Tevar), TAK Lakkumanan (that time DMK district secretary Tevar, later joined MDMK and now in ADMK).

Do you know Palakkadai chellappa Junction shop was attacked there, or TPM Madieekan mama's (sitting TN Minister, Palai MLA) petrol bunk case etc that time.

I know people from both caste sides that time and the reasons were different.

So by this your wrong informations, I am able to make out who you are and how your views will be.

மணிஜி said...

/மொக்கை கவிதை தண்டோரா. இதுபோல எல்லாம் எழுதி உங்கள் போதாமையை நீங்களே பறைசாற்றி கழுத்தறுக்காதீர்கள்//

ஏனய்யா..அனானி.உம்மிடம் லட்சக்கணக்கில் குவிந்திருக்கிறதோ...உண்மை பெயரில் நீ என்னை திட்டு...அன்னியனாய் ஏன்?
அட்லீஸ்ட் நடையையாவது மாற்றி எழுதக்கூடாதா?

yogesh said...

sabash suguna sariyana sattaiyadi! please write to continue for deconsturt the kamal"s "parpaniyam". valthukal. by yogesh

Anonymous said...

sabash sariyana satiyadi suguna. valthukkal

யுவகிருஷ்ணா said...

நூறாவது பின்னூட்டம் :-)

Anonymous said...

UTV is listed on the Mumbai Stock Exchange and the Indian National Stock Exchange, and its motion picture division UTV Motion Pictures Plc is listed on the London Stock Exchange's Alternative Investment Market (AIM).

In August 2006, The Walt Disney Company acquired a 14.85 percent stake in UTV.[2] This was subsequently hiked to 32.1 percent in 2008, the same level as UTV's founders Ronnie Screwvala and his associates.[3] The remaining share is publicly traded.


Idhu Indhiya (israeliya) kootu thayaarippu enpadhal irukumo ?

அமெரிக்க ஹாலிவுட் ஒரு குறிப்பிட்ட குழுவால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பார்கள். இயக்கம், விருதுகள் உட்பட. கார்பரேட் நிறுவனங்கள் சினிமாவில் நுழைந்ததன் விளைவு இது என்றும் நினைக்கிறேன்.

அபியும் நானும் திரைப்படத்தில் கதைக்கு தேவையே இல்லாமல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வருவார்கள்.

i can see a pattern here. i may be wrong.


ஆங்கிலத்தில் இருந்து காப்பி அடிப்பதன் விளைவாகவும் இருக்கும்.

நண்பன் said...

உங்களைப் போன்றவர்களைப் பார்க்கும்போது, எதிர்கால இந்தியாவைப் பற்றி கொஞ்சம் நம்பிக்கை வருகிறது. தொடரவும். வாழ்த்துக்கள்.

குமரன் said...

காத்திரமான விமர்சனம். இந்த ஜென்மங்களுக்கு இப்படி சொன்னால் தான் மண்டையில் உரைக்கும்.

முஸ்லீம் "தீவிரவாதிகளை" விசாரிக்காமல் சுடவேண்டும் என்பது அயோக்கியத்தனம்.

குஜராத்தில் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, முஸ்லீம்களை கொன்று குவித்தார்களே! இந்து மத வெறியன் ஒருவனும் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

இனியும், குண்டு வெடிப்பதை தவிர்க்க முடியாது!

Anonymous said...

நந்தா சொன்னார்..,
"இந்தப்படத்தை இந்தியில் பல முறையும் , தமிழிலும் பார்த்தவன் என்ற அடிப்படையில் எனக்கு இந்த எண்ணம் இந்த படத்தில் தோன்ற வில்லை."
இதுமாதிரி பலமுறை பலமுறை பார்த்து கோயபல்ஸ் தத்துவம் போல "Call the dog mad" அப்படிங்கற மாதிரி ஆயிடிச்சில்ல. இஸ்லாத்தில் இருக்கும் சத்தியம், உண்மை, சகோதரத்துவம் இத எதையும் எவனாலயும் காட்டுவதற்கு துப்பு இல்ல. உங்க பிராமணிய வெறி தாங்காம தானே இந்துத்துவாவில் இருந்து விடுதலை வாங்கிகொண்டு இஸ்லாத்திற்கு சென்றோம். அப்பயும் வயிற்றெரிச்சல் தீரலை.
இந்து மதத்தில் சமத்துவம் பற்றி சட்டமேதை அம்பேத்கர் சொன்னது, "A blind man searching for a black cat in a dark room, but already not there" ஆதாரநூல்: Equalism in Hinduism அதாவது, "குருட்டு மனிதன் இருட்டு அறையில் இல்லாத கறுப்பு பூனையை தேடுவது போலாகும்" என்கிறார்.
இல்லாத ஒன்றை தேடியே இந்திய நாட்டில் பெரும்பாலான இந்துக்கள் அலைகின்றார்கள். அமெரிக்காவின் அடிவருடிகள் ஜார்ஜ்புஷ் சொன்னதைப்போல் "Every Muslims not a Terrorist but, Every Terrorist is a Muslim" என்றானே அதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்கள்.

இப்போது படத்திற்கு வருவோம், கண்டெய்னரில் வரும் போது அப்துல்லாஹ் என்பவனின் மூன்றாவது மனைவியை பெஸ்ட் பேக்கரிக்குள் வைத்து எரித்ததாக சொல்கின்றான். யார் எரித்தது என்று தெளிவாக சொல்லவில்லை. எரித்தது தீவிரவாதமாக தெரியவில்லையா.. கமல் தீவிரவாதியாக தேர்ந்தெடுத்த நால்வரில் ஒருவன் இந்துத்தீவிரவாதத்திற்கு பலியாகியிருக்கின்றானே. கமல் சொன்ன குட்டிக்கதையில் வரும் கருவறுத்தல் சம்பவத்தை நிகழ்த்தியது எந்த தீவிரவாதம். அப்ப கமல் சொன்ன அதே தீவிரவாதத்தை அழிக்கும் ஆயுதம் தீவிரவாதம் தானே. அப்துல்லாவிற்கு கமல் தண்டனை கொடுத்துவிட்டால் கமலுக்கு யார் தண்டனை கொடுப்பது.

வடநாட்டுக்காரன் வாந்தி எடுத்தால் அதை அப்படியே வழித்து நக்குவதா.., காமன் மேனுக்கு வக்காலத்து வாங்கும் கமல் காமன் சென்ஸுக்கு முக்கியத்துவம் தராமல் விட்டது ஏனோ..,

இந்தி எதிர்ப்புக்கு தண்டவாளத்தில் தலைவைத்த திராவிட நாட்டில், பகுத்தறிவை பறைசாற்றிய தமிழ்நாட்டில் மீண்டும் பார்ப்பனிய ஆதிக்கம் மெல்ல மெல்ல தலைதூக்குகின்றது.

Anonymous said...

அருமை நண்பருக்கு,
என்(முஸ்லிமின்) உள்ளக் குமுறல்களை மிக தெளிவாக பதித்த உங்களுக்கு நன்றி.
தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்ற ஓர் மாய தொற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள் இந்த மீடியாக்கள்.
தேசத்தந்தையையும் சுட்டு தள்ளிட வேண்டியது எங்கள பார்த்து தேசவிரோதி சொல்ல வேண்டியது.

போராட்டம் said...

இன்றுதான் உன்னைப் போல் ஒருவன் குறித்த உங்கள் விமர்சனப் பதிவையும், அதன் தொடர் பதிவுகளையும் படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள் சுகுணா. இத்தனை நாள் இந்தக் கோபத்தையும், செறிவையும்தான் miss பண்ணியிருக்கிறேன் எனத் தோன்றுகிறது. மாதவராஜுக்கான பதில் அழகு.

Abro said...

I was searching to find who first brought out the kavikkamal from UPO. so, you are the first. Thanks. Only after you, many understood the poison being dissolved in the water. Once again i admire to do this laboratory work. Well done. Go ahead with head high.

Anonymous said...

உன்னைப் பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது. இன்னும் ரெண்டு வருஷத்துல உன்னை கீழ்பாக் ஆஸ்பத்திரியில் வந்து பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சாப்பிடற இலைக்குப் பக்கத்துல மலத்த வச்சிருக்கிற மாதிரி இருந்தது உன் எழுத்துக்கள். ரூமை விட்டு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்....தெளிவு கிடைக்கும்