Monday, June 30, 2008

சிந்தாநதி?

முதலவதாக சுஜிபாலா புகைப்படம் தொடர்பான செய்தி சினிமநிருபர் வலைப்பூவில் இடம்பெறவில்லை, தமிழ்சினிமா வலைப்பூவில்தான் இடம்பெற்றது என்பதைப் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். தவறுக்கு வருந்தி வாசகர்களும் சினிமா நிருபரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தமிழ்சினிமா வலைப்பூவில் வெளியான செய்தி இங்கே.

http://tamilcineema.blogspot.com/2008/06/blog-post_9128.html



ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா என்னும் தலைப்பு ஆபாசமாக இருப்பதால் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்சினிமா பதிவர் தெரிவிக்கிறார். ஆனாலும் எனது முந்தைய பதிவின் கேள்விகள் இன்னமும் அப்படியே மிச்சமுள்ளன. 'ஆபாசம்' பற்றியல்ல, நமது வரலாற்றுப் பிரக்ஞை குறித்தவையே அக்கேள்விகள்.

ஆங்கிலேய ராணுவத்தால் தமிழ்ப்பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகவும் சில பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. நான் அச்செய்தியைப் படித்ததில்லை. வாய்ப்பிருந்தால் அதை வலையிலேற்றி நண்பர்கள் உதவலாம்.

ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை நியாயப்படுத்துவதல்ல எனது நோக்கம். மாறாக தேசபக்தி, தேஅச ஒற்றுமை, கலாச்சாரத் தேசியம், மதப்பெருமிதம் போன்ற பெருங்கதையாடல்களின் வழியாக வரலாற்றைத் திரிக்கும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே அஃது. ஆனால் பெருமளவில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைகளைச் செய்ததாக பேரளவில் ஆதாரங்களில்லை. அப்படியே இருந்தாலும் கூட அது நமது ஆதிக்கச்சாதி வெறியர்கள், இந்தியப் போலீசு மற்றும் ராணுவ 'வீரர்கள்' ஆகியோரோடு ஒப்பிட்டால் சுஜுபியாகத்தானிருக்கும்.

முந்தைய பதிவு தொடர்பாக நண்பர் சிந்தாநதி சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அது தொடர்பாக சில விளக்கங்கள்.

/
அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?/

இயக்குனரும் தயாரிப்பாளர்களும் கருத்தியல் ரீதியாக மாற்றுச்சிந்தனை உடையவர்கள் என்றோ அதற்காகத்தான் வைகுண்டர் பற்றித் திரைப்படம் எடுத்தார்கள் என்றோ அவர்களுக்கு 'கவர்ச்சி', உள்ளிட்ட வியாபார நோக்கங்கள் இல்லை என்றோ நான் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. மேலும் அத்திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் பின்னணி, கருத்தியல் பின்புலம் குறித்தும் கூட எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை வைகுண்டரை நாடார் சமூகத்தைச் சேர்ந்த 'மகானாக'ச் சுருக்கிச் சித்தரிக்கும் நோக்கமும் கூட அதற்கு இருக்கலாம். ஆனால் எனது அக்கறை அதன்பாற்பட்டதல்ல.

/ நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்./

பதிவெழுதும் இந்த நிமிடம் வரை அந்தப் படத்தையே பார்க்காத நான் அதை புரட்சிகரப்படம் என்று எப்படிக் கூற முடியும்? மேலும் எங்கே நான் அப்படிக் கூறியிருக்கிறேன்?

/வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. /

வைகுண்டர் 'பக்தர்கள்' மீது உங்களுக்கு இருப்பதைப் போலவே எனக்கும் விமர்சனங்களிருக்கின்றன. நான் எனது பதிவில் எங்கே அவரை மகானாகத் திருவுருவாக்கியிருக்கிறேன் என்பதைக் குறிப்பிடாமல் போகிறபோக்கில் அவதூறுகளைத் தெளித்துப் போவது நீதியல்ல.

மேலும் குஷ்பு விவகாரம் தொடர்பான உங்களின் ஒப்பீடு ஆகப்பெரிய அபத்தமாகத்தானிருக்கிறது. 'சுஜிபாலா வைகுண்டரின் மனைவியாக நடிக்கக்கூடாது' என்றெல்லாம் நான் உளறவில்லையே, ஒருவேளை ஒப்பீட்டின் பொருத்தப்பாடு என் சிற்றறிவிற்குத்தான் எட்டவில்லையோ, என்னவோ!

Saturday, June 28, 2008

சினிமா நிருபருக்கு ஒரு கவனக்குறிப்பு

சமீபத்தில் 'சினிமாநிருபர்' என்னும் வலைப்பூவில் 'ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா படம்' என்னும் ஒரு கவர்ச்சிப்(?) படம் வெளியாகியிருந்தது. உண்மையில் அது 'அய்யாவழி' என்னும் வைகுண்டத்தோப்பு சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் காட்சி. வைகுண்டர் ஒருகாலத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட நாடார்சமூகத்தில் பிறந்தவர். பார்ப்பன - இந்துப்பெருமத மரபிற்கெதிராக மாற்றுவழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர். அக்காலகட்டத்தில் நாடார் இனப்பெண்களுக்குத் தோள்சீலை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதும் அதற்கெதிராகத் தோள்சீலைப் போராட்டம் நடந்ததும் வரலாறு. எனவே வைகுண்டர் காலத்துப் பெண்ணாய் நடிக்கும் நடிகை திரு. சுஜிபாலா ஜாக்கெட் அணியாமல்தான் நடிக்கமுடியும். ஆனால் இத்தகைய வரலாற்று அவலத்தைக் கூட 'கவர்ச்சி விருந்து' படைக்க பயன்படுத்திக்கொள்வது அவமானகரமான விசயம்.

பொதுவாகவே வரலாற்றைத் தவறாகவோ அரைகுறையாகவோ சித்தரிப்பதாகவே தமிழ்ச்சினிமாக்கள் இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தொடங்கி பெரியார் வரை இதில் அடங்கும். இந்தியன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தியதாக ஒரு காட்சி வரும். ஆனால் இந்திய வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களைப் பாலியல் சித்திரவதைகள் செய்ததாகவோ குறிப்புகள் இல்லை. ( இதுபற்றி ஒருமுறை பேசிய அருள்மொழி 'உண்மையில் வெள்ளைக்காரன் தன் பெண்டாட்டியை நேருவிடமிடமிருந்து காப்பாற்றத்தான் சுதந்திரம் கொடுத்து ஓடினான்' என்றார்.) ஆனால் மாறாக இத்தகைய - பெண்களைப் பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் கொடுமைகளை உள்ளூர் இந்திய ஆதிக்கச் சாதிக்காரர்களும் போலீசு ராணுவமும்தான் செய்தன, செய்துவருகின்றன.

வரலாற்றைக் கொலை செய்யும் திருப்பணியைத் திரைப்படங்களும் ஊடகங்களும் போட்டிபோட்டு செய்து வர, இதுகுறித்து எந்த உணர்வுமின்றி வெறுமனே நுகர்ச்சிக்கு அடிமையான நாம் எப்போது வரலாற்றுப் பிரக்ஞை உள்ளவர்களாய் மாறப்போகிறோம்?

Monday, June 16, 2008

தசாவாதாரம் < காமக்கதைகள் < டுபுக்கு

'நீலப் படங்களில் நிர்வானப் பெண்கள் ஏன் காலணிகளோடு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா ' என்று கேட்டேன் நான். 'காலனிநாடுகளில் தயாரிக்கப்பட்டு காலனியாதிக்கம் செய்யப்படும் மூன்றாம் உலகநாடுகளில் விற்பனையும் வினியோகமும் செய்யப்படுவதால்தான்' என்றான் அதீதன்.

மொழமொழன்னு யம்மா யம்மா மொழமொழன்னு யம்மா யம்மா என்றிருக்கும் முத்துராமலிங்கத்தைப் பார்த்தாலே கையடிக்கத்தோன்றுகிறது என்றும் சொன்னான் அதீதன். இந்தக் கதையில் ஏன் அதீதன் வந்தான் என்று நீங்கள் கேட்பதில் நியாயமில்லை. வெர்ஜினாவின் அறுபத்து மூன்றாம் உள்ளாடை தொலைந்துபோனதைப் போல இதுவும் ஒரு புதிரானதுதான். அப்போது வெர்ஜினாவிற்கு பதினெட்டு வயது தொடங்கியிருக்கும். ஷாப்ப்பிங்கிற்காக வெளிசென்றுவிட்டு உள்நுழைந்தபோதுதான் அறுபத்து மூன்றாவது தடவையாக தன் உள்ளாடை காணாமல் போனதைக் கவனித்தாள். அறையெங்கும் அவளது பொருட்கள் கலைத்துப் போடப்பட்டிருந்தன. முக்கியமாய் அவளது ஆடைகள். அவளது மேசையின்மேல் வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் வெர்ஜினாவின் சிகப்பு லிப்ஸ்டிக்கால் இப்படி எழுதப்பட்டிருந்தது.


















அவளுக்கு அப்போதைக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் பின்னாளில் பக்கத்து அபார்ட்மெண்டில் குடியிருந்த இருபத்தாறு வயது இளைஞனும் மொழமொழன்னு ஷேவ் செய்து தினமும் மழித்துக்கொள்பவனும் சாப்ட்வேர் பொறியாளனுமான ராம் அய்யரோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்ட ஒருநாளில்தான் அந்த குறியீட்டின் பின்னுள்ள ரகசியத்தைக் கண்டுபிடித்தாள்.

வெர்ஜினா தன் ஆடைகள் அனைத்தையும் களைந்திருந்தாள். படுக்கையில் அவள் படுக்கச் செல்வதற்குமுன் ராம் அய்யர் ஏசியை முழுவதுமாக நிறுத்தியிருந்தான். அவளுக்கோ வியர்த்துக்கொட்டியது. 'உன்னை உன் வாசனையோடேயே முகரவும் நுகரவும் வேண்டும் என்றான் ராம்.

அவளது உடலெங்கும் பிசுபிசுத்து மினுமினுத்த வியர்வைத்துளிகளை நாவால் சுவைத்துக்கொண்டே வந்த ராம் இறுதியில் வெர்ஜினாவின் கக்கங்களில் நிலைகொண்டான். அவளது கக்கங்களை நுகர்ந்தபடியே அவளைப் புணரத்தொடங்கினான். குறையொளிக்குகையாய்க் கக்கங்கள் திகழ அக்குள் அல்குலாய் முயங்கி மயங்க ராம் தன்னை இழந்துமீட்டபொழுதுகளின்பின் அவன் பாத்ரூமில் இருந்தபோது அதே அடையாளம் அவனது மேசைவிரிப்புகளில் இருந்ததைக் கண்டாள் வெர்ஜினா.

பாத்ரூமிலிருந்து வெளிவந்த ராமும் அவளது உள்ளாடைகளைக் கவர்ந்துவந்தவன் தான் தான் என்று ஒத்துக்கொண்டான். முக்கியமாக அவளது வட்டுடையின் அக்குள் பகுதியை முகர்ந்தபடியேதான் தன் சுயமைதுனம் உச்சத்தை அடையுமென்றான் ராம் அய்யர். அந்த ஓம் போலத் தோற்றமளிக்கும் சின்னத்தை உற்றுக்கவனித்தால் ஒருசமயத்தில் கக்கங்களைப் போலவும் மற்றொரு சமயத்தில் யோனியை நினைவூட்டுவதைப் போலவும் இருப்பதைக் காணமுடியும். தான் அறுபத்துமூன்று உள்ளாடைகளைக் கவர்ந்ததன் மூலம் தனது பித்ருக்களான அறுபத்துமூன்று நாயன்மார்களின் ஆன்மாக்களை சாந்திப்படுத்தியதாகவும் லிங்கத்தின் அடிப்பகுதியை நன்கு உற்றுக்கவனித்தால் அது பிரேசியரின் வடிவத்தை ஒத்ததாய் இருப்பதை உணர்ந்துகொள்ள முடியுமென்றும் சொன்ன ராம் அய்யர் கலவியின் மூலமாக ஆன்மீக அனுபவத்தை உய்த்துணரமுடியுமென்றான். காமம் மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் பார்த்தால் காமம் தெரியாது. அப்போது அவனது இன்னொரு நெருங்கிய நண்பனான கோபால் அய்யங்காரின் பூர்வீகக் கதையையும் வெர்ஜினா அறிய நேரிட்டது.

கோபால் அய்யங்காரின் முந்தைய பல்பிறவிகளிலொன்றாய் 12ம் நூற்றாண்டில் குலோத்துங்கச்சோழனின் ஆட்சிக்காலத்தில் கடும் பெருமாள் பித்தனாய் வாழ்ந்திருக்கிறான். நம்பியாழ்வார் என்னும் பெயர்கொண்ட அவனுக்கு சைவச்சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கச் சோழனின் மூலமாகவும் அவன்பின்னிருந்து இயக்கிய பரச்சமயமாகிய சைவச்சமயத்தைச் சேர்ந்த சைவர்கள் மூலமாகவும் பல சோதனைகள் நிகழ்ந்தன.

அந்த சோதனைகளின் உச்சகட்டமாக ஒரு கொடுமை அரங்கேறியது. யாருக்கும் தெரியாமல் உள்ளங்கையளவே இருக்கும் ஒரு பெருமாள் சிலையைத் தானே பிரதிஷ்டை செய்து அந்த சைவ இருள் சூழ்ந்த நாட்டில் வணங்கிவந்தான் நம்பியாழ்வார். ஒருநாள் இவ்விசயம் எப்படியோ சைவக்குரவர்கள் வழியாக மன்னனுக்குத் தெரியவர அரசுக்காவலர்கள் நம்பியின் வீட்டைச் சோதனையிட வந்தனர். அப்போது பெருமாளை எங்கே ஒளித்து வைப்பது என்று தெரியாது கலங்கி நின்ற நம்பி கடைசியாய் அதற்கொரு உபாயம் கண்டுபிடித்தான்.

தனது குதப்பகுதிக்குள் கஷ்டப்பட்டுப் பெருமாள் விக்கிரகத்தை நுழைத்துத் தன்னையும் பெருமாளையும் காப்பாற்றிக்கொண்டான். ஆனாலும் நம்பி தன் உயிர்துறக்கும் வரை பெருமாள் விக்கிரகத்தை வெளியே எடுக்கமுடியவிலையென்றும், குதம்வழியாக குடலில் வாழ்ந்ததால் அவர் குதம்நுழைபெருமாள் என்று பெயர் பெற்றார் என்பதும் அய்தீகம்.

இத்தனை நூறாண்டுகளையும் யுகங்களையும் ஜென்மங்களையும் தாண்டி இந்தப் பிறவியில்தான் அமெரிக்காவில் வசித்துவந்த கோபால் அய்யங்கார் சரியாக சென்ற வைகுண்ட ஏகாதசியன்று, அதாவது செப்டம்பர் 11ம் தேதி, முக்கி முக்கி வெளிக்குப் போகும்போதுதான் அந்த பெருமாள் சிலை வெளிவந்ததாகவும் சொல்லிமுடித்தபோது வெர்ஜினவின் அக்குள் முதல் அல்குள் வரையிலான ரோமங்கள் சிலிர்த்தன.

குறுக்கெழுத்துப்போட்டி




















இடமிருந்துவலம்


1. டூ + புடுக்கு =

2. இந்தக் கதையின் முதல்வரி யாருடையது?


3.

4.


5.

வலமிருந்து இடம்

4. இக்கதையின் இரண்டாம் பத்தியில் கிண்டலடிக்கப்படும் தேசியத்தலைவர்

5. நீலப்படங்களில் பெண்கள் காலணி மட்டும் அணிந்திருக்கும்போது ஆண்கள் இதை அணிந்திருப்பார்கள்.

8.

2.


மேலிருந்து கீழ்

1. நம்பி தற்காலப்பிறவியில் செல்லமாக அழைக்கப்படும் பெயர்.

2. பூணூல் - இந்த வார்த்தையில் இடையிலிருக்கும் ணூஎன்ற எழுத்தை எடுத்துவிட்டால் மிச்சமிருக்கும் சொல்

கீழிருந்துமேல்.

1. 'இந்தக் கதை காமத்தின் அதிகாரக் கட்டமைப்பை உடைக்கிறது. இப்படித்தான் அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று பின்னூட்டம் இடப்போகும் பதிவரின் பெயர்.

2. பூலளந்தப்பெருமாள் கோயில் உள்ள இடம்.