Monday, September 8, 2008

பெண்கள் சந்திப்பு ‍ இருவேறு பார்வைகள்

பெண்கள் சந்திப்பு குறித்த கவிஞர் தமிழ்நதியின் பார்வையை இங்கு படித்திருப்பீர்கள்.

http://tamilnathy.blogspot.com/2008/08/blog-post_07.html

இரண்டாம் பார்வை எனக்கு மின்னஞ்சலில் மீராபாரதி என்னும் நண்பர் அனுப்பியது.

கடந்த ஆகஸ்ட் மூன்றாம் திகதி பெண்களின் இலக்கிய சந்திப்பு ஒன்று டொரோன்டோவில் நடைபெற்றது. அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியதிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக எந்த ஒரு இலங்கை சார்ந்த நிகழ்வுகளுக்கும் செல்வதை தவிர்த்திருந்தேன். ஏனனில் பெரும்பாலான (பொது அரசியல்) நிகழ்வுகள் சார்பு அரசியல் தன்மை கொண்டனவாகவே இருந்தன இருக்கின்றன...ஒன்று புலிகள் சார்ந்த அரசியலாக இருக்கும் அல்லது புலிகள் எதிர்ப்பு அரசியலாக இருக்கும் அல்லது இலங்கை அரசாங்க அரசியல் சார்ந்ததாக இருக்கும். இதைவிட ஊர் ஒன்று கூடல்களும் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரசியல் சாதிய சார்புத்தன்மைகள் மறைக்கப்பட்டு பொது நிகழ்வுகளாக நடைபெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை என்பதால் பங்குபற்றுவதிலிருந்து ஒதுங்கியிருந்தேன்.

இன்றைய எனது புரிதலில் இலங்கையில் ஒரு அமைதியான சுழலை உருவாக்குவதன் மூலமும் இனங்களுக்கு இடையில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலமுமே நிலவுகின்ற இன முரண்பாடுகளுக்கு நீதியான ஆரோக்கியமான தீர்வு ஒன்றைக் காண்பதற்காக ஒரு ஆரோக்கியமான சுழலை உருவாக்க முடியும் என நம்புகின்றேன். இந்த அடிப்படையிலையே கடந்த சில மாதங்களில் நடைபெற்ற சமாதானத்திற்கான கனேடியர்கள் ஒழுங்கு செய்த இரு கூட்டங்களுக்கும் சென்றிருந்தேன். இந்த நோக்கத்துடனையே ஆகஸ்ட் 3ம் திகதி நடைபெற்ற பெண்கள் இலக்கிய சந்திப்புக்கும் சென்றிருந்தேன். மேலும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறள்ள “இலங்கையின் எதிர் காலம் என்ன” என்ற கூட்டத்திற்கும் செல்வதற்கு உள்ளேன். இது தொடர்பான சில கருத்துக்களை குறிப்புகளை இங்கு முன்வைக்க விரும்பகின்றேன்.

ஏனக்கு ஆணுக்குறிய உடல் உறுப்பு இருப்பதாலும் அதனால் பிறந்ததிலிருந்து ஆணாதிக்க கருத்தியலிலும் மனோபாவத்திலும் இச் சமூகம் என்னை ஆணாக(?) கட்டமைத்தமையாலும் பெண்கள் சந்திப்புக்கு அனுமதி இல்லை. இது பெண்ணியம் சார்ந்த கருத்தியல் பார்வையில் சரியானதாக இருக்கலாம். இது புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றே. ஏனனில் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தாலும் அதன் ஆதிக்க சக்திகளான ஆண்களாலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அது தொடர்பான பெண்களது உள்உணர்வுகளும் அதை வெளிப்படுத்தும் மொழியும் தனித்துவமானவையே. ஆணாதிக்க சிந்தனைக்குள் கட்டுண்டிருக்கும் ஆண்களால் இது புரிந்து கொள்ளப்பட முடியாதது என்பது கவலைக்கிடமானதே. ஆகவே இறுதிநாளான ஆகஸ்ட் 3ம் திகதிக்கு மட்டுமே ஆண்களுக்கு ஐனநாயக அடிப்படையில் அனுமதியும், பெண்களுடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
கலந்துரையாடலில் என் கவனத்தை ஈர்த்த சிந்தனையில் பதிந்த கருத்துக்கள் தொடர்பான எனது கருத்துக்களை இங்கு முன்வைக்கின்றேன்.

ஆரசியல் செயற்பாட்டாளர் ஐhனகி அவர்கள் பெண்கள் அதிகளவில் அரசியலில் பங்குபற்றும் பொழுதுதான் பெண்கள் தொடர்பாக நாம் விரும்பும் குறைந்த பட்ச மாற்றங்களையாவது ஏற்படுத்த முடியும் என்றடிப்படையில் தனது கருத்தை முன்வைத்தார். மேலும் அவர் கூறிய போது பெண்கள் சரி பாதியாக இருக்கும் இந்த உலகத்தில் நாடுகளில் அரசியலில் பொதுவாழ்வில் பெண்களின் பங்குபற்றல் என்பது அதன் சதவீதம் மிகவும் குறைவானதே என்றார். இது மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயம். மேலும் அரசியலிலும் பொதுவாழ்விலும் பங்குபற்றும் பெண்கள் அதிகமானோர் தம் உடலில் பெண் சார்ந்த உடல் உறுப்புக்களை மட்டும் கொண்டுள்ளதுடன் பெண்ணிய பார்வைக்கு மாறாக ஆணாதிக்க சிந்தனைப் போக்கையே பார்வையையே மனதையே இவர்கள் கொண்டுள்ளனர். இவர்களினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்காது என்பது ஆச்சரியமானதல்ல. ஏனனில் அதிகாரத்திலிருக்கும் இப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடலளவில் மட்டுமே வித்தியாசம் உண்டு. மனதளவில் சிந்தனையளவில் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே பெண்ணிய பார்வை சிந்தனை உணர்வுகள் கொண்ட பெண்களே அரசியலிலும் பொதுவாழ்விலும் அதிகளவில் ஈடுபட முன்வரவேண்டும். இதுவே ஆணாதிக்க சிந்தனை கொண்ட அரசியல் இயந்திரத்தையும் ஆண்தன்மை கொண்ட அரசியல் செயற்பாடுகளையும் பெண்ணிய வழியில் மாற்றுவதற்கு வழியை உருவாக்கும் என்றால் மிகையல்ல. ஏனனில் ;இதுவரை காலமும் ஆணாதிக்க வழிபாதையினால் நாம் கண்டது வன்முறை போர் பகையுணர்வு கொலை எதிரி துரோகி மனப்பான்மை என்பனவே. இதிலிருந்து விடுபட்டு பெண்மையின் பாதையில் இனிவரும் காலம் பயணிக்கவேண்டியது அவசியமானதாகும். இதுவே மனித இனத்தையும் இந்த பூமியையும் காப்பாற்றும்.

இரண்டாவது விடயம் யாழினி எனப்படும் நிவேதா அவர்கள் முன்வைத்தது. அதாவது ஆதி காலங்களிலிருந்து மரபு வழியாக கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்ற பெண் பெண்மை என்ற பாத்திரம் தொடர்பானது. ஓவ்வொரு காலங்களிலும் அக் கால சுழ்நிலைகளுக்கு ஏற்பவும் தம் தேவைகளுக்கு ஏற்பவும் தம் மரபுகளிலிருந்தும் புனை கதைகளிலிருந்தும் பெண்ணையும் அவர்கள் பண்புகளை மீள மீள் வடிவமைத்துவந்துள்ளனர் என்றார். இதில் நாம் சில விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். முதலாவது பெண்களின் இயல்பான அதாவது இயற்கையான இயல்புகளுடன் வாழும் பெண்கள். இவ்வாறான பெண்களை இன்றை சமூகங்களில் காண்பது அரிதே. ஏனனில் பெண்கள் ஆண்டாண்டு காலமாக பிறப்பிலிருந்து மட்டுமல்ல கருவறையிலிருந்தே ஆணாதிக்க பார்வைக்கு உட்பட்டே கட்டமைக்கப்பட்டு அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறான பெண்களையே நாம் இன்று அதிகமாக காணவும் சந்திக்கவும் கிடைக்கின்றது. முடிகின்றது. இப்பெண்களையே இந்த ஆணாதிக்க சமூகம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது தேவைகளுக்கு ஏற்ப கலாச்சார காவிகளாகவும் போர்முனைகளில் செயற்படும் இராணுவ விராங்கனைகளாகவும் வீட்டில் மனைவி தாய் என்ற பெயர்களில் வேலைக்காரிகளாகவும் பாலியல் இயந்திரங்களாவும் பயன்படுத்த முடிகின்றது. இவர்களுக்கு; வீரத்தாய் கற்புக்கரசி வீரவேங்கை போராளி .....இவ்வாறான சுய புகழ்பாடும பட்டங்களையும் வழங்கி இப் பெண்களை திருப்திப்படுத்துகின்றது. இப் பெண்களும் தமது அறியாமையினால் இதுவே சரியானது எனது எதிர் கேள்விகள் கேட்காது (அதற்கும் உரிமை இல்லை என்பதை அறியாது) நம்பி சொற்களால் கட்டப்பட்ட தங்க கூண்டுகளுக்குள் வாழ்கின்றனர். இன்னும் சில பெண்களே தாம் அடக்கப்பட்டுள்ளதை உணர்ந்து தம் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடுகின்றனர். இதில் இருவிதமான பெண்கள் உள்ளனர். ஒரு வகையினர் ஆணாதிக்க கருத்தியலுக்கு மாறாக ஆண்களையே எதிரிகளாக கருதி ஆண்களுடன் போட்டி போடுவது என்பதே பெண்விடுதலை எனக் கருதுகின்றனர். இவர்கள் தமது இயற்கையான பெண் இயல்புகளை மீள உள்வாங்கி வளர்ப்பதற்குப் பதிலாக ஆண் இயல்புகளை தன்மைகைளை உள்வாங்கி தம்மை ஆணாகவே மாற்றுகின்றனர். இதுவே ஆணுக்கு சரிநிகர் சமானமாக இருப்பதற்கு சரியானது எனக் கருதுகின்றனர். இவர்கள் ஆண்களின் செயற்பாடுகளுக்கு பிரக்ஞையற்று எதிர்வினையாக மட்டுமே செயற்படுகின்றனர். இவர்களும் ஆணாதிக்க கருத்தியலின் வலையில் வீழ்ந்தவர்களே. ஏனனில் இவர்களையும் இந்த ஆணாதிக்க சமூகம் பெண்விடுதலையை அடைவதற்கு வன்முறையே சரியான பாதை என நம்பவைத்து தமது ஆணாதிக்க போர்ச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இப் பெண்களும் பெண் விடுதலைப் போராளிகளாக வன்முறை பாதையில் செயற்படுபவர்களாக வலம் வருகின்றனர்.

மிகச் சில ;பெண்களே இயற்கையான பெண் இயல்புடன் வாழ்வதும் அது சார்ந்து சிந்திப்பதுமே பெண்ணிய சிந்தனை என்றும் அன்பு தாய்மை அரவணைப்பு என்பவற்றை முன்வைத்தும் செயற்படுகின்றனர். இவ்வாறன ஒரு கருத்தை மைதிலி மைத்தரி அவர்கள் முன்வைத்தார்கள். இவ்வாறான பெண்களே போருக்கும் வன்முறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் தொழிற்வாலை மற்றும் இயந்திரங்களிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களிலிருந்;து சுழல்லை பாதுகாக்கவும் தாமும் நலமுடன் வாழ்ந்து எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பூமியை அழகானதாக வழங்கவேண்டும் என்ற அக்கறையுடனும் செயற்படுகின்றனர். மேலும் இன்று பெண்கள் பெற்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் சாத்வீகமான போராட்ட முறைமைகளுக்கூடாகப் பெறப்பட்டமையே. பெண் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி தனித்து போராடியதாக வரலாறு இல்லை. பெண் சாதிய அடக்குமுறைகளுடன் ஒப்பிடும்பொழுது பிற அடக்குமுறைகளின் பாதிப்பு தாக்கம் குறைவானதே என்றால் மிகையல்ல. ஆகவே ஆண்களும் இனிவரும் காலங்களில் ஆணாதிக்க போர்குணாம்ச வன்முறைப் பாதைகளைக் கைவிட்டு பெண்மை சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் அதாவது அன்பு அரவணைப்பு தாய்மை என்பவற்றை உள்வாங்கி தமது ;உரிமைகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். இங்கு போராட்டம் என்ற சொல்லுக்குப் பதிலாக செயற்பாடு; என்பதை முன்வைத்துள்ளேன். ஏனனில் போராட்டம் என்ற சொல்லே ஆணாதிக்கமயமானது என்றால் மிகையல்ல. இதுவே ஆரோக்கியமான ஒரு சமூகத்தை மனிதர்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கான ஒரு அழகிய பூமியை உருவாக்கும் என்றால் சந்தேகமில்லை.

மேலும் பார்வதி யுpனித்தா மற்றும் ஒருவர் ஆண்களுக்கு எதிரான பெண்களின் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் அது தொடர்பான விபரங்களையும் கருத்துக்கணிப்புகளையும் முன்வைத்தனர். இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் பல கருத்துக்கணிப்புக்களில் ஆணாதிக்க செயற்பாடுகளுக்கு பெண்களும் சரியானது என ஆமோதித்திருப்பதே. இது ஆச்சரியமானதல்ல. ஏனனில் மேற் குறிப்பிட்ட படி ஆண்கள் பெண்கள் அனைவரும் ஆணாதிக்க கருத்தியலை உள்வாங்கி அதைச் சரி என நம்பி வளர்க்கப்பட்டவர்கள். அதன் வழி வாழ்பவர்கள். இங்கு ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் உறவுகள் அதன் செய்பாட்டு தன்மைகள் மற்றும் பாலியல் உறவுகள் செயற்பாடுகள் தொடர்பான கருத்துரங்குகளும் அறிவூட்டல்களும் தொடர்ச்சியாக பல இடங்களில் நடைபெறவேண்டும் என்பது முக்கியமானது. நான் ஒரு ஆணாக பிற்போக்கு கருத்துக்களாலும் பாலியல் உணர்வுகளை அடக்கியும் வளர்க்கப்பட்டவன் என்றடிப்படையில் ஆணாதிக்கமில்லாத ஒரு ஆணாக வளர்வதில் செயற்படுவதில் வாழ்வதில் உள்ள நடைமுறை கஸ்டங்களை பிரச்சனைகளை முரன்பாடுகளை நாள்தோரும் எதிர்கொள்கின்றேன். புhலியல் ரீதியாக பெண்களை பயன்படுத்தும் ஆண்களில் பலர் ஆணாதிக்கத்தினதும் அது சார்ந்த சமூகத்தினதும் பலிக் கடாக்களே. ஒருவகையில் ஆண்களும் பெண்களும் இந்த ஆணாதிக்க சமூகத்தால் உருவாக்கப்பட்ட நோயாளிகளே. இவர்களது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முனைவதோடு பாலியல் உணர்வுகளின் அடக்குமுறையால் ஏற்ப்பட்ட மனநோய்க்கும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குணப்படுத்தப்படவேண்டியவர்களே. பெண்களைப் போல் ஆண்களும் ஆணாதிக்க சமூகத்தால் கட்டுண்டு வளர்க்கப்பட்டவர்களே. ஆணால் ஆண்கள் அதிகாரத்தை அனுபவிக்கின்றனர். பேண்கள் அதன் அதிகாரத்தின் அடக்குமுறையை அனுபவிக்கின்றனர். ஆக ஆணும் பெண்ணும் ஆணாதிக்க சிந்தனையால் செயற்பாடுகளால் அடக்கப்பட்டு வாழபவர்களே. இவர்கள் இருவருமே இதிலிருந்து விடுபடுவதே பெண்விடுதலையை மட்டுமல்ல ஆண் விடுதலையையும் சாத்தயமாக்கும். நிச்சயமாக இதற்கான பாதை பெண்ணிய பாதையாகவே இருக்கவேண்டும்.

இறுதியாக அனைத்து தமிழ் நிகழ்வுகளையும் போல் இந்த நிகழ்வும் புலி சார்பு மற்றும் புலி எதிர்ப்பு என்ற பிரிவினர்களால் அல்லது ஆயுத போராட்ட சார்பு அல்லது ஆயுத வன்முறை வழி போராட்ட எதிர்ப்பு என்ற பிரிவினர்களால் முரண்பட்டு பிளவுண்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஏன்னைப் பொறுத்தவரை இன்று புலிகள் முன்னெடுக்கும் போராட்டம் ஆணாதிக்க சாதிய மத வாத கருத்தியலுக்கு உட்பட்டே நடைபெறுகின்றது. இங்கு பெண்களும் சாதியால் அடக்கப்பட்டவர்களும் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆணாதிக்க பார்வையிலமைந்த வன்முறை பாதையில் பயன்படுத்தப்பட்டே வருகின்றனர். இவர்களது செயற்பாடுகளும் வழிமுறைகளும் எந்தடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாததே. இவ்வாறு புலிகளின் செயற்பாடுகளை மறுப்பதானது எந்தவகையிலும் இலங்கை அரசாங்கம் தமிழ் பேசும் மனிதர்கள்; மீது மேற்கோள்ளும் அடக்குமுறைகளையும் சாதாரண சிங்களம் பேசும் மனிதர்களை பயன்படுத்ததி போர் மூலமாக அழிப்பதை அடக்குவதை நியாயப்படுத்தி விடாது. நியாயப்படுத்தி வுpடக்கூடாது. ஏனனில் கொழும்பிலருந்து வந்த ஒருவர் கேட்ட கேள்வி மிக முக்கியமானது அனைவரும் கவனத்தில் எடுத்து செயற்படவேண்டிய ஒன்று. அதாவது “புலிகள் தவறு ஏனின் அதற்கு மாற்றாக புலம் பெயர்ந்து செயற்படுகின்ற மனிதர்கள், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில என்ன செய்துள்ளார்கள்”. இந்தக் கேள்விக்கு யார் விடை கூறப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது கடந்த 27 தடவைகள் தமது நேரங்களை செலவளித்து பணத்தைச் செலவளித்து சந்தித்து தம் கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடிய தமிழ் பேசும் “பெண்கள் சந்திப்பு” விடை கூறுவார்களா?
என்ன செயற்பாடுகளை இதுவரை முன்னெடுத்துள்ளது?

இனிமேலும் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள்; இலங்கையில் நடைபெறும் ஆணாதிக்க வழிப்பட்ட இலங்கை அரசின் போருக்கு எதிராக என்ன செய்யப்போகின்றோம்?
அதிகளவு பெண்கள் பயன்படுத்தப்படும் புலிகளின் வன்முறை போராட்ட வழிமுறைகளுக்கு எதிராக அல்லது மாற்றாக என்ன செய்யப்போகின்றோம்.?
இந்தடிப்படையில் சிந்தித்து இனிமேலும் செயற்படாது விடுவோமாயின் புலிகளின் போராட்டம் சில வேளை வெல்லலாம்! ஆரசாங்கம் சில வேளை தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி கொள்ளலாம்! ஆனால் இவை ஒன்றும் தமிழ் பேசும் பெண்கள் குழந்தைகள் உட்பட எந்த மனிதர்களது விடுதலையும் சாத்தியமாக்காது என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய ஒரு கசப்பான சோகமான ஒரு உண்மையாகும்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற உள்ள “இலங்கையின் எதிர் காலம் என்ன” என்ற தலைப்பில் சமாதானத்திற்கான கனேடியர்களும் மற்றும் சில அமைப்புகளும் ஒழுங்கு செய்கின்ற கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவர்கள் ஏற்கனவே இரு கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர். இவ்வாறான கலந்துரையால்கள் முக்கியமானவையே. சுpல கருத்தியல்ரீதியான தெளிவுகளைப் பெறுவதற்கு புதிய கருத்துக்களை தகவல்களை அறிவதற்கு அவசியமானவையே. ஆரம்ப கூட்டத்தில் கனடிய அரசியல் வாதிகள் கலந்து கொண்டார்கள். அரசாங்கம் பிழை என்றார்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றனர். இக் கருத்தே இவர்களுக்குப் பாதுகாப்பானது. ஆவர்கள் தம் கருத்தை கூறி எழுந்து போகும் பொழுது பலர் அவர்கள் பின்னால்; வால் போல் எழுந்து சென்றனர். ஏதற்காக? தீர்வு எதையும் கொண்டு சென்றாரா? யாருக்குத் தெரியும்? இரண்டாவது நிகழ்வு பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கலந்துரையாடப்பட்டது. இது இவர்களது ஆய்வுகளுக்குப் பயன்படலாம். கனடிய அரசியல் வாதிகள் இன்மையால் பங்குபற்றியோரும் முதலாவதை விட குறைவானவர்களாகவே இருந்தனர். இப்பொழுது மூன்றாவது கூட்டம். ஆனால் சமாதானத்தை நோக்கிய செயற்பாடு என்பது இக் கால் இடைவெளிகளில் பூச்சியமானதாகாவா அல்லது எவ்வாறு இருந்தது இருக்கின்றது.

ஆரசியல்வாதிகள் கல்விமான்கள் கருத்தாளர்கள் ஆய்வாளர்கள் தம் சார்புக்கருத்துக்களை கூறிச் செல்வார்கள். இது மட்டும் இலங்கையில் சமாதானத்தை கொண்டுவரப்போவதில்லை. இலங்கையின் எதிர் காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. முhறாக,

இலங்கை அரசு முன்னெடுக்கும் போரை நிறுத்துவதற்கு உரிமைகளை மறுத்தமைக்கு என்ன செய்தோம்?
புலிகளின் வன்முறை, சுய தற்கொலை, ஐனநாயக மறுப்பு பாதயை மாற்றுவதற்கு அல்லது மாற்றாக என்ன செய்தோம்?
சுமாதானத்திற்கான கனடியர்கள் என்ன செய்தோம்?
பேண்கள் சந்திப்பு என்ன செய்தோம்?
புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் என்ன செய்தோம்?

புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து புலிகளுக்கு சார்பாகவும் எதிராகவும் கதைப்பதும் அரசாங்கத்திற்கு வால் பிடிப்பதும் கஸ்டமான விடயமல்ல. இவை எதுவும் இலங்கையில வாழும் தமிழ் சிங்களம் பேசும் மனிதர்களுக்கு விடுதலையையோ உரிமைகளையோ பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. ஆகவே மேற்குறிப்பிட்ட மனிதர்களின் ஆரோக்கியமான அமைதிக்கான சமாதானத்திற்கான ஒன்றுபட்ட கூட்டுறவான “அமைதியை அமைதியுடாக பெறும்” செயற்பாடே இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும். இது நிச்சயமாக பெண்ணிய கருத்தினடிப்படையில் முன்னெடுக்கப்படும் பெரும்பான்மை பெண்கள் பங்குற்றும் செய்றபாடு ஒன்றின் மூலமே சாத்தியமானதாகும். இதுவே, “இலங்கையில் வாழும் மனிதர்களுக்கு நம்பிக்கையை வழங்கும்”.

தோடர்ச்சியான கலந்துரையாடல்கள் மட்டுமல்ல பொது இடங்களில் இலங்கை துர்துவரலயங்களின் முன்பான போரை நிறுத்துவதற்கும் உரிமைகளை மதிப்பதற்குமான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் அமைதியான செய்ற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது மிக மிக அவசியமானதாகும்.

பி.கு. நான் ஒரு சாதாண ஆண் மனிதர். மாற்றம் என்பது என்னளவிலையே ஏற்படாதபோது பிறரிடம் வெளியில் எவ்வாறு மாற்றத்தை எதிர்பார்ப்பது. ஆமைதி ஒவ்வொரு மனிதரிலிருந்தும் அவர்களது இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும அல்லவா பிறக்க வேண்டும். என்னிலிருந்து எப்பொழுது இந்த அமைதி உருவாகும்?


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍எனதேயான சில கருத்துக்கள்...

1. இரு பார்வைகளில் ஏதேனுமொன்றுடன் ஒத்துப்போக வேண்டுமென்ற அவசியம் எனக்கோ உங்களுக்கோ இல்லை. வேறு வேறு பார்வைகளைக் கிடைமட்டத்தில் வைப்பதன் மூலம் வாசகி/கன் தனக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ள விழைகிறேன்.

2. மீராபாரதி எனக்குத் தனி மின்னஞ்சலில் அனுப்பியதுதான் என்றபோதும் அது பலருக்கும் அனுப்பப்பட்ட குழு மின்னஞ்சல் என்பதால் பொதுப்பார்வைக்காகவும் பகிர்தலுக்குமானதே என்னும் புரிதலின் அடிப்படையிலேயே பொதுவெளியில் முன்வைக்கிறேன்.

3. மீராபாரதி ஒரு ஓஷோ பற்றாளர். அவரது வலைத்தளத்தில் 'புரட்சிகர இயக்கத்திலிருந்து விலகியது ஏன்?'' என்று ஒரு பதிவெழுதியிருக்கிறார். அவர் பங்குபற்றியது தேசிய இன விடுதலை இயக்கமா, நக்சல்பாரி இயக்கமா, மய்யநீரோட்ட இடதுசாரி இயக்கமா என்பது குறித்த விபரங்களை அறியேன். என்றபோதும் ஏதேனுமொரு குறிப்பான அரசியல் பார்வையோடு இயங்கிருக்கிறார் என்பது என் புரிதல்.

4. தமிழ்நதியின் பதிவில் அய்யனார், பதிவு குறித்த பிரக்ஞை எதுவுமில்லாமலே தொடர்பின்றி ஒரு பெண்பதிவர் குறித்து இட்டுள்ள பின்னூட்டம் அவரது அரசியல் அரைகுறை அறிதலையும் ஆணாதிக்கத்திமிரையுமே காட்டுகிரது.

2 comments:

Anonymous said...

பதிவின் கருத்துக்களைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. மலிந்துக் கிடக்கும் பிழைகளைத் திருத்தி வெளியிட்டிருக்கலாம். வாசிக்கக் கரடுமுரடாக இருக்கிறது.

Anonymous said...

//தமிழ்நதியின் பதிவில் அய்யனார், பதிவு குறித்த பிரக்ஞை எதுவுமில்லாமலே தொடர்பின்றி ஒரு பெண்பதிவர் குறித்து இட்டுள்ள பின்னூட்டம் அவரது அரசியல் அரைகுறை அறிதலையும் ஆணாதிக்கத்திமிரையுமே காட்டுகிரது.//

அய்யனார் தன்னை அறிவுஜீவியாக காட்டிக்கொள்ள முனைந்தாலும் அவ்வப்போது இதுமாதிரி தன் அரைகுறைதனத்தை வெளிகாட்டிவிடுகிறார்.

அறிவுஜீவிகளும், அறிவுஜீவி போல பாவனை செய்பவர்களும் அவரவர் பிம்பத்தை அவரவரே கட்டி காத்துகொள்ள வேண்டும்.