Monday, December 1, 2008

பூ - தமிழின் மகத்தான சினிமா





இதுவரை ஆண்கள் மட்டுமே ஆட்டோகிராப் வரைந்துகொண்டிருந்த தமிழ்ச்சினிமாப் பரப்பில் முதன்முறையாக ஒரு பெண்ணின் அதுவும் திருமணமான கிராமத்துப்பெண்ணின் காதல் நினைவுகளைத் தைரியமாய்ச் சொல்லும் படம்தான் பூ. திருமணமான பிறகும் பொங்கலுக்குத் தன் பழைய காதலன் வருவான் என்று பனைமரத்தினடியில் காத்திருக்கும் காதலியிடம் தோழி கேட்கிறாள். ''நீ இன்னும் தங்கராசுவை மறக்கலியா?''. கதை நாயகியின் பதில், அல்லது எதிர்க்கேள்வி இதுவரை தமிழ்ச்சினிமா கேட்டறியாதது, ''ஏன் மறக்கணும்?''. இப்படியான அரசியல் காரணங்களுக்காக மட்டுமின்றி, ஒரு அசல் சினிமாவின் பல்வேறு சாத்தியங்களையும் எத்தனித்திருக்கிறார் இயக்குனர். தமிழ்ச்சினிமாவில் அதிகம் பேசப்படாத சிவகாசி நாடார்களின் வாழ்வியலைப் பேசும் படம். முகத்தில் இத்தனை உணர்ச்சிகளைக் காட்டுவதில் கதைநாயகி பார்வதி தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஷோபா. சமகாலச் சாம்பார் சிறீகாந்த், சில செயற்கையான காமெடிக் காட்சிகள், படத்தில் ஒட்டாது தனித்துத் தெரியும் பரவை முனியம்மா பாடல்காட்சி இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இயக்குனர் சசி ஒரு மகத்தான சினிமாவைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். படம் பற்றி இன்னும் கூடுதலாக எழுதினால் அது தந்த பரவசத்தை இழந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். நீங்களும் பாருங்கள்.

Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரம் - ஜிகினாப் பேப்பருக்குள் சில பீ உருண்டைகள்

பார்ப்பனீய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, போலீசு எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைக்கும் எதிர் அரசியலாளார்களாகிய நாம் தமிழ்ச்சினிமாவில் செருப்பாலடிக்க வேண்டியவர்கள் பட்டியலில் கௌதம்வாசுதேவ மேனனுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்ற போலீசுப் படங்களைக் கொடுத்த மேனனுக்கு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்னும் போலீஸ் பொறுக்கிகளைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்திய பெருமை உண்டு. இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட 28 என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்களில் 20 பேர் தலித்துகள் என்னும் உண்மை உறக்கும்போது மேனனை ஏன் செருப்பாலடிக்க வேண்டும் என்பது மட்டுமில்லாது எந்த செருப்பால் அடிக்க வேண்டும் என்பதும் விளங்கும்.

வாரணம் ஆயிரம் - தவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும். காஷ்மீர்ப் பிரச்சினை, திராவிட இயக்கங்கள் குறித்து எந்த அறிவுமின்றி எடுக்கப்பட்ட ரோஜா, இருவர் என்று பட்டியல் நீளும். உண்மையில் திராவிட இயக்கம் குறித்து காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தது அமைதிப்படையே தவிர இருவர் அல்ல. கமலின் ஹேராம் உள்ளிட்ட படங்களின் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் படைப்பிற்கான அவரது உழைப்பு மீது எனக்கு மரியாதை உண்டு. இருவரோ ஒரு பீரியாடிக்கல் படத்திற்கான எந்த உழைப்புமில்லாத, மொழிமாற்றம் செய்யப்படட் ஒரு ஆங்கில நாடகத்தைப் போன்றுதான் இருக்கும். சரி, வாரணம் ஆயிரத்திற்கு வருவோம்.

சூர்யா, அவரது பாசமுள்ள அப்பா கிருஷ்ணா, (இன்னொரு சூர்யா) ஆகியோருக்கிடையிலான உறவு குறித்து முன்வைக்கும் பாவனையில் பல அபத்தங்களையும் ஆபத்துக்களையும் படம் முன்வைக்கிறது. வழக்கமாக தமிழ்ச்சினிமா நாயகர்கள் சிலுக்குவார்பட்டியிலிருந்து தங்கள் காதலியைத் தேடி சிங்காரச்சென்னைக்கு வருவார்கள். ஆனால் மேனன் ஒரு 'உயர்தர' இயக்குனர் அல்லவா? நாயகன் சூர்யா காதலியைத் தேடி அமெரிக்கா போகிறார். ''காதலியைத் தேடிப்போகிறேன்'' என்றதும் தூதரக அதிகாரி சிரித்துக்கொண்டே விசா வழங்குகிறார். கமல்ஹாசனின் டவுசர் விமானநிலையத்தில் கழற்றப்பட்டதைச் சாமர்த்தியமாக மேனன் மறைத்திருக்கிறார். ஜார்ஜ் பெர்ணாண்டஸ் இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஜட்டியை இறுக்கப் பற்றிக்கொண்டதாகக் கேள்வி.

அமெரிக்காவில் காதலிக்கும் பெண் குண்டுவெடிப்பில் இறந்துவிடுகிறார். (வேறு யார் குண்டுவைக்கப் போகிறார்கள், 'முஸ்லீம் தீவிரவாதிகளை'த் தவிர). அப்புறம் காதல் தோல்வியின் சோகத்தில் சிகரெட், கஞ்சா, பெத்தடின் என்று படிப்படியாய் முன்னேறுகிறார் சூர்யா. திடீரென்று அவர் காஷ்மீர் கிளம்பிப் போகும்போது மேனன் தன் புத்தியைக் காட்டப்போகிறாரோ என்று பயமாயிருந்தது. ஆனால் ஒரே காட்சியில் காஷ்மீர் முடிந்ததும் நிம்மதி வந்தது. இருந்தாலும் மேனன்னா சும்மாவா? தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மகனை டெல்லியில் கடத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் சூர்யா டெல்லிக்குக் கிளம்பிப் போகிறார்.

டெல்லியின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து, குழந்தை ஆதித்யாவைக் கடத்தியவர்களைக் கண்டுபிடித்துவிடுகிறார். குழந்தைகளைக் கடத்திக் கோடிக்கணக்கில் பேரம் பேசுபவர்கள், பெண்களைக் கடத்தி மாமா வேலை பார்ப்பவர்களின் பெயர்கள் டப்பு மாலிக், ஆசாத், பின்னணியில் மசூதி, பாங்கோசை, அப்புறம் கௌதம் வாசுதேவ மேனனின் விறைத்துநிற்கும், சுன்னத் செய்யப்படாத இந்துக்குறி. ங்கோத்தா பாடுகளா!

ஒரு இந்துக்குழந்தையை முஸ்லீம் கிரிமினல்களிடமிருந்து காப்பாற்றிய சூர்யா என்ன செய்வார்? இதற்கிடையில் கௌதம் மேனனுக்கு 'என்னடா, தன் டிரேட் மார்க் டுமீல் டுமீல் துப்பாக்கிச் சத்தத்தைக் காணோமே' என்று தோன்ற, கரெக்ட், சூர்யா மிலிட்டரியில் சேர்கிறார். 'தனக்குச் சிறுவயதிலிருந்தே மிலிட்டரியில் சேர வேண்டும் என்கிற அரிப்பு இருந்ததாகவும்' சூர்யா சொல்கிறார். எனக்கென்னவோ கஞ்சா, பெத்த்தடின், அமெரிக்கக்காதலி புணர்ச்சி என்று போதையேறிப் போன சூர்யா, மிலிட்டரி சரக்கு மற்றும் பழங்குடிப் பெண்களின் உடல்களுக்காக மிலிட்டரியில் சேர்கிறாரோ என்று தோன்றியது.

மிலிட்டரியிலோ தினம் தினம் சண்டை நடக்கிறது. வழக்கமான தமிழ்ச்சினிமா கதாநாயகன்களைப் போல பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டையும் சூத்தையும் காப்பாற்றுகிறார். அப்பா கிருஷ்ணா மண்டையைப் போடும் சமயத்திலும் யாரோ ஒரு பெண்ணைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் ஜெய்ஹிந்த் இந்தியன். படம் முழுக்க, 'டாடி, (அதென்னடா அம்மாவை மட்டும் அம்மா என்று கூப்பிடுகிறீர்கள்?), லவ், தஸ், புஸ்' என்று முக்கால் படத்தில் இங்கீலீஷ் பேசிவிட்டுக் கடைசியில் 'வாரணம் ஆயிரம்' என்னும் ஆண்டாளின் பாடலுக்கு அர்த்தம் சொல்லிச் சிம்ரன் முடிக்க, பார்வையாளர்கள் அடித்துப் பிடித்துத் தியேட்டரை விட்டு ஓடி வருகிறார்கள்.

துப்பாக்கியல்ல, மேனனின் 'இந்துக் குறி'!






இடையில் ஒரே பாட்டில் என்ன இழவு வேலை பார்த்தோ சம்பாதித்து நின்றுபோன வீட்டைக் கட்டிமுடிப்பது, ஒரே பாட்டில் ராணுவத்தில் மேஜராவது போன்ற ஹைடெக் விக்ரமன் தனக் கூத்துகளுக்கும் பஞ்சமில்லை. அப்பா சூர்யாவைப் போலத்தான் அம்மா சிம்ரனும் சூர்யா மீது பாசமாக இருக்கிறார், சுதந்திரம் கொடுக்கிறார். ஆனால் ஏன் அப்பா மீது மட்டும் சூர்யாவுக்கு இவ்வளவு பிரியம் என்று தெரியவில்லை. வழக்கம் போல கௌதம மேனன் படத்துப் பெண்களைப் போலவே முதல் பாதியில் கித்தாரை வருடியபடி ஒரு காதலியும் பின்பாதியில் துப்பாக்கியை வருடியபடி ஒரு காதலியும் சூர்யாவுடன் 'படுத்து விட்டுப்' போகிறார்கள். போர்நடைமுறைகள் கூடத் தெரியாது முட்டாள்தனமாக ராணுவக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மிஷின்கன்னை முதுகிலேயே வைத்துக்கொண்டு வெறும் பிஸ்டல்களால் மட்டும் சூர்யா சுடும்போது. 'ஒருவேளை முதுகில் இருப்பது கித்தார் என்று நினைத்துவிட்டாரோ' என்று நினைக்கத்தோன்றுகிறது.

இந்த மூன்றரை மணிநேரக் குப்பை நிச்சயமாக ஜெயிக்கப் போவதில்லை. அதுவும், பி, சி, பார்வையாளர்கள் படத்தின் மீது ஒண்ணுக்குத்தான் அடிப்பார்கள் என்பது ஆறுதலான செய்தி. போட்ட காசு வாராததால் மு.க.அழகிரி கௌதம் வாசுதேவ மேனனின் முதுகில் தோரணம் ஆயிரம் கட்டப்போவது வேறு விஷயம். ஆனால் இந்தக் குப்பையை 'உலக சினிமா' என்று எழுதிய சில அபத்தப் பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. தரமான இசை மற்றும் ஒளிப்பதிவு, சூர்யா என்னும் மகத்தான கலைஞனின் அபாரமான உழைப்பு என்னும் ஜாக்லேட் ஜிகினாப்பேப்பருக்குள் பார்ப்பனப் பாசிச மலத்தை (நன்றி : தோழர் பைத்தியக்காரன்)ப் பொட்டலம் கட்டித் தந்திருக்கிறார் மேனன். இந்த முஸ்லீம் விரோதச் சினிமாவை ஆசிப் மீரான் போன்ற இஸ்லாமியத் தோழர்களும் கொண்டாடுவது பயமாயிருக்கிறது. இதற்குப் பெயர்தான் உலகசினிமா என்றால் நம் பெண்களுக்கு நாப்கின் வாங்குகிற செலவு மிச்சம். இந்த உலக சினிமாக்களில் தூமையைத் துடைத்து மேனன்களின் முகத்தில் எறிவோம்.

Monday, November 10, 2008

ஜ்யோவ்ராம்சுந்தருக்கான பதில்கள்

? 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

தெரியவில்லை.

?2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஏகன். அதற்கு முன் துரை. ஜெண்டில்மேனுக்குப் பிறகு திரையரங்கில் பார்த்த அர்ஜூன் படம். அர்ஜூன் படங்களையும் விஜயகாந்த் படங்களையும் பேருந்துப் பயணங்களில் மட்டுமே பார்க்க (விபத்து?) 'நேர்வதுண்டு'. தொழில் நிமித்தம் திரையரங்கில் துரை மாதிரியான கொடுமைகளை அனுபவிக்க வேண்டி நேர்கிறது.

? 3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கள்ளக்குறுந்தகடில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம். படத்தில் இரு ஆச்சரியங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். படத்தின் முதல் காட்சியிலிருந்து பெரும்பாலான காட்சிகள் நீளமான ஷாட்கள். பொதுவாக பாலுமகேந்திராவின் 'வீடு', 'சந்தியாராகம்' மாதிரியான தமிழர்களால் ஆர்ட்பிலிம் என்று ஒதுக்கப்பட்ட படங்களில் மட்டுமே இத்தகைய நீளமான ஷாட்கள் அமைவதுண்டு. ஆனால் சுப்பிரமணியபுரம் நீளமான ஷாட்களைக் கொண்டிருந்தும் வெற்றிகரமாக ஓடியது ஒரு ஆச்சரியம். இரண்டாவது காதலையும் நட்பையும் 'கொண்டாடும்' தமிழ்ச்சினிமா உலகில் காதலி மற்றும் நண்பனின் துரோகத்தைச் சொன்ன படம். பொதுவாகத் திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் பார்க்கப்படுவது தவிர்க்கமுடியாதது. இங்கு நாயகியின் குடும்பம் பிள்ளைமார்க்குடும்பம் (வீட்டில் வ.உ.சியின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும்.) நாயகன் மற்றும் நண்பன் பரமுவின் சாதியும் அஃதே. ஆனால் கஞ்சாகருப்புவும் திருவிழாவில் பொறுப்பு வகிக்கும் அந்த மீசை பெரிசும் அனேகமாகத் தேவர் சாதியாக இருக்கலாம். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்தும் அதிகாரம் பிள்ளைமார்க் குடும்பத்திலிருந்து தேவர் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு மாறுவதனால் ஏற்படும் மன உளைச்சல், அரசியல் கட்சியில் பிள்ளைமார்ச் சாதி அதிகாரத்தைக் கைப்பற்றுதல், அதற்காகத் தன் சாதி இளைஞர்களையே அடியாட்களாகப் பயன்படுத்திக்கொள்ளுதல் என பல பார்வைகள் உற்றுநோக்கின் விரியும்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய. தமிழ்ச்சினிமாக்கள் தாக்காத தமிழர்கள் உண்டா என்ன? ஒரு காலகட்டம் வரைக்கும் சினிமாவில் தெரியும் கதாநாயகப் பிம்பனின் அசைவுகள், உடல்மொழி வரை என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்கிற மனோபாவம் இருந்தது. இந்த தாக்கம் திரையரங்கை விட்டு வெளியிலில் வந்த பின்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இப்போது அந்த தாக்கம் இருப்பதில்லை. நாயகன்களை விட நாயகிகளுக்காகவே படங்கள் பார்க்க விருப்பம். மீண்டும் மீண்டும் பார்த்த படங்கள் அனேகம். வசந்த மாளிகை, புதிய பறவை, பாட்ஷா, அமைதிப்படை, பூவிழிவாசலிலே, காதல்கொண்டேன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நான் திமுக குடும்பத்திலிருந்து வந்தவன். சின்னவயதில் டி.ராஜேந்தர் படங்களைக் குடும்பத்தோடு பார்க்கும் பழக்கம் உண்டு. (அந்த கொடுமைகள் மட்டுமல்ல, கலைஞர் வசனம் எழுதிய பாலைவன ரோஜாக்கள், நீதிக்குத் தண்டனை, ராமநாராயணன் இயக்கிய சகாதேவன்மகாதேவன், தங்கமணி ரங்கமணி படங்களையும் பார்த்ததுண்டு.) டி.ராஜேந்தர் திமுகவை விட்டு வெளியேறியது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதற்கப்புறம் பெரிய அதிர்ச்சி என்றால் கல்லூரி படிக்கும்போது சில்க்சுமிதாவின் தற்கொலை. சுமிதா என்னை ஈர்த்த நடிகை அல்ல. ஆனாலும் அவர் மீது ஏதோ கரிசனமோ அனுதாபமோ இருந்தது. ஏனென்று தெரியவில்லை. பொதுவாக நடிகைகளிடம் கேட்பதற்கென்று பத்திரிகையாளர்களிடம் சில கேள்விகள் உண்டு. கவர்ச்சியாக நடிப்பீர்களா மாதிரியான 'மாற்றம் என்பதே மாறாத ஒன்று' கேள்விகள். அதில் ஒன்று ''சினிமாவில் நடிக்கவராவிட்டால் என்ன செய்வீர்கள்?'' என்பது. ''டாக்டராகியிருப்பேன், லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகியிருப்பேன்' என்று நடிகைகளிடமிருந்து வித விதமாய்ப் பதில் வருவது வழக்கம். ஆனால் சுமிதா சொன்ன பதில், 'நக்சலைட் ஆகியிருப்பேன்' என்பது. அவரின் ஆந்திராவில் நக்சல் இயக்கத்தின் செல்வாக்கும் சுமிதாவின் இளமைக்கால வறுமையும் அவரை அப்படிச் சொல்ல வைத்திருக்கலாம். அவர சென்னையில் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதும் மக்கள் யுத்தக்குழுவிற்குப் பொருளாதார ரீதியாக உதவியாகச் செய்திகள்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?


மணிரத்னம் - ரகுமான் வருகையின் போது இசைவடிவங்கள் மாறியது. அப்புறம் டி.டி.எஸ். திரையரங்கில் புதிய அனுபவமாக இருந்தது. முதன்முதலாக சென்னையில் ஐநாக்ஸ் திரையரங்கிற்குப் போனபோது போஸ்டர் கூட ஒட்டாமல் ஒரு தியேட்டர் இருப்பது சாத்தியமா என்று ஆச்சரியப்பட்டேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய வண்ணத்திரை கிசுகிசுக்கள் தொடங்கி சிறுபத்திரிகை இதழ்களின் சினிமா கட்டுரைகள், சினிமா தொடர்பான புத்தகங்கள் என்று.

7. தமிழ்ச்சினிமா இசை?

ம்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?


இந்திய சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை. உலக சினிமாக்கள் பார்த்துண்டு. சில்ட்ரன் ஆப் ஹெவன், பை சைக்கிள் தீவ்ஸ், சர்க்கிள், அகிரோ குரோசாவாவின் 'டிரீம்ஸ்' என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சினிமா நண்பர்கள் சில பேர் பழக்கம் உண்டு. அதுபோக, ஒருமுறை 'சீன்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. (இதைச் சினிமா அனுபவத்தில் சேர்த்துக்கொள்ளலாம்தானே!)அப்புறம் அனிமேஷன் படங்களுக்கான ஸ்கிரிப்ட் உதவி செய்ததுண்டு. பிடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் செய்வதற்கு விருப்பம் உண்டு. ஆனால் தமிழ்ச்சினிமா மேம்படவெல்லாம் அது மயிரளவும் உதவாது என்றுதான் கருதுகிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், பாலா, மிஷ்கின், செல்வராகவன் என்று நம்பிக்கையூட்டும் இளம் இயக்குனர்கள் இருப்பதனால் பல ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்றுதான் நம்புகிறேன். 80களில் பெரிய அலைகளை ஏற்படுத்திய பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா ஆகியோரின் காலம் முடிந்து இது புதிய அலைக்காலம். நிச்சயம் நல்ல சினிமாக்கள் நிறைய வரும். ஆனால் வெளிப்படையாக அரசியல் பேசுகிற யாரும் தமிழ்ச்சினிமாவில் மாற்றத்தை ஏற்பத்தவில்லை. அதேபோல் ஷங்கர், மணிரத்னம் மாதிரியான வலதுசாரி இயக்குனர்கள் புதிய தொழில்நுட்பங்களைத் தமிழ்ச்சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதற்குப் பயன்படுவார்களே தவிர பயப்படும்வகையில் இவர்களுக்கான எதிர்காலம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நாட்டாமை, கண்ணீர்க்குடும்பம் கன்றாவிகளைச் சுமக்கும் நிலப்பிரபுத்துவச் சினிமாக்களும் ஜெயிக்கப்போவதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர்கள் தாமாகவே புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குப் போய்வார்கள் ((-. தம்பி படத்தின் நூறாவது நாள் விழாவில் பாலுமகேந்திரா பேசியது நினைவுக்கு வருகிறது. ''தமிழர்களுக்கு இசை என்றால் அது சினிமா இசை, கவிதை என்றால் அது சினிமா பாடல், பேஷன் என்றால் நடிகர்களின் உடைகள்''. நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. ஸ்கைலாபு, ஒய் டூ கே மாதிரியான பதில்கள் தெரியாத, குழப்பமான, 'ஜீவாதாரப்' பிரச்சினைதான். சினிமா இல்லாத தமிழர்களின் வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியவில்லை.

அழைக்கும் 5 பேர்கள்

1. பொட்டிக்கடை சத்யா.
2. தமிழ்நதி
3. பைத்தியக்காரன்
4. பாமரன்
5. வரவணையான்.

( கமர்சியல் பிரேக்)

Monday, November 3, 2008

கவுண்டமணி : சர்ச்சைகளும் சால்ஜாப்புகளும் அப்பால ஜ்யோராம்சுந்தரும் நாகார்ஜுனனும்

ஒரு பிரதி வாசகனின் முன் வாசிப்பை வேண்டி நிற்கும்போதே தனக்கான விருப்பத்தைப் பொதிந்து வைத்திருக்கிறது. அது வாசிப்புக்கல்ல என்னும் பம்மாத்தையும் அடர்த்தியான கருத்தாங்களீன் ஊடே பொருண்மையான கூறுகளையும்பொதிந்து வைப்பதன் மூலம் அது புதிர்ப்பிரதியாக உருமாற்றமடைகிறது.

- ‍நியோலி பானிஹ்


'கவுண்டமணி குறித்து எழுத வேண்டும் என்று ஆசை' என்று பதிந்து ஒரு வாரமாகியிருக்கும். நண்பர் பாலபாரதியின் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது, '' எம்.ஆர்.ராதாவைப் பற்றி நீங்கள் எழுதியதைப் போல கவுண்டமணியைப் பற்றியும் எழுதுவீர்களா?'' என்று கேட்டிருந்தார். அப்போது திக்கென்றிருந்தது. ஏனெனில் ராதா குறித்து எழுதுவதைப் போல கவுண்டமணி பற்றி விரிவாக எழுதுவதற்கான தரவுகள் இல்லை. ராதா ஒரு இயக்கம் சார்ந்த ஆளுமையாக இருந்ததால் இயக்கத்தின் வரலாறு ஊடேயே ராதா குறித்த தகவல்களும் கிடைக்க ஏதுவுண்டு. ஆனால் கவுண்டமணி குறித்து அணுகுவதற்கு கவுண்டமணியின் நகைச்சுவையைத் தாண்டி ஒன்றுமில்லை. கட்டுரையின் மூன்றாம் பகுதி 'உருப்படியாய்' வந்திருப்பதாக சுந்தர் உள்ளிட்ட நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். டுவிட்டரிலும் கவுண்டமணி விவாதம் பட்டையைக் கிளப்பியதாக அறிந்தேன். வலையுலகிலும் கணிசமான அளவு.

என்றபோதிலும் இப்போதைக்குக் கவுண்டமணி குறித்த தொடரை நிறுத்தி வைக்கிறேன். ஏனெனில் இதுவரை நான் எழுதியதில் எனக்குத் திருப்தியில்லை. இன்னும் கொஞ்சமாவது உழைக்கவேண்டும். சுந்தர் சொல்லியது போல கவுண்டமணியின் நகைச்சுவைக்காட்சிகள் தொகுக்கப்பட்ட ஒளிப்பேழைகளைப் பார்க்கவேண்டும். ராஜ் வீடியோ விஷனில் கிடைக்கும். இப்போதைக்கு அதற்கு நேரமில்லை. வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒழுங்காய் உழைத்து எழுதலாம். அல்லது ரோசா வசந்த், ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாத நாராயணன் போன்ற சான்றோர்கள் யாரேனும் தொடர்ந்தாலும் நலம்.

இப்போதைக்குக் கவுண்டமணி பதிவுகள் குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்துப் பார்ப்போம். இந்த விமர்சனங்கள் என் மீதான தனிப்பட்ட தாக்குதலாகவும் மாறியது குறித்து நான் பெரிதாய்ப் பேச விரும்பவில்லை. விரும்பாததன் காரணம் நான் ஒரு பெரும்பத்திரிகையில் போய்ப் 'பம்மி'யிருப்பதனால் அல்ல. கல்லூரி முடித்த காலத்திலிருந்தே ஏதேனும் ஒரு வேலை பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். முழுநேர இலக்கியவாதியாகவோ/கலைஞன்/கலகக்காரனாகவோ வாழ்வதற்கான சூழ்நிலைகள் ஏதும் வாய்க்கவில்லை. மேலும் நான் பெரும்பத்திரிகையில் பம்மி விட்டதாக விமர்சிப்பவர்கள் உணவுக்கு முன்பு ஒருமுறையும் உணவுக்குப் பின்வு ஒருமுறையும் புரச்சி செய்வதற்கான சான்றாதாரங்களும் இல்லை. ஆனால் இந்த சர்ச்சையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம். என் மனைவி ஜெயந்தியை அவள், இவள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்ட ஒரு பதிவு. (ஏற்கனவே திருமணமான புதிதில் வந்த நள்ளிரவு தொலைபேசி மிரட்டல்களுக்கு அடுத்து இது மன உளைச்சலை ஏற்படுத்தியது) மேலும் அந்தப் பதிவு வாசகர் பரிந்துரையிலும் வந்தது. பொதுவாகத் தனிநபரைத் தாக்குகிற (அ) விமர்சிக்கிற பதிவுகள் சூடான இடுகைகளில் வருவதில் ஆச்சரியமில்லை. (என்னுடைய சில பதிவுகள் கூட அவ்வாறு வந்துள்ளன.) ''சுகுணாதிவாகருக்குச் சாமான் சிறிசா?'' என்று நீங்கள் ஒரு பதிவு எழுதினால் அது சூடான இடுகையில் வரலாம், வாசகர் பரிந்துரையிலுமா? வாழ்க வாசகர்கள் மற்றும் அவர்தம் பரிந்துரைகள்.

கிடக்கட்டும். இனி விமர்சனங்கள்...

1. முதலில் சுகன் குறித்த விமர்சனம்... ஏதோ சுகனுக்கும் எனக்கும் வாய்க்கால் சண்டை போலவும், அதனாலேயே நான் அவரைச் 'சீண்டினேன்' என்பது போலவும் எழுதுவது மகா அபத்தம். ஈழப்பிரச்சினை, தலித்தியம், அதிகார மறுப்பு, எதிர் இலக்கியம், பவுத்தம், பெண்ணியம், பெரியாரின் பொருத்தப்பாடுகள் என்று நானும் சுகனும் ஒத்துப்போகும் புள்ளிகள் பல. ஷோபாசக்தியும் சுகனும் தொகுத்துள்ள 'கருப்பு', 'சனதருமப்போதினி' இரு தொகுப்புகளிலும் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. எனக்கும் சுகனுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான எந்த முகாந்திரங்களுமில்லை. ஆனால் சுகன் என் நண்பர் என்பதற்காகவே அவரை விமர்சிக்கவே கூடாது என்பது என்ன ஞாயம்? யமுனாராஜேந்திரன் குறித்த சுகனின் மொழிதலையே நான் விமர்சித்திருந்தேன்.எனக்கும் யமுனா மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக மணிரத்னம், கமல்ஹாசன் குறித்த அவரது கருத்துக்களின் மீது. 'குருதிப்புனல்' திரைப்படம் துரோகாலை விட சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது, குருதிப்புனலின் தீவிரவாதிப் பாத்திரம் ஈழப்போராளிகளைக் குறிக்கிறது என்றெல்லாம் யமுனா எழுதிக்குவித்த அபத்தங்கள் ஏராளம். ஆனால் நான் இங்கு சுகனை விமர்சித்தது ஒரே ஒரு காரணம் தொட்டு.

'ரவிக்குமார் ஒரு தலித் விரோதி' என்று யமுனா சொன்னதாலேயே அவரைக் 'கவுண்டர் கல்ச்சர்' என்று சுகன் விமர்சித்திருந்தார். ரவிக்குமார் தலித் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்று யமுனா மட்டும் சொல்லவில்லை, கோகுல்நாத்காந்தி, பியூச்சர் ராதா முதலான தலித்துகளே சொல்லியிருக்கிறார்கள். அதிலும் கோகுல்நாத்காந்தி அர்பன் தலித்தோ டர்பன் தலித்தோ அல்ல. போஸ்டர் ஒட்டுவதையே தனது பிழைப்பாகக் கொண்ட கடைநிலைத் தலித். அவர் 'ரவிக்குமாரின் பொய்முகம்' என்று சிறுவெளியீடே கொண்டுவந்திருக்கிறார். அவ்வளவு ஏன், ஷோபாசக்தி - அ.மார்க்ஸ் உரையாடலில் (தீராநதி அக்டோபர் 2008) விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு ஈழத்திலுள்ள சாதிப்பிரச்சினைகளை மூடிமறைத்து தலித்துகளுக்குத் துரோகமிழைப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதனால் ஷோபாவிற்கு சாதிய முத்திரை குத்துவதோ அல்லது தலித் விரோதி என்று சொல்வதோ நியாயமா என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடுகள் உண்டு. தலித் அரசியல், தேசிய அரசியல், வர்க்க அரசியல் என்று. நமது அரசியல் நிலைப்பாடுகளில் பொருந்தி வராதவர்களின் மீது இத்தகைய அடையாளங்களைச் சுமத்தி விடலாமா என்பதே என் கேள்வி. மேலும் தமிழச்சி சுகன், சோபாசக்தி குறித்து எடுக்கும் வாந்திகளுக்கும் அதற்கும் எத்தொடர்புமில்லை. நான் ஏதோ தமிழச்சி ரசிகர் மன்றத்தின் சென்னைக் கிளை தலைவர் என்பதாகப் பாவித்து அவதூறுகளைச் சுமத்துவது நீதியாகாது. அ.மார்க்ஸ், ஷோபா, சுகன் மாத்கிரியான தோழர்களின் உழைப்பு குறித்தும் பங்களிப்புகள் குறித்தும் எந்தவித அறிவுமற்ற தமிழச்சியின் கேணத்தனமான கிறுக்கல்களுக்காக நான் சுலுவை சுமக்க ஏலாது. மேலும் 'சுகனை விமர்சிக்கக்கூடாது' என்பதோடு' இந்த குரல் நிற்கவில்லை. சுந்தரை விமர்சிக்கக்கூடாது, அய்யனாரை விமர்சிக்கக்கூடாது, பைத்தியக்காரனை விமர்சிக்கக்கூடாது என்றெல்லாம் நீள்கிறது. அவர்கள் இந்தக் கணம் வரை எனக்கும் நண்பர்களே. ஆனால் இதற்காக விமர்சிக்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்பதெல்லாம் 'சின்னப்புள்ளத்தனம்' இல்லையா? அப்படியே நான் 'சீண்டுவதாகக்' கருதினால் அதற்கு சுந்தரோ அய்யனாரோ பைத்தியக்காரனோ பதில் சொல்ல மாட்டார்களா என்ன? தனித்துவமும் சுயமரியாதையும் உள்ள இந்த நண்பர்களை ஏதோ 'யெஸ் பாஸ்' சொல்லும் அடியாட்களைப் போல பாவித்து 'விமர்சிக்காதே' என குரலெழுப்புவது எதேச்சதிகாரம் அல்லாது வேறென்ன? சுந்தரை மட்டுமல்ல, எனக்காக கச்சை கட்டிய செந்தழல் ரவி, ஓசை செல்லா, லக்கிலுக், வரவணையான், பொட்டிக்கடை சத்யா, தமிழச்சி, பெயரிலி என நான் எல்லோரையுமே பல சந்தர்ப்பங்களில் விமர்சித்திருக்கிறேன். சுகன் மீதான விமர்சனம் என்பது கட்டுரையின் தொடக்கப்புள்ளியே தவிர மய்யப்புள்ளி அல்ல.

2. கவுண்டமணியை சாதி எதிர்ப்புப் போராளியாகச் சித்தரிக்கிறேன் என்பது இன்னொரு அபத்தம். ராதாவைப் போல இயக்கம் சார்ந்த கலைஞன் அல்ல மணி. ஆனால் 'நமது கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதி காப்பாற்றும் மதம், நமது இலக்கியம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்' என்று பெரியார் சொன்னதோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். நமது சினிமா சாதி காப்பாற்றும் சினிமா. இந்த சாதி காப்பாற்றும் சினிமாவில் அதற்கு எதிரான கூறுகள் சிந்திச் சிதறிக் கிடந்தபோதும் அதைத் தொகுத்துப் பதிய வேண்டியது நமது பொறுப்பு. தமிழ்ச்சினிமாவில் அப்படித் தப்பித் தவறி அங்கொன்றும் இங்கொன்றுமாக தெறிக்கும் மாற்றுக் கூறுகளின் மீது கவனம் குவிக்க வைப்பதே என் நோக்கமல்லாது கவுண்டமணியைச் 'சினிமா அம்பேத்கர்' ஆகச் சித்தரிப்பது அல்ல.

3. கவுண்டமணி ஸ்கிரிப்டில் உள்ள வசனங்ககளையே பேசுவார் என்பது, குசேலனில் ரஜினி சொன்னதைப் போன்றதொரு அபத்தம். வெறுமனே ஸ்கிரிப்டில் இருப்பதை அப்படியே ஒப்பிப்பதற்குக் கவுண்டமணி போன்ற ஆளுமை தேவையில்லை. ஒருபுறம் கவுண்டமணி ஸ்கிரிப்டில் இருப்பதையே ஒப்பிக்கிறார் என்று குற்றம் சாட்டுவது, மறுபுறம் கவுண்டமணியின் நகைச்சுவை வக்கிரமானது என்பது... என்னவொரு முரண்பாடு?

4. கவுண்டமணி செட்டில் மற்ற நடிகர்களை மதிக்கமாட்டார் என்னும் குற்றச்சாட்டு பொதுப்புத்தி சார்ந்த அற்பமான குற்றச்சாட்டு. 'செட்டில் மதிப்பது' என்றால் தமிழ்ச்சினிமா உலகத்தைப் பொறுத்தவரை, கதாநாயக நடிகர்கள் செட்டில் வந்தவுடன் எழுந்து நின்று வணக்கம் போடுவது, கூஜா தூக்குவது ஆகியவைதான். இங்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சில்க்சுமிதா ஒருமுறை செட்டில் சிவாஜிகணேசன் நுழைந்தபோது கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாராம். அதைப் பார்த்து கொதிப்படைந்த சிவாஜி அதற்குப் பின் பல படங்களில் தனது படத்தில் சில்க்கைப் புறக்கணித்தாராம். பின்பு சக நடிகை ஒருவர் சில்க்கிடம் கேட்டபோதுதான், தனக்குக் கொடுக்கப்பட்ட உடை மிகவும் டைட்டாக இருந்ததாகவும் காலைக் கீழே போட்டால் மிகவும் ஆபாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தாராம். (கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட சில்க்சுமிதா குறித்த புத்தகம்). இப்படிப் பல்வேறு சிக்கல்கள் தமிழ்ச்சினிமாவில் உண்டு. பானுமதி, எம்.ஆர்.ராதா தொடங்கி கவுண்டமணி மாதிரியான கலைஞர்கள் இத்தகைய 'மரியாதைகளை' கதாநாயக நடிகர்களுக்கு வழங்குவதில்லையென்றால் அவர்களின் சுயமரியாதையைப் பாராட்டி அவர்களின் பக்கம் நிற்பதுதான் நீதியாகுமே தவிர, 'கவுண்டமணி மதிக்காததால் அவரைத் 'தட்டி' வைத்தார்கள் என்று அல்ப சந்தோசப்பட்டுக்கொள்வது' நீதியாகாது.

பெரிதாய்ப் பிலிம் காட்டப்பட்ட சீறிதர் நாராயணனின் பதிவையும் நாட்கள் கழிந்துதான் படிப்பதற்கான சூழல் வாய்த்தது. பிறகு அது ஒரு சப்ப மேட்டர் என்று தெரிந்தது.

சிறீதர் நாராயணனின் பதிவின் சாராம்சக்கூறுகள்.

1. கவுண்டமணியின் காமெடிக்கு லிமிட்டேசன்ஸ் உண்டு.

2. அவர் சந்திரபாபுவை விட பெரிய நடிகர் இல்லை.

3. இன்று வலைப்பதிவர்கள் பலர் பயன்படுத்தும் வார்த்தைகள் வடிவேலுவின் காமெடியிலிருந்தே பயன்படுத்தப்படுகிறது, கவுண்டமணியின் நகைச்சுவையிலிருந்து அல்ல.

4. வடிவேலுவின் நகைச்சுவைத்தான் 'நச்சு' இல்லாதது. கவுண்டமணியின் நகைச்சுவை மற்றவர் மனங்களைப் புண்படுத்துவது.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. கவுண்டமணிக்கு லிமிட்டேசன்கள் இருக்கிறதுதான். யாருக்குத்தான் லிமிட்டேசன்கள் இல்லை? கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவைக்குக் கூட அதற்கான லிமிட்டேசன்கள் இருக்கின்றன. ஏன், உங்களுக்கும் எனக்கும் கூட லிமிட்டேசன்கள் இல்லையா என்ன?

2. இப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக அவரவர் அபிப்பிராயங்களிலிருந்து கூறிச்செல்வது பெரிய விஷயமில்லை. சாப்ளினை விட என்.எஸ்.கே பெரிய ஆள் இல்லை,
கலைவாணரை விட சந்திரபாபு பெரிய ஆள் இல்லை, சந்திரபாபுவை விட உசிலைமணி பெரிய ஆள் இல்லை......

3. இந்த வாதம் உண்மையிலேயே பெரிய நகைச்சுவைதான். பதிவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டெல்லாம் கலைஞர்களை அளந்துவிட முடியாது. ஒருகாலத்தில் தங்கவேலுவின் 'அதான் தெரியுமே' கூற்று புகழ்பெற்றது. நாகேஷின் 'காதலிக்க நேரமில்லை', தேங்காய் சீனிவாசனின் 'டிமுக்கு டப்பா டிப்பா', கவுண்டமணியின் 'அட்ராசக்கை', இப்போது வடிவேலுவின் 'கிளம்பிட்டாய்ங்கய்யா...'. இது அந்தந்த காலத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் நடிகர்களின் மார்க்கெட் தொடர்பான விவகாரம். நமது பதிவர்கள் வடிவேலுவை மட்டுமா அதிகம் பயன்படுத்துகிறார்கள், ஷகீலாவையும் நமீதாவையும் கூடத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்? (இங்கு நான் சொல்லும் 'பய்ன்படுத்துவது' வேறு((‍ ‍ ) அதற்காக ஷ்ப்னா ஆஸ்மி, சீமா பிஸ்வாஸை விட ஷகீலாவும் நமீதாவும் தான் சிறந்த நடிகைகள் என்று சொல்வாரா சிறீதர் நாராயணன்?

4. முதலில் புண்படுத்துவது, இழிவுபடுத்துவது என்பது சார்பைப் பொறுத்ததே. எம்.ஆர்.ராதா கூட 'பக்தர்கள், இந்துக்கள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களை' இழிவுபடுத்தினார், புண்படுத்தினார் என்று ஒரே வரியில் புறங்கையால் துடைத்தெறிந்துவிட முடியும். ஆனால் அது சரியான ஆய்வு அல்ல. கவுண்டமணியின் நகைச்சுவைகளில் பிரச்சினைகளே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. நிறத்தை இழிவுபடுத்தும் (இத்தனைக்கும் கவுண்டமணியும் கறுப்புதான்), ஊனமுற்றவர்களை இழிவுபடுத்தும் மணியின் நகைச்சுவைகளை நானும் ஏற்பதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அவரின் நகைச்சுவையையே 'வக்கிரம்' என்று முத்திரை குத்துவதை மறுக்கிறேன்.

தமிழ்ச்சினிமாவில் இருக்கும் அத்தனை நச்சுகளும் எல்லா அம்சங்களிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும். இதற்குக் கவுண்டமணி மட்டும் விலக்கல்ல. வடிவேலுவின் நகைச்சுவையில் நச்சு இல்லை, மற்றவர் மனங்களைப் புண்படுத்தவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை. வடிவேலுவின் 'அவனா இவன்' காமெடி ஓரினச்சேர்க்கையாளர்களை அசிங்கப்படுத்தவில்லையா? 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் வரும் மும்பை சிவப்பு விளக்கு காமெடி திருநங்கைகளைக் கொச்சைப்படுத்தவில்லையா? உச்சமாக 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் இடம்பெறும் 'துபாயில் கக்கூஸ் கழுவும்' ஜோக் மலமள்ளும் அருந்ததியர்களை இழிவுபடுத்தவில்லையா?

சிறீதர்நாராயணனைப் பொறுத்தவரை கவுண்டமணியைச் சார்லிசாப்ளினோடு ஒப்பிட்டு விட்டார்களே என்கிற கோபம். அந்த வாதத்தை நானே மறுத்திருக்கிறேன். சாப்ளினுக்கான அளவுகோல்கள் வேறு. கலைவாணர், கவுண்டமணி, சந்திரபாபு, வடிவேலு என்று இந்த கலைஞர்கள் அனைவருக்குமான அளவுகோல்கள் வெவ்வேறு வகையானவை. சிறீதருக்குக் கோபம் சாப்ளினால் வந்தது என்றால் வேறு இடத்திலிருந்து வந்த கோபம், நான் எதை எழுதினாலும் அதை மூர்க்கத்தனமாக மறுக்க வேண்டும் என்ற குருட்டு ஆவேசம் காரணம்.

இனி ஜ்யோராம் சுந்தர் சினிமா குறித்து முன்வைத்திருக்கும் கேள்வி விளையாட்டுக்குள் புகுந்து மேலும் சில வித‌யங்கள் குறித்து உரையாடுவோம்.

(தொடரும்...)

1. 'அப்பால் ஜ்யோராம்சுந்தரும்...' என்று போட்டிருந்தால் இது இலக்கியப்பிரதியாகியிருக்கும். ஆனால் இது அப்பாலதான்.

2. ரஜினி அடுத்த படத்தில் பேச வேண்டிய பஞ்ச் டயலாக்...?

வரும்...ஆனா.... வராது.

3. பதிவின் தொடக்கத்திலுள்ள கூற்றை மொழிந்த நியோலி பானிஹ் யார்?

1) லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் 2) பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளர் 3) ஜெனீவாவைச் சேர்ந்த மொழியியலாளர் 4) போஸ்ட் மார்க்சிஸ்ட்

விடை 33ம் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில்.


கர்நாடகத்தில் கிறித்துவர்கள் மீதான போலீசின் தாக்குதல் ‍‍‍ மனதை உறைய வைக்கும் படங்கள்









Wednesday, October 15, 2008

''டேய் தகப்பா!'' - கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி -3




'



'தாய் சொல்லைத் தட்டாதே'', ''அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்'', ''தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' போன்ற பெருங்கதையாடல்களால் கட்டப்பட்ட தமிழ்ச்சினிமாப் பரப்பில் கவுண்டமணியின் ''டேய் தகப்பா'' விளிப்பு உண்மையில் தமிழ்ப் பார்வையாள மனத்தை துணுக்குறச் செய்திருக்க வேண்டும். மாறாக, தமிழ்ச்சமூகம் அதை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் ரசிக்கவும் செய்தது. அப்படியானால் அடிப்படையாக ஒரு கேள்வி எழுகிறது. கவுண்டமணியைத் தமிழ்ச்சமூகம் 'ஏற்றுக்'கொண்டதா? 'சகித்துக்'கொண்டதா?

தமிழ் மனம் மட்டுமல்ல, இந்திய மனம் இருவிதமான விசித்திர மனோநிலைகளைக் கொண்டது. மாற்றத்தை அனுமதிக்காத சனாதன மனநிலையும் அதே நேரம் அதை ரகசியமாய் மீறத் துடிக்கும் உந்துதலையும் கொண்டது. இந்தியத் தன்னிலைகள் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத கருத்தியல் வன்முறையால் கட்டப்பட்டது. இந்த அரூவ வன்முறையே அதன் வாழ்நிலையையும் இயக்கத்தையும் தீர்மானிக்கிறது.

அதன் ஒவ்வொரு மீறலையும் இந்துப்பெருமதம் கர்மா, விதி என்னும் கயிறுகளால் கட்டுவித்துள்ளது. இந்த அதிகார வன்முறை குறித்தே சார்வாகம் தொடங்கி பாபாசாகேப் அம்பேத்கர் வரை பேசத் தலைப்பட்டனர். என்ற போதும் மீறத் துடிக்கும் மனோபாவம் என்பது ஒரேடியாய் அழிந்து விடுவதில்லை. அது அவ்வப்போது பதிலிகளை இட்டு நிரப்பிக்கொள்ளவே செய்யும். இப்படியாகப் பதிலிகளை இட்டு நிரப்புவதன் மூலமே தனக்க்கான சுயதிருப்தியைப் பெற்றுக்கொள்ளும். ( கிட்டத்தட்ட சுயமைதுனம் போல).

தமிழ் மனங்களையும் தமிழ்த் தன்னிலைகளையும் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பெரிது என்றால் தமிழ்ச்சினிமா வகிக்கும் பாத்திரமோ பென்னம் பெரிது. தமிழ்ச்சினிமாவின் 'வெற்றிகரமான கதாநாயகன்' ஒட்டுமொத்தமான நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க மதிப்பீடுகளைப் பிரதிபலிப்பவனாகவே இருப்பான் என்பதற்குப் பெரிய ஆதாரங்களைத் தேடிப்போக வேண்டியதில்லை. ஆனால் நிலப்பிரபுத்துவ, பார்பனீய, முதலாளிய மதிப்பீடுகளைச் சிதையாமல் காப்பாற்றிக் கொண்டே அதே நேரம் தனிமனிதரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிற 'அநியாயங்களையும் தவறுகளையும்' தட்டிக் கேட்கிற சாகசக்காரனாகவும் தமிழ்ச்சினிமாக் கதாநாயகன் விளங்குகிறான்.

இத்தகைய 'தனி மனிதத் தவறுகளைத் தட்டிக்கேட்கக் கூடிய' மனோவலிமை கூட தமிழ்ச்சமூகத்திடம் இல்லை என்பதுதான் உண்மை. அது, 'தட்டிக்கேட்கிற கதாநாயகன்' வரும் வரை காத்திருக்கிறது, அது வரை தவறுகளை அது 'அனுமதிக்கவில்லை' , மாறாகச் 'சகித்துக்கொள்கிறது'. ஆகத் திரையில் விரியும் தவறுகளைக் கதாநாயகன் தட்டிக் கேட்டு 'முடிவுக்குக் கொண்டு வந்தவுடன்' அது சுயதிருப்தியுடன் வெளியேறுகிறது. திரைக்கு வெளியே விரியும் கல்விக்கொள்ளை, சமூக அநீதிகள், ஊழல், ரவுடிகளின் வன்முறை எல்லாவற்றையும் 'சகிக்க முடியாமல்' மீண்டும் திரைக்கு வருகிறது. கதாநாயகன் குறியை நீவி விட்டு, எல்லாம் வடிந்தவுடன் ஆயாசத்தோடு வெளிக்குத் திரும்புகிறது. உண்மையில் தமிழ்ச்சமூகம் திரையில் கண்டு கொதிக்கும் மேற்கண்ட 'தவறுகளை' நிகழ்த்துவோருக்கும் சாகசக் கதாநாயகனும் பிம்பங்களால் தமிழ் மனங்கள் சுயதிருப்தி அடைந்து கொள்வதும் மீண்டும் மீண்டும் தேவையாயிருக்கிறது.

இப்படியாக கதாநாயகனுக்கான தேவைகள் ஒருபுறம் கட்டமைக்கப்படுகிறது என்றால் கவுண்டமணிக்கான ரசிப்பிடம் உருவாக்கப்படுவது வேறொரு வகை. தன் மீது கட்டுக்களை விதிக்கும், சுதந்திரத் தன்னிலைகள் உருவாக விடாமல் தடுக்கும் இந்த சனாதன நடைமுறைகளின் மீதும், ஆதிக்கப் பெருங்கதையாடல்களின் மீதும் அடிமனத்தில் வெறுபையே வளர்க்கிறது. அந்த மரபைத் தான் நேரடியாகக் கேள்வி கேட்க முடியாதபோது, கவுண்டமணி கேள்வி கேட்கிற போது அதை மறைமுகமாக ரசிக்கிறது. அதனால்தான் 'அண்ணன் தம்பி பாசம்', 'தீர்ப்பு சொல்லும் பஞ்சாயத்து நாட்டாமை', 'ஒருதார மணத்திலிருந்து விலகாத கற்பு நாயகன்', 'தவறான தீர்ப்பு சொன்னதால் நாண்டு மாயும் நாட்டாமை' என்று நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் ஆதிக்கப் பெருங்கதையாடல்களும் நிரம்பி வழிந்த 'நாட்டாமை' திரைப்படத்தில் கவுண்டமணியால் தன் தந்தையை 'டேய் தகப்பா' என்று விளிக்க முடிந்தது. 'விஜயகுமார் என்னும் வரையறைகளிலிருந்து இம்மியும் பிசகாத லட்சியத் தந்தை'க் காய் உருகிய தமிழ்ப் பார்வையாள்கள், 'அப்பாவை டேய் என்று அழைத்த போக்கிரி மகனையும்' கைதட்டி ரசித்தார்கள்.

தன் காணாமல் போன (பெண் வேடமிட்ட இன்னொரு கவுண்டமணி) ''தாய் சொல்லைத் தட்டாதேப்பா'' என்று சொன்னவுடன், கவுண்டர் கேட்பார், ''தாய் என்ன டென்னிஸ் பாலா தட்டுறதுக்கு?''.

நாயகப் பிம்பங்கள் மூலம் சுய மைதுனம் செய்துகொண்ட தமிழ்க் குறிகள், கவுண்டமணி போன்ற மீறல் கலைஞர்கள் மூலம் மரபின் மீது மூத்திரம் அடித்துத் திருப்தியடைந்துகொள்கின்றன.

Wednesday, September 24, 2008

கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி 2














கவுண்டமணி குறித்த பதிவில் சில பின்னூட்டங்கள் கவுண்டமணியைச் சிலாகிப்பதாகவே அமைந்திருந்தன. எனது நோக்கம் அதுவல்ல. அவர் நகைச்சுவையில் தெரியும் வேறு சில கூறுகளைச் சுட்டிக்காட்டுவதே. ஒரு கலைஞனைச் சாதிய ரீதியாக அணுகலாமா என்பது குறித்த அதிருப்திகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியச்சமூகம் ஒரு சாதியச்சமூகம். ஒருவேளை சாதி ஒழிந்துவிட்டால் நாம் அதைப் பற்றிப் பேசுவதற்கோ சாதிய ரீதியான கட்டவிழ்ப்புகளை நிகழ்த்துவதற்கு வாய்ப்பிருக்காதுதானே ((-.

பிரபுராம் கவுண்டமணியின் நகைச்சுவையில் உள்ள ஆணாதிக்க மற்றும் அதுபோன்ற பாதகமான அம்சங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். உண்மைதான். கவுண்டமணி முழுக்க முழுக்க ஒரு எதிர்க்கலாச்சாரக்காரர் என்றோ, மாற்று அரசியலை முன்வைப்பவர் என்பதோ என் கருத்தல்ல. ( அவரே சாப்ளினையும் தாண்டியவர் கவுண்டமணி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.)மாறாகக் கவுண்டமணியைக் குறித்து அதிகம் பேசப்படாத அம்சங்களை எழுதிச் செல்லவே விருப்பம்.

அவர் தமிழ்ச்சினிமாவின் வெளி மட்டுமல்ல உள்மரபுகளையும் கவிழ்த்தவர் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்து...

தமிழ்ச்சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று தலைமை வழிபாடு, பிம்பகட்டுருவாக்கம். காத்திரமான சிந்தனையாளர் என்று பலரால் கொண்டாடப்படும் கமல் வரை இதற்கு விதிவிலக்கல்ல. உலகநாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று மற்றவர்களை வைத்துத் துதி பாடுகிற அருவெறுப்பு தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

பெரும்பாலும் இந்தக் கதாநாயகன்களின் பிம்பக்கட்டுமானத்திற்கும் புகழ்பாடுவதற்கும் அல்லைக்கைகளாகப் பெரிதும் பயன்படுத்தப்படுபவர்கள் துணைநடிகர்களும் நகைச்சுவை நடிகர்களும். இப்போது அப்பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர் விவேக். ஆனால் எனக்குத் தெரிந்தவரை கவுண்டமணி அப்படியான 'பில்டப்களை'க் கொடுப்பதில்லை. மாறாக இந்தப் பிம்ப விளையாட்டுகளைத் தலைகீழாய்க் கவிழ்த்துப்போட்டு எள்ளி நகையாடுவார்.
சேனாதிபதி திரைப்படம். சத்யராஜுக்கு இணையான பாத்திரம் விஜயகுமாருக்கு. அவர் சத்யராஜின் வீட்டுக்கு வருவார். கிட்டத்தட்ட 'இரண்டாவது கதாநாயகனான' விஜயகுமார் வரும்போது கவுண்டமணி சொல்வார், 'இவன் ஓவராப் பேசுவானே!'.

அதேபோல் ரஜினியின் 'பாபா' வெளியான காலகட்டம். ரஜினி ஒரு முக்கியமான அரசியல் தீர்மான காரணியாக மதிக்கப்பட்ட காலம். அவர் யாரை ஆதரிப்பார், யாருக்காக வாய்ஸ் கொடுப்பார் என்கிற பரபரப்புகள் ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்கள் இடையும் நிலவிவந்தது.

ரஜினியோ ப.சிதம்பரம் சாயலில் ஒருவரை, 'இவர்தான் முதல்வர்' எனப் பாபாவில் கைகாட்டுவார். ஆனால் கொஞ்சமும் தயக்கமில்லாமல் கவுண்டமணி சொல்வார், '' போயும் போயும் இந்த ..... மண்டையனா முதலமைச்சர்?'.

ரஜினி என்னும் மாபெரும் பிம்பம் குறித்தோ அவருக்குப் பொதுவெளியில் இருக்கும் அரசியல் மதிப்பு குறித்தோ கொஞ்சமும் கவலைப்படாமல் சினிமாவிலிருந்து கொண்டே அதேசினிமாவில் நிலவும் இத்தகைய போலித்தனங்களைக் காலி செய்யும் துணிச்சல் கவுண்டமணிக்கே உண்டு.

அதனாலேயோ என்னவோ ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பெருநட்சத்திரங்கள் தங்கள் படங்களில் கவுண்டமணியைத் தவிர்க்கவே செய்கின்றனர். விதிவிலக்கு சத்யராஜ் மட்டுமே. ஏனெனில் பிம்பம் பற்றிக் கவலைப்படாத இன்னொரு கவிழ்ப்பாளர் சத்யராஜ்.

( தொடரும்...)

Tuesday, September 16, 2008

கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி 1.













நாளைய தமிழ்ச்சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஏன் 'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் பெயரும் இடம்பெறலாம். ஆனால் கவுண்டமணியின் பெயர் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் விவேக்கைப் போல பகுத்தறிவு என்னும் பெயரில் இடைநிலைச்சாதிப் பார்ப்பனீயத்தைக் கடைப்பிடித்தவரல்ல கவுண்டமணி. வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் ஏதும் அறிவிக்கவில்லையெனினும் தமிழ்ச்சினிமாவின் பல மரபுகளைக் கவிழ்த்துப்போட்டவர். வெளிமரபுகளை மட்டுமல்லாது, சினிமா உள்மரபுகளையும் நொறுக்கியவர்.

'மரியாதைக்குரிய நம் கலைஞர்கள்' ஏற்க விரும்பாத பல அடித்தட்டுமக்களின் வேடங்களை ஏற்றவர். இந்த வகையில் சிவாஜியை விட அதிக வேடங்களை ஏற்று நடித்தவர் என்ற பெருமை கவுண்டமணிக்கு உண்டு. (வேலையில்லாத பட்டதாரி இளைஞன் என்னும் வேடத்தைப் பெரும்பாலும் தாண்டாத விவேக்கை 'வொயிட் காலர் காமெடியன்' எனலாம்.)

ஒரு இடையீடு : யமுனாராஜேந்திரன் குறித்த தோழர் சுகனின் விமர்சனத்தில் இப்படி ஒரு வரி :

'குமிஞ்சான்', 'குள்ளன்' என்று ஒருவரை எள்ளி நகையாடும் மனோபாவத்திடம் விவாதிப்பது மனித உணர்வுள்ள எவருக்கும் சாத்தியமில்லை. இலக்கியம் அரசியல் இவற்றின் பேரால் இத்தகைய வக்கிரங்களை எதிர்கொள்வது அவற்றிற்கு மரியாதை செய்வதுமாகாது. கவுண்டமணியின் 'கோமுட்டித் தலையா', 'நெல்சன் மண்டலோ மண்டையா' போன்ற வசவுகளுக்கும் 'குமிஞ்சான்' என்று வசைபாடும் மனநிலைக்குமுள்ள அருவருப்பான ஒப்புவமை, ஒற்றுமையைக் கவனிக்கும் ஒருவருக்கு இதுதான் கவுண்டர் கல்ச்சரோ ( கவனிக்க : Counter culture அல்ல) என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததே.




ஆக யமுனா கவுண்டர் சாதியில் பிறந்தவர், கவுண்டமணியும் கவுண்டர். எனவே கவுண்டர் கல்ச்சர். என்னே ஒரு வார்த்தை விளையாட்டு!

தனக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களை எல்லாம் இப்படியாக 'ஜாதிப்புத்தி', 'கவுண்டர் கல்ச்சர்' என்று அடையாளப்படுத்திவிடுவது எவ்வளவு எளிது? உண்மையில் கவுண்டமணி பிறப்பால் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவரல்ல, மேடைநாடகமொன்றில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் கவுண்டர், அதுவே பின்னாளில் கவுண்டமணி என்றாயிற்று என்று அறியும்போது சுகனின் உத்தி கிழிபட்டுப் போகிறது.

இருக்கட்டும். கவுண்டமணி மருத்துவர் போன்ற ஏதோ ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டதுண்டு. (கவுண்டமணி குறித்த மேலதிகத்தகவல்களைத் திரட்டுவது கடினம். கவுண்டமணி தனது சினிமா வாழ்க்கையில் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள் பத்துக்குள்ளேயே இருக்கும்.)

கவுண்டமணி செந்திலை அடிப்பதும் உதைப்பதும் பலாராலும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளான ஒன்று. ஆனால் இதை வேறு வகையாய் வாசிக்க முயல்வோம்.

கூலி என்னும் படத்தில் கவுண்டமணி மில் கேன்டின் உரிமையாளர். செந்திலோ அந்தக் கேண்டினில் வேலை பார்க்கும் டீமாஸ்டர். ஒரு உரையாடலின்போது, பேச்சுவாக்கில் செந்தில் கவுண்டமணியை அடித்துவிடுவார். அவர் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும். செந்தில் சொல்வார், ''அண்ணே, நாங்கள் அடிக்கிற சாதிண்ணே, அதான் அடிச்சா உடனே ரத்தம் வந்திடுச்சு'. கவுண்டர் கேட்பார், ''நீ என்ன சாதிடா?'' செந்தில் கவுண்டரின் காதுக்குள் குசுகுசுப்பார். பிறகு கவுண்டமணி செந்திலின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிடுவார். இப்போது செந்திலின் மூக்கிலும் ரத்தம். கவுண்டர் சொல்வார், '' உங்க சாதிக்காரன் மட்டுமில்லைடா, எங்க சாதிக்காரன் அடிச்சாலும் ரத்தம் வரும்'.

இங்கு முக்கியமாய்க் கவனிக்கவேண்டிய ஒன்று, கவுண்டமணி நடத்தும் கேன்டினில் அம்பேத்கர் படமும் எம்.ஜி.ஆர் படமும் மாட்டப்பட்டிருக்கும். ( பொதுவாக எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை தலித் வாக்குவங்கியைத் தக்கவைத்துக்கொண்டவர்.) கேண்டின் உரிமையாளரான கவுண்டமணி பாத்திரம் ஒரு தலித் பாத்திரம் என்பது குறிப்பால் அறியப்படும் செய்தி. இன்னொரு முக்கியமான விஷயம், செந்தில் பிறப்பால் ஆதிக்கச்சாதியான, சாதிய வன்முறையின் குறியீடாய் முன்நிறுத்தப்படும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் கவுண்டமணியிடம் உதை வாங்குவதே சாதிய வன்மத்தைப் பழிதீர்க்கும் கணக்கு என்று ஏன் கொள்ளக்கூடாது?

( தொடரும்...)



Monday, September 8, 2008

தூமைக்கதைகள்













இதைப் படிக்கும் உங்களுக்குச் சீக்கிரம் அலுப்புத் தட்டும் நோக்கில் எழுதப்பட்ட பிரதி இது. ஒரு அலுப்போடும் சலிப்போடும் எழுதப்பட்ட இப்பிரதி எந்த வாசகி/கனையும் கவர்வதற்காக எழுதப்பட்டதில்லை. பிரதியைக் கட்டவிழ்த்தல், தலைகீழாக்குதல், நேர்கோடாக்குதல், அ ‍ நேர்கோடாக்குதல் என்கிற எவ்வித முந்தீர்மானங்களுமற்று தன் போக்கில் நகர்வதால் இப்பிரதி எந்த இலக்கிய லவடாவையும் படிக்கச்சொல்லிக் கோரவில்லை.
முதன் முதலாக தூமை என்கிற வார்த்தையை எத்தனாவது வயதில் நீ கேள்விப்பட்டிருப்பாய்? உன் பதின் பருவங்களிலாயிருக்கலாமா, எனில் நீ ஒரு நகரத்தின் யோனியில் பிறந்தவனாயிருக்கலாம். ஐந்து வயதில் அறியக்கிடைத்த பல தமிழ்வார்த்தைகளில் தூமையும் ஒன்றாக இருப்பதே ஜனநெருக்கடியும் சண்டைகள் மலிந்துகிடக்கும் பிரதேசங்களில் வாழப்பிறந்தவனாயிருப்பதன் மரபு..
அய்யாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் வரலாறு உடையதாய் அடிக்கடி பூலரிக்கப்படும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தூமை என்னும் வார்த்தை முதன்முதலாய்ப் பாவிக்கப்பட்ட தமிழ் இலக்கியம் எது? பாம்பின் படத்தையொத்த அல்குல், விம்மிப்புடைத்த முலைகள் என்றெல்லாம் விலாவரியாய் ஆராயும் சங்க இலக்கியங்கள் தூமை குறித்துப்பேசியதுண்டா? இல்லையெனில் அக்காலத் தமிழ்ப்பெருங்குடிப் பெண்களுக்கு மாதவிடாயே ஆகாமலிருந்திருக்கும் என்பது காரணமாயிருக்காது என்றே நம்பவிழைவோம். மறத்தினால் கொண்ட திறத்தினால் முறத்தினால் புலியை அடித்துத் துரத்தினாள் ஒரு தமிழ்ப்பெண் என பென்னம்பெரிய கவிமக்களும் கவிதாயினிகளும் கூறக்கேட்டிருக்கிறோம். அது கிடக்கட்டும் சபரிமலை மகரஜோதி கதை தெரியுந்தானே உனக்கு? இருநூறு ஆண்டுகளின் முன் பெண்ணின் தூமைக்குருதி வாடை கண்டு கொடியவனவிலங்குகள் வரக்கூடும் என்றஞ்சியே சபரிமலைக்குப் பெண்கள் வருவது தடைசெய்யப்பட்டதாம். நாப்கின்கள் காலத்திலும் பெண் தடுக்கப்படுவதெனின் வருடம் முழுதும் பேதியால் அல்லலுறும் அய்யப்பசுவாமிகளுக்கு யாரேனும் டிஷ்யூ பேப்பர் வாங்கித்தரல் நலம். தூமை என்னும் வார்த்தை வின்னர் என்னும் தமிழ்ப்படத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. வடிவேலுவை ஏமாற்ற பெண்வேடமிட்ட பிரசாந்த் 'தூமியக்குடிக்கி' என்று திட்டுவார். தூமையின் சுவை எப்படியானதாக இருக்கும்? தூமையைக் குடித்தவர்கள் என்று யாருமிருக்கிறார்களா? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய‌ மூத்த தூமைக்குடி தமிழ்க்குடியா என்றெல்லாம் கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியவில்லை என்று பேராசிரியர் கலாநிதி முத்துரத்தின முதலியார் கேள்விகளை 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுப்பியிருக்கிறார். கங்கை நதியே பூமிமாதாவின் தூமைதான் என்று புராணங்களிலிருந்து ஆதாரங்காட்டுகிறார் ஷ்ரிமத்ராகவாச்சாரிநரசிம்மன். அப்படியானால் அகண்டபாரதக்கனவுகளில் மிதப்பவர்களைத் தூமைக்குடிகள் என்றழைக்கலாமா என்னும் வினாக்களும் எழாமலில்லை.

( ......ம்ருடதொ)

பெண்கள் சந்திப்பு ‍ இருவேறு பார்வைகள்

பெண்கள் சந்திப்பு குறித்த கவிஞர் தமிழ்நதியின் பார்வையை இங்கு படித்திருப்பீர்கள்.

http://tamilnathy.blogspot.com/2008/08/blog-post_07.html

இரண்டாம் பார்வை எனக்கு மின்னஞ்சலில் மீராபாரதி என்னும் நண்பர் அனுப்பியது.

கடந்த ஆகஸ்ட் மூன்றாம் திகதி பெண்களின் இலக்கிய சந்திப்பு ஒன்று டொரோன்டோவில் நடைபெற்றது. அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியதிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக எந்த ஒரு இலங்கை சார்ந்த நிகழ்வுகளுக்கும் செல்வதை தவிர்த்திருந்தேன். ஏனனில் பெரும்பாலான (பொது அரசியல்) நிகழ்வுகள் சார்பு அரசியல் தன்மை கொண்டனவாகவே இருந்தன இருக்கின்றன...ஒன்று புலிகள் சார்ந்த அரசியலாக இருக்கும் அல்லது புலிகள் எதிர்ப்பு அரசியலாக இருக்கும் அல்லது இலங்கை அரசாங்க அரசியல் சார்ந்ததாக இருக்கும். இதைவிட ஊர் ஒன்று கூடல்களும் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரசியல் சாதிய சார்புத்தன்மைகள் மறைக்கப்பட்டு பொது நிகழ்வுகளாக நடைபெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை என்பதால் பங்குபற்றுவதிலிருந்து ஒதுங்கியிருந்தேன்.

இன்றைய எனது புரிதலில் இலங்கையில் ஒரு அமைதியான சுழலை உருவாக்குவதன் மூலமும் இனங்களுக்கு இடையில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலமுமே நிலவுகின்ற இன முரண்பாடுகளுக்கு நீதியான ஆரோக்கியமான தீர்வு ஒன்றைக் காண்பதற்காக ஒரு ஆரோக்கியமான சுழலை உருவாக்க முடியும் என நம்புகின்றேன். இந்த அடிப்படையிலையே கடந்த சில மாதங்களில் நடைபெற்ற சமாதானத்திற்கான கனேடியர்கள் ஒழுங்கு செய்த இரு கூட்டங்களுக்கும் சென்றிருந்தேன். இந்த நோக்கத்துடனையே ஆகஸ்ட் 3ம் திகதி நடைபெற்ற பெண்கள் இலக்கிய சந்திப்புக்கும் சென்றிருந்தேன். மேலும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறள்ள “இலங்கையின் எதிர் காலம் என்ன” என்ற கூட்டத்திற்கும் செல்வதற்கு உள்ளேன். இது தொடர்பான சில கருத்துக்களை குறிப்புகளை இங்கு முன்வைக்க விரும்பகின்றேன்.

ஏனக்கு ஆணுக்குறிய உடல் உறுப்பு இருப்பதாலும் அதனால் பிறந்ததிலிருந்து ஆணாதிக்க கருத்தியலிலும் மனோபாவத்திலும் இச் சமூகம் என்னை ஆணாக(?) கட்டமைத்தமையாலும் பெண்கள் சந்திப்புக்கு அனுமதி இல்லை. இது பெண்ணியம் சார்ந்த கருத்தியல் பார்வையில் சரியானதாக இருக்கலாம். இது புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றே. ஏனனில் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தாலும் அதன் ஆதிக்க சக்திகளான ஆண்களாலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அது தொடர்பான பெண்களது உள்உணர்வுகளும் அதை வெளிப்படுத்தும் மொழியும் தனித்துவமானவையே. ஆணாதிக்க சிந்தனைக்குள் கட்டுண்டிருக்கும் ஆண்களால் இது புரிந்து கொள்ளப்பட முடியாதது என்பது கவலைக்கிடமானதே. ஆகவே இறுதிநாளான ஆகஸ்ட் 3ம் திகதிக்கு மட்டுமே ஆண்களுக்கு ஐனநாயக அடிப்படையில் அனுமதியும், பெண்களுடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
கலந்துரையாடலில் என் கவனத்தை ஈர்த்த சிந்தனையில் பதிந்த கருத்துக்கள் தொடர்பான எனது கருத்துக்களை இங்கு முன்வைக்கின்றேன்.

ஆரசியல் செயற்பாட்டாளர் ஐhனகி அவர்கள் பெண்கள் அதிகளவில் அரசியலில் பங்குபற்றும் பொழுதுதான் பெண்கள் தொடர்பாக நாம் விரும்பும் குறைந்த பட்ச மாற்றங்களையாவது ஏற்படுத்த முடியும் என்றடிப்படையில் தனது கருத்தை முன்வைத்தார். மேலும் அவர் கூறிய போது பெண்கள் சரி பாதியாக இருக்கும் இந்த உலகத்தில் நாடுகளில் அரசியலில் பொதுவாழ்வில் பெண்களின் பங்குபற்றல் என்பது அதன் சதவீதம் மிகவும் குறைவானதே என்றார். இது மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயம். மேலும் அரசியலிலும் பொதுவாழ்விலும் பங்குபற்றும் பெண்கள் அதிகமானோர் தம் உடலில் பெண் சார்ந்த உடல் உறுப்புக்களை மட்டும் கொண்டுள்ளதுடன் பெண்ணிய பார்வைக்கு மாறாக ஆணாதிக்க சிந்தனைப் போக்கையே பார்வையையே மனதையே இவர்கள் கொண்டுள்ளனர். இவர்களினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்காது என்பது ஆச்சரியமானதல்ல. ஏனனில் அதிகாரத்திலிருக்கும் இப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடலளவில் மட்டுமே வித்தியாசம் உண்டு. மனதளவில் சிந்தனையளவில் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே பெண்ணிய பார்வை சிந்தனை உணர்வுகள் கொண்ட பெண்களே அரசியலிலும் பொதுவாழ்விலும் அதிகளவில் ஈடுபட முன்வரவேண்டும். இதுவே ஆணாதிக்க சிந்தனை கொண்ட அரசியல் இயந்திரத்தையும் ஆண்தன்மை கொண்ட அரசியல் செயற்பாடுகளையும் பெண்ணிய வழியில் மாற்றுவதற்கு வழியை உருவாக்கும் என்றால் மிகையல்ல. ஏனனில் ;இதுவரை காலமும் ஆணாதிக்க வழிபாதையினால் நாம் கண்டது வன்முறை போர் பகையுணர்வு கொலை எதிரி துரோகி மனப்பான்மை என்பனவே. இதிலிருந்து விடுபட்டு பெண்மையின் பாதையில் இனிவரும் காலம் பயணிக்கவேண்டியது அவசியமானதாகும். இதுவே மனித இனத்தையும் இந்த பூமியையும் காப்பாற்றும்.

இரண்டாவது விடயம் யாழினி எனப்படும் நிவேதா அவர்கள் முன்வைத்தது. அதாவது ஆதி காலங்களிலிருந்து மரபு வழியாக கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்ற பெண் பெண்மை என்ற பாத்திரம் தொடர்பானது. ஓவ்வொரு காலங்களிலும் அக் கால சுழ்நிலைகளுக்கு ஏற்பவும் தம் தேவைகளுக்கு ஏற்பவும் தம் மரபுகளிலிருந்தும் புனை கதைகளிலிருந்தும் பெண்ணையும் அவர்கள் பண்புகளை மீள மீள் வடிவமைத்துவந்துள்ளனர் என்றார். இதில் நாம் சில விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். முதலாவது பெண்களின் இயல்பான அதாவது இயற்கையான இயல்புகளுடன் வாழும் பெண்கள். இவ்வாறான பெண்களை இன்றை சமூகங்களில் காண்பது அரிதே. ஏனனில் பெண்கள் ஆண்டாண்டு காலமாக பிறப்பிலிருந்து மட்டுமல்ல கருவறையிலிருந்தே ஆணாதிக்க பார்வைக்கு உட்பட்டே கட்டமைக்கப்பட்டு அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறான பெண்களையே நாம் இன்று அதிகமாக காணவும் சந்திக்கவும் கிடைக்கின்றது. முடிகின்றது. இப்பெண்களையே இந்த ஆணாதிக்க சமூகம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது தேவைகளுக்கு ஏற்ப கலாச்சார காவிகளாகவும் போர்முனைகளில் செயற்படும் இராணுவ விராங்கனைகளாகவும் வீட்டில் மனைவி தாய் என்ற பெயர்களில் வேலைக்காரிகளாகவும் பாலியல் இயந்திரங்களாவும் பயன்படுத்த முடிகின்றது. இவர்களுக்கு; வீரத்தாய் கற்புக்கரசி வீரவேங்கை போராளி .....இவ்வாறான சுய புகழ்பாடும பட்டங்களையும் வழங்கி இப் பெண்களை திருப்திப்படுத்துகின்றது. இப் பெண்களும் தமது அறியாமையினால் இதுவே சரியானது எனது எதிர் கேள்விகள் கேட்காது (அதற்கும் உரிமை இல்லை என்பதை அறியாது) நம்பி சொற்களால் கட்டப்பட்ட தங்க கூண்டுகளுக்குள் வாழ்கின்றனர். இன்னும் சில பெண்களே தாம் அடக்கப்பட்டுள்ளதை உணர்ந்து தம் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடுகின்றனர். இதில் இருவிதமான பெண்கள் உள்ளனர். ஒரு வகையினர் ஆணாதிக்க கருத்தியலுக்கு மாறாக ஆண்களையே எதிரிகளாக கருதி ஆண்களுடன் போட்டி போடுவது என்பதே பெண்விடுதலை எனக் கருதுகின்றனர். இவர்கள் தமது இயற்கையான பெண் இயல்புகளை மீள உள்வாங்கி வளர்ப்பதற்குப் பதிலாக ஆண் இயல்புகளை தன்மைகைளை உள்வாங்கி தம்மை ஆணாகவே மாற்றுகின்றனர். இதுவே ஆணுக்கு சரிநிகர் சமானமாக இருப்பதற்கு சரியானது எனக் கருதுகின்றனர். இவர்கள் ஆண்களின் செயற்பாடுகளுக்கு பிரக்ஞையற்று எதிர்வினையாக மட்டுமே செயற்படுகின்றனர். இவர்களும் ஆணாதிக்க கருத்தியலின் வலையில் வீழ்ந்தவர்களே. ஏனனில் இவர்களையும் இந்த ஆணாதிக்க சமூகம் பெண்விடுதலையை அடைவதற்கு வன்முறையே சரியான பாதை என நம்பவைத்து தமது ஆணாதிக்க போர்ச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இப் பெண்களும் பெண் விடுதலைப் போராளிகளாக வன்முறை பாதையில் செயற்படுபவர்களாக வலம் வருகின்றனர்.

மிகச் சில ;பெண்களே இயற்கையான பெண் இயல்புடன் வாழ்வதும் அது சார்ந்து சிந்திப்பதுமே பெண்ணிய சிந்தனை என்றும் அன்பு தாய்மை அரவணைப்பு என்பவற்றை முன்வைத்தும் செயற்படுகின்றனர். இவ்வாறன ஒரு கருத்தை மைதிலி மைத்தரி அவர்கள் முன்வைத்தார்கள். இவ்வாறான பெண்களே போருக்கும் வன்முறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் தொழிற்வாலை மற்றும் இயந்திரங்களிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களிலிருந்;து சுழல்லை பாதுகாக்கவும் தாமும் நலமுடன் வாழ்ந்து எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பூமியை அழகானதாக வழங்கவேண்டும் என்ற அக்கறையுடனும் செயற்படுகின்றனர். மேலும் இன்று பெண்கள் பெற்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் சாத்வீகமான போராட்ட முறைமைகளுக்கூடாகப் பெறப்பட்டமையே. பெண் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி தனித்து போராடியதாக வரலாறு இல்லை. பெண் சாதிய அடக்குமுறைகளுடன் ஒப்பிடும்பொழுது பிற அடக்குமுறைகளின் பாதிப்பு தாக்கம் குறைவானதே என்றால் மிகையல்ல. ஆகவே ஆண்களும் இனிவரும் காலங்களில் ஆணாதிக்க போர்குணாம்ச வன்முறைப் பாதைகளைக் கைவிட்டு பெண்மை சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் அதாவது அன்பு அரவணைப்பு தாய்மை என்பவற்றை உள்வாங்கி தமது ;உரிமைகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். இங்கு போராட்டம் என்ற சொல்லுக்குப் பதிலாக செயற்பாடு; என்பதை முன்வைத்துள்ளேன். ஏனனில் போராட்டம் என்ற சொல்லே ஆணாதிக்கமயமானது என்றால் மிகையல்ல. இதுவே ஆரோக்கியமான ஒரு சமூகத்தை மனிதர்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கான ஒரு அழகிய பூமியை உருவாக்கும் என்றால் சந்தேகமில்லை.

மேலும் பார்வதி யுpனித்தா மற்றும் ஒருவர் ஆண்களுக்கு எதிரான பெண்களின் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் அது தொடர்பான விபரங்களையும் கருத்துக்கணிப்புகளையும் முன்வைத்தனர். இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் பல கருத்துக்கணிப்புக்களில் ஆணாதிக்க செயற்பாடுகளுக்கு பெண்களும் சரியானது என ஆமோதித்திருப்பதே. இது ஆச்சரியமானதல்ல. ஏனனில் மேற் குறிப்பிட்ட படி ஆண்கள் பெண்கள் அனைவரும் ஆணாதிக்க கருத்தியலை உள்வாங்கி அதைச் சரி என நம்பி வளர்க்கப்பட்டவர்கள். அதன் வழி வாழ்பவர்கள். இங்கு ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் உறவுகள் அதன் செய்பாட்டு தன்மைகள் மற்றும் பாலியல் உறவுகள் செயற்பாடுகள் தொடர்பான கருத்துரங்குகளும் அறிவூட்டல்களும் தொடர்ச்சியாக பல இடங்களில் நடைபெறவேண்டும் என்பது முக்கியமானது. நான் ஒரு ஆணாக பிற்போக்கு கருத்துக்களாலும் பாலியல் உணர்வுகளை அடக்கியும் வளர்க்கப்பட்டவன் என்றடிப்படையில் ஆணாதிக்கமில்லாத ஒரு ஆணாக வளர்வதில் செயற்படுவதில் வாழ்வதில் உள்ள நடைமுறை கஸ்டங்களை பிரச்சனைகளை முரன்பாடுகளை நாள்தோரும் எதிர்கொள்கின்றேன். புhலியல் ரீதியாக பெண்களை பயன்படுத்தும் ஆண்களில் பலர் ஆணாதிக்கத்தினதும் அது சார்ந்த சமூகத்தினதும் பலிக் கடாக்களே. ஒருவகையில் ஆண்களும் பெண்களும் இந்த ஆணாதிக்க சமூகத்தால் உருவாக்கப்பட்ட நோயாளிகளே. இவர்களது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முனைவதோடு பாலியல் உணர்வுகளின் அடக்குமுறையால் ஏற்ப்பட்ட மனநோய்க்கும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குணப்படுத்தப்படவேண்டியவர்களே. பெண்களைப் போல் ஆண்களும் ஆணாதிக்க சமூகத்தால் கட்டுண்டு வளர்க்கப்பட்டவர்களே. ஆணால் ஆண்கள் அதிகாரத்தை அனுபவிக்கின்றனர். பேண்கள் அதன் அதிகாரத்தின் அடக்குமுறையை அனுபவிக்கின்றனர். ஆக ஆணும் பெண்ணும் ஆணாதிக்க சிந்தனையால் செயற்பாடுகளால் அடக்கப்பட்டு வாழபவர்களே. இவர்கள் இருவருமே இதிலிருந்து விடுபடுவதே பெண்விடுதலையை மட்டுமல்ல ஆண் விடுதலையையும் சாத்தயமாக்கும். நிச்சயமாக இதற்கான பாதை பெண்ணிய பாதையாகவே இருக்கவேண்டும்.

இறுதியாக அனைத்து தமிழ் நிகழ்வுகளையும் போல் இந்த நிகழ்வும் புலி சார்பு மற்றும் புலி எதிர்ப்பு என்ற பிரிவினர்களால் அல்லது ஆயுத போராட்ட சார்பு அல்லது ஆயுத வன்முறை வழி போராட்ட எதிர்ப்பு என்ற பிரிவினர்களால் முரண்பட்டு பிளவுண்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஏன்னைப் பொறுத்தவரை இன்று புலிகள் முன்னெடுக்கும் போராட்டம் ஆணாதிக்க சாதிய மத வாத கருத்தியலுக்கு உட்பட்டே நடைபெறுகின்றது. இங்கு பெண்களும் சாதியால் அடக்கப்பட்டவர்களும் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆணாதிக்க பார்வையிலமைந்த வன்முறை பாதையில் பயன்படுத்தப்பட்டே வருகின்றனர். இவர்களது செயற்பாடுகளும் வழிமுறைகளும் எந்தடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாததே. இவ்வாறு புலிகளின் செயற்பாடுகளை மறுப்பதானது எந்தவகையிலும் இலங்கை அரசாங்கம் தமிழ் பேசும் மனிதர்கள்; மீது மேற்கோள்ளும் அடக்குமுறைகளையும் சாதாரண சிங்களம் பேசும் மனிதர்களை பயன்படுத்ததி போர் மூலமாக அழிப்பதை அடக்குவதை நியாயப்படுத்தி விடாது. நியாயப்படுத்தி வுpடக்கூடாது. ஏனனில் கொழும்பிலருந்து வந்த ஒருவர் கேட்ட கேள்வி மிக முக்கியமானது அனைவரும் கவனத்தில் எடுத்து செயற்படவேண்டிய ஒன்று. அதாவது “புலிகள் தவறு ஏனின் அதற்கு மாற்றாக புலம் பெயர்ந்து செயற்படுகின்ற மனிதர்கள், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில என்ன செய்துள்ளார்கள்”. இந்தக் கேள்விக்கு யார் விடை கூறப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது கடந்த 27 தடவைகள் தமது நேரங்களை செலவளித்து பணத்தைச் செலவளித்து சந்தித்து தம் கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடிய தமிழ் பேசும் “பெண்கள் சந்திப்பு” விடை கூறுவார்களா?
என்ன செயற்பாடுகளை இதுவரை முன்னெடுத்துள்ளது?

இனிமேலும் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்கள்; இலங்கையில் நடைபெறும் ஆணாதிக்க வழிப்பட்ட இலங்கை அரசின் போருக்கு எதிராக என்ன செய்யப்போகின்றோம்?
அதிகளவு பெண்கள் பயன்படுத்தப்படும் புலிகளின் வன்முறை போராட்ட வழிமுறைகளுக்கு எதிராக அல்லது மாற்றாக என்ன செய்யப்போகின்றோம்.?
இந்தடிப்படையில் சிந்தித்து இனிமேலும் செயற்படாது விடுவோமாயின் புலிகளின் போராட்டம் சில வேளை வெல்லலாம்! ஆரசாங்கம் சில வேளை தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி கொள்ளலாம்! ஆனால் இவை ஒன்றும் தமிழ் பேசும் பெண்கள் குழந்தைகள் உட்பட எந்த மனிதர்களது விடுதலையும் சாத்தியமாக்காது என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய ஒரு கசப்பான சோகமான ஒரு உண்மையாகும்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற உள்ள “இலங்கையின் எதிர் காலம் என்ன” என்ற தலைப்பில் சமாதானத்திற்கான கனேடியர்களும் மற்றும் சில அமைப்புகளும் ஒழுங்கு செய்கின்ற கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவர்கள் ஏற்கனவே இரு கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர். இவ்வாறான கலந்துரையால்கள் முக்கியமானவையே. சுpல கருத்தியல்ரீதியான தெளிவுகளைப் பெறுவதற்கு புதிய கருத்துக்களை தகவல்களை அறிவதற்கு அவசியமானவையே. ஆரம்ப கூட்டத்தில் கனடிய அரசியல் வாதிகள் கலந்து கொண்டார்கள். அரசாங்கம் பிழை என்றார்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றனர். இக் கருத்தே இவர்களுக்குப் பாதுகாப்பானது. ஆவர்கள் தம் கருத்தை கூறி எழுந்து போகும் பொழுது பலர் அவர்கள் பின்னால்; வால் போல் எழுந்து சென்றனர். ஏதற்காக? தீர்வு எதையும் கொண்டு சென்றாரா? யாருக்குத் தெரியும்? இரண்டாவது நிகழ்வு பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கலந்துரையாடப்பட்டது. இது இவர்களது ஆய்வுகளுக்குப் பயன்படலாம். கனடிய அரசியல் வாதிகள் இன்மையால் பங்குபற்றியோரும் முதலாவதை விட குறைவானவர்களாகவே இருந்தனர். இப்பொழுது மூன்றாவது கூட்டம். ஆனால் சமாதானத்தை நோக்கிய செயற்பாடு என்பது இக் கால் இடைவெளிகளில் பூச்சியமானதாகாவா அல்லது எவ்வாறு இருந்தது இருக்கின்றது.

ஆரசியல்வாதிகள் கல்விமான்கள் கருத்தாளர்கள் ஆய்வாளர்கள் தம் சார்புக்கருத்துக்களை கூறிச் செல்வார்கள். இது மட்டும் இலங்கையில் சமாதானத்தை கொண்டுவரப்போவதில்லை. இலங்கையின் எதிர் காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. முhறாக,

இலங்கை அரசு முன்னெடுக்கும் போரை நிறுத்துவதற்கு உரிமைகளை மறுத்தமைக்கு என்ன செய்தோம்?
புலிகளின் வன்முறை, சுய தற்கொலை, ஐனநாயக மறுப்பு பாதயை மாற்றுவதற்கு அல்லது மாற்றாக என்ன செய்தோம்?
சுமாதானத்திற்கான கனடியர்கள் என்ன செய்தோம்?
பேண்கள் சந்திப்பு என்ன செய்தோம்?
புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் என்ன செய்தோம்?

புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து புலிகளுக்கு சார்பாகவும் எதிராகவும் கதைப்பதும் அரசாங்கத்திற்கு வால் பிடிப்பதும் கஸ்டமான விடயமல்ல. இவை எதுவும் இலங்கையில வாழும் தமிழ் சிங்களம் பேசும் மனிதர்களுக்கு விடுதலையையோ உரிமைகளையோ பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. ஆகவே மேற்குறிப்பிட்ட மனிதர்களின் ஆரோக்கியமான அமைதிக்கான சமாதானத்திற்கான ஒன்றுபட்ட கூட்டுறவான “அமைதியை அமைதியுடாக பெறும்” செயற்பாடே இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும். இது நிச்சயமாக பெண்ணிய கருத்தினடிப்படையில் முன்னெடுக்கப்படும் பெரும்பான்மை பெண்கள் பங்குற்றும் செய்றபாடு ஒன்றின் மூலமே சாத்தியமானதாகும். இதுவே, “இலங்கையில் வாழும் மனிதர்களுக்கு நம்பிக்கையை வழங்கும்”.

தோடர்ச்சியான கலந்துரையாடல்கள் மட்டுமல்ல பொது இடங்களில் இலங்கை துர்துவரலயங்களின் முன்பான போரை நிறுத்துவதற்கும் உரிமைகளை மதிப்பதற்குமான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் அமைதியான செய்ற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது மிக மிக அவசியமானதாகும்.

பி.கு. நான் ஒரு சாதாண ஆண் மனிதர். மாற்றம் என்பது என்னளவிலையே ஏற்படாதபோது பிறரிடம் வெளியில் எவ்வாறு மாற்றத்தை எதிர்பார்ப்பது. ஆமைதி ஒவ்வொரு மனிதரிலிருந்தும் அவர்களது இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும அல்லவா பிறக்க வேண்டும். என்னிலிருந்து எப்பொழுது இந்த அமைதி உருவாகும்?


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍எனதேயான சில கருத்துக்கள்...

1. இரு பார்வைகளில் ஏதேனுமொன்றுடன் ஒத்துப்போக வேண்டுமென்ற அவசியம் எனக்கோ உங்களுக்கோ இல்லை. வேறு வேறு பார்வைகளைக் கிடைமட்டத்தில் வைப்பதன் மூலம் வாசகி/கன் தனக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ள விழைகிறேன்.

2. மீராபாரதி எனக்குத் தனி மின்னஞ்சலில் அனுப்பியதுதான் என்றபோதும் அது பலருக்கும் அனுப்பப்பட்ட குழு மின்னஞ்சல் என்பதால் பொதுப்பார்வைக்காகவும் பகிர்தலுக்குமானதே என்னும் புரிதலின் அடிப்படையிலேயே பொதுவெளியில் முன்வைக்கிறேன்.

3. மீராபாரதி ஒரு ஓஷோ பற்றாளர். அவரது வலைத்தளத்தில் 'புரட்சிகர இயக்கத்திலிருந்து விலகியது ஏன்?'' என்று ஒரு பதிவெழுதியிருக்கிறார். அவர் பங்குபற்றியது தேசிய இன விடுதலை இயக்கமா, நக்சல்பாரி இயக்கமா, மய்யநீரோட்ட இடதுசாரி இயக்கமா என்பது குறித்த விபரங்களை அறியேன். என்றபோதும் ஏதேனுமொரு குறிப்பான அரசியல் பார்வையோடு இயங்கிருக்கிறார் என்பது என் புரிதல்.

4. தமிழ்நதியின் பதிவில் அய்யனார், பதிவு குறித்த பிரக்ஞை எதுவுமில்லாமலே தொடர்பின்றி ஒரு பெண்பதிவர் குறித்து இட்டுள்ள பின்னூட்டம் அவரது அரசியல் அரைகுறை அறிதலையும் ஆணாதிக்கத்திமிரையுமே காட்டுகிரது.

Wednesday, August 6, 2008

தூங்கும்போது காலாட்டுதல்












நீண்டநாட்களாகி விட்டன. இன்னும் மூன்று மாதங்கள் எழுதாமலிருந்தால் தங்கமணி, ரோசாவசந்த் வரிசையில் 'மூத்த வலைப்பதிவர்கள்' பட்டியலில் சேர்வது உறுதி. நிறைய பதிவர்கள் புதிதாக எழுத ஆரம்பித்திருத்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான செய்திதான் என்றபோதும் பெரிதும் ஆழமற்ற இடுகைகளே அதிகம் தென்படுகின்றன. சினிமாச்செய்திகளுக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. ம.க.இ.க, பெரியார் திராவிடர் கழகம் போன்ற மாற்று இயக்கத்தோழர்களின் பதிவுகளும் குறைந்துவருகின்றன. சிறுபத்திரிகை மாதிரி எழுத்துப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் இதில் வருந்துதற்குரிய விஷயங்கள் இரண்டு. 'கலக்கப்போவது யாரு' அசத்தப்போவது யாரு' கோவை குணா, ரோபோ சங்கர் வகையறாக்களைப் போல, ரமேஷ் பிரேம், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனைப் பாவனை செய்யும் மிமிக்ரி கலைஞர்கள் பதிவர்களாக மாறியிருப்பது ஒரு சோகமெனில், நடைமுறை சார்ந்த அரசியல் குறித்த அவதானமோ அக்கறை இவர்களிடம் துளியும் இருப்பதாய்த் தெரியவில்லை. பொத்தாம்பொதுவாக இடதுசார்பு அரசியல்தான் எங்களுடையது என்று சொல்லிக்கொண்டாலும் கூட 90 களுக்குப் பின் உலகமயமாக்கல் நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் நுழைத்திருக்கும் பாரியத்தாக்கங்கள், இன்னமும் உத்தபுரம் போன்ற பகுதிகளில் பேய்ப்பல் காட்டிச்சிரிக்கும் சாதித்திமிர் இவையெல்லாம் குறித்துப் பின்நவீனப்பூசாரிகளிடமிருந்து ஒரு எழுத்தும் வருவதில்லை. போரடிக்கும் லெக்சர்களும் எழுதிப்பழகும் உத்திகளுமே நவீன வலைப்பதிவு எழுத்துக்களாய் மீளவும் மீளவும் வைக்கப்படுகின்றன. இவற்றினின்று விலகிச் சமீபமாய் என்னைக் கவர்ந்த பதிவர் 'வினவு'. பெரிய ஆர்ப்பாட்டம், பின்நவீனத்துவ டிரெய்லர்கள் எதுவுமின்றி இயல்பாக எழுதுகிறார். குறிப்பாக் ஜெயமோகனும் நாவல்பழமும் குறித்த பதிவு ஜெமோவின் வர்க்கச்சார்பைத் தோலுரிக்கிறது. இந்தியாடுடே முஸ்லீம்களுக்கு எதிராய் வெளியிட்டுள்ள சிறப்பிதழ் குறித்து வினவு மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது துயரளிக்கிறது.

----------------------------

வலைப்பதிவுலகப் பரபரப்புச் செய்திகளை வாசிக்க நேரமில்லை. முதலாவதாகப போலி பிரச்சினை ஒருவழியாக முடிவிற்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாக விடாதுகருப்பு பக்கத்தில் மூர்த்தி எழுதிய கடிதம் மட்டும் படிகக நேர்ந்தது. அப்புறம் பெயரிலி அவர்கள் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணியதாக அறிகிறேன். அதுகுறித்தும் முழுதாக ஏதும் தெரியாது. என்றாலும் ஒருநாள் கூகுளில் என் பெயரிட்டுத் தேடியபோது ஒரு அனானிப்பின்னூட்டத்தை வாசிக்க நேர்ந்தது. நான் எனக்கு எதிரான பின்னூட்டங்களை மட்டுறுத்திவிடுவதாகவும் ஆனால் கருத்துச்சுதந்திரம் குறித்துப் போலிக்கூச்சல் போடுவதாகவும் நண்பர் ஒரு வர் எழுதியிருந்தார். திருமணத்திற்குப் பின்னும்கூட 'உன் மனைவியை ஒழுத்ததைக் கதையா எழுதுவியாடா' என்று வந்ததைக்கூட வெளியிட்டிருக்கிறேன். எனவே இத்தகைய குற்றச்சாட்டுகளில் உள்ள அபத்தங்களை நினைத்து சிரிக்க மட்டுமே ஏலும். முன்பு நான் எல்லாவகையான பின்னூட்டங்களையும் வெளியிட்டுக்கொண்டுதானிருந்தேன், அப்பின்னூட்டங்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்றபோதிலும்கூட கருத்துச்சுதந்திரம் என்பதால். ஆனால் பின்னாளில் அத்தகைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன். கடைசியாக என் பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம் கூட அவ்வாறாக வலையுலகிற்குத் தொடர்பில்லாத வேறுசில மனிதர்களைப் பற்றி அபத்தமும் ஆதாரமற்றதுமான அவதூறுகளைச் சுமந்துவந்தது. எனன செய்ய? எச்சில் இலைகளைக் குப்பைத்தொட்டிகளில்தானே எறியவேண்டும்!
--------------------------------------

தோழர் தமிழச்சி 'வெளியிட வேண்டாம் என்று ஒரு பின்னூட்டத்தை எழுதியிருந்தார். நீண்டநாட்களாக வெளியிடாமலும் ஆனால் அழிக்காமலும் வைத்திருந்தேன். இந்த எச்சில் இலை பதட்டத்தில் தவறிப்போய் வெளியிட்டுவிட்டேன். உடனடியாகச் சுதாரித்து அழித்தும்விட்டேன். அது மொத்தம் என் வலைப்பக்கத்தில் இருந்ததே மூன்று முதல் அய்ந்துநிமிடங்கள்தானிருக்கும். ஆனால் அதற்குள் அந்தப் பின்னூட்டத்தை வைத்து சர்ச்சை உருவானதாக அறிகிறேன். அது எப்படி இருபத்துநாலுமணிநேரமும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார முடிகிறது என்று தெரியவில்லை. உண்ணவும் மலங்கழிக்கவும் தேவையற்ற தேவர்களாயிருக்கக்கூடும்.

பின் நவீனம் பற்றி நான் ,அய்யனார், சுந்தர் ஆகியோர் அறிவதற்கு முன்னமே தன் தொப்புளுக்குக்கீழே முடிவளர்ந்துவிட்டதாகவும் பெயரிலிரி அண்ணை எழுதியிருந்தாராம். வாழ்க பின்நவீனத்துவத்தாத்தா பெயரிலி அண்ணை!
----------------------------------

இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் கருத்துரிமைக்கான போராட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
------------------------------------------------

ஒருவழியாக மன்மோகன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவை அய்ந்தாண்டுகள் நிலையாக ஆண்ட முதல் பார்ப்பனரல்லாத பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால் சீக்கியச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மன்மோகனாக இருந்தாலும், மாயாவதி மாதிரியான தலித் பிரதமராக இருந்தாலும் இடதுசாரிகளானாலும் அமெரிக்க அடியாட்களாய் மாறுவார்களின்றி வேறில்லை. மாவோயிஸ்ட்களின் அரவணைப்பிலிருக்கும் நேபாளம் என்ன செய்யப்போகிறதென்று பார்ப்போம்.
-------------------------------------
இனி வாரம் ஒருமுறையாவது எழுதவேண்டும். தீவிர இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப்படாத சினிமாக்காரர்கள் குறித்து எழுத எண்ணம். முதலாவதாக கவுண்டமணி குறித்து எழுத ஆசை.‌
+ = &

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

Friday, July 11, 2008

பதில்கள் + ?கள்

கேள்விகளுக்கு நன்றி ஆடுமாடு.

1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)


முதலில் உதாரணத்தின் அடிப்படையில். முதலாவதாக அங்கு இலக்கிய மோதல் நடக்கவில்லை. சங்கரராம சுப்பிரமணியன், விக்கிரமாதித்யன், லட்சுமிமணிவண்ணன் ஆகிய மூன்று கவிஞர்களும் எழுத்ய கூட்டுக்கவிதைகள் ஈராக் மக்களுக்கு எதிரானதென்றும் ஈராக் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது என்றும் கருதிய ம.க.இ.க தோழர்கள் அவற்றிற்கெதிராக துண்டறிக்கைகளை வினியோகித்தார்கள். இலக்கியங்களுக்கெதிராகப் 'பிட்நோட்டீஸ் அடிக்கக்கூடாது' என்றோ 'புத்தகம் எழுதக்கூடாது' என்றோ சொன்னால் அண்ணாவின் 'கம்பரசத்தை'ப் பாசிசமாக அடையாளப்படுத்தலாம். ஆனால் பிரச்சினை என்னவெனில், புதிதாய் அப்போதுதான் மணமுடித்த சங்கரின் வீட்டுக்குள் புகுந்து தோழர்கள் நோட்டிஸ் வினியோகித்தது, அவரது மனைவியையை மிரளச்செய்தது, அக்கம்பக்கத்து வீட்டாரிடையே சங்கர் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்கியது என்பது இலக்கியவாதிகளின் குற்றச்சாட்டு.

கவிஞர்களிடமிருந்து மிரட்டிக் கையெழுத்து வாங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை ம.க.இ.க தோழர்களிடம் (தனிப்பட்ட முறையில் பேசும்போது) மறுத்தார்கள். சங்கர் எழுதிய கவிதைக்காக அவர் வீட்டாரைக் கலவரப்படுத்துவது என்பது தவறுதான். ஆனால் அதற்காக எழுத்தாளர்களுக்கென்று எந்த சமூகப்பொறுப்புமே தேவையில்லையா என்ன?

உங்கள் அடிப்படையான கேள்விக்கு வருவோம். 'இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா?' என்கிற கேள்வி கேட்கப்படவேண்டிய நபர்கள் ம.க.இ.க போன்ற புறச்சக்திகள் அல்ல, உண்மையில் இலக்கியவாதிகளிடம்தான் இந்தக் கேள்வி எழுப்பப்படவேண்டும். சங்கருக்கு ஆதரவாக, வன்முறைக்கு எதிர்ப்பாக இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் அதே வன்முறையைச் சக இலக்கியவாதிகளின் மீது (நேரடியாகவும், எழுத்து வழியாகவும்) செலுத்தத் தயங்கமாட்டார்கள். அதாவது எழுத்தாளனை வீடுபுகுந்து அடிப்பது, வக்கீல் நோட்டீஸ் விடுவது, போலீஸ் ஸ்டேசனில் புகார்கொடுப்பது, அடித்து உதைப்பது, செருப்பைத் தூக்கிக் காட்டுவது போன்ற அனைத்து 'உரிமைகளும்' இன்னொரு சக இலக்கியவாதிக்குத்தான் உண்டே தவிர இதில் 'அன்னியர் பிரவேசிக்க' அனுமதியில்லை. வாழ்க கருத்துச் சுதந்திரம்!

3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?

பொதுவாக நாம் இப்போது பயன்படுத்தும் 'எழுத்துத்தமிழ்' என்பது பல வட்டார வழக்குகளின் அடையாளங்களின் மீதேறி ஒற்றைப்படுத்தும் பாசிச வடிவமே. 19ம் நூற்றாண்டுப் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தால், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்டதே இந்த 'பொதுத்தமிழ்'. இந்த ஒற்றைத்துவ முயற்சிக்கு எதிராக தமிழின் பன்மைத்துவக் கூறுகளை அடையாளப்படுத்தவும், 'இங்கு தமிழ் இல்லை, தமிழ்கள்தான் உண்டு' என்று அ.மார்க்ஸ் அடிக்கடி சொல்வதைப் போல தமிழின் ஒற்றை அடையாளத்தை மறுக்கும் முயற்சியாகவே வட்டாரவழக்கின் அடிப்படையிலான இனவரைவியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய இரண்டு அம்சங்கள் வட்டாரவழக்கு என்பதும் ஒருபடித்தானதல்ல, கோவை வழக்கு என்பதில் கவுண்டர் வழக்கிற்கும் அருந்ததியர் வழக்கிற்கும் பறையர் வழக்கிற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

அதேபோல் இதுவரை கவிதைகளும் கதைகளுமே வட்டார வழக்கில் வந்திருக்கின்றனவே தவிர தமிழில் எழுதப்படும் அனைத்துக்கட்டுரைகளும் 'மய்யத்தமிழையே' பிடித்துத் தொங்குகின்றன.

4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...

மகாஸ்வேதாதேவியின் '1084ன் அம்மா'. மேற்கு வங்காளத்தில் பூர்சுவாவாகப் பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து போலிசாகச் சுட்டுக்கொல்லப்பட்ட ப்ரீதி என்னும் இளைஞனின் அம்மாவின் நினைவுகள், உணர்வுகள். மேட்டுக்குடியினரின் போலித்தனம், ஒரு சமூகப்போராளியைத் தாய் எப்படிப் புரிந்துகொள்கிறாள் என்பது குறித்த வேறு நோக்கு. பின்னுரையில் வ.கீதா குறிப்பிடுவதைப் போல 'துயரத்திற்கு மாற்றாய் நீதி'யை முன்வைக்கிறது நாவல்.

2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். சமீபகாலமாகச் சுய இன்பம் செய்யவில்லை.

இனி ஜமாலனுக்குச் சில கேள்விகள்

1. ராமானுஜத்தின் 'காந்தியின் உடல் அரசியல்' விமர்சனக்கட்டுரையில் (தீராநதி)சமணம் இந்துமதத்தின் ஓரங்கமாகவே மாறிப்போனதையும் அதற்கான கூறுகள் அதன் இயல்பிலேயே அமைந்துள்ளதையும் மாற்றத்தை ஏற்காத அதன் தன்மை குறித்தும் விளக்கிக் காந்தியைச் சமணமரபில் பொருத்தி நீங்கள் கூறுவது சரியானது என்றே கருதுகிறேன். அதேபோல் பெரியாரைப் பவுத்தமரபில் பொருத்திச் சொல்ல இயலுமா?

2. தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து...

3. ஆங்கிலம் தெரிந்தால்தான் பின்நவீனத்தைப் புரிந்துகொள்ள இயலுமா?

4. 'சாரு தன் பக்கத்தில் என் வலைப்பூ பற்றிக் குறிப்பிட்டதால் 10 கோடி ஹிட்ஸ் வந்தன' என்று புல்லரிக்கும் பதிவர்கள் குறித்து...

Thursday, July 10, 2008

கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!

நேற்று மதியம் நண்பர் ஜ்யோராம்சுந்தரின் 'காமக்கதைகள்' பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன். (சுந்தர் முழுமையாக த.மணத்திலிருந்து நீக்கப்படவில்லை என்று நம்புகிறேன்.) சுந்தரிடம் பேசியபோது இதுகுறித்த முன்னறிவிப்பு மின்னஞ்சல்கள் தனக்கு எதுவும் தமிழ்மணத்திலிருந்து அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பின்போது தோழர்.பைத்தியக்காரன், 'தமிழ்மணம் ஒரு பதிவரை எந்த அடிப்படையில் நீக்குகிறது?, குறிப்பாகத் தமிழச்சி' என்று அச்சந்திப்பிற்கு வந்த தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவரான தோழர்.சங்கரப்பாண்டியனைப் பார்த்து வினவினார்.

அப்போது சங்கரப்பாண்டி, " ஒரு பதிவர் தன்னைத் தமிழ்மணத்தில் இணைக்கும்போது அளிக்கப்படும் விதிகளின் அடிப்படையிலேயே அவர் நீக்கப்படுகிறார்' என்றும் 'அவரது எழுத்துக்கள் குறித்து பெரும்பான்மையினரான பதிவர்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் வரும்போது நீக்கப்படுகிறார்' என்றும் தெரிவித்தார்.

ஆனால் பைத்தியக்காரனின் கேள்விக்கு முன்னால் ஒரு பதிவர் சுந்தருக்குத் தொடர்ச்சியான நெகட்டிவ் ரேட்டிங் விழுவது குறித்தும், வெகுஜன அபிப்பிராயம் என்ற அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடுவது சரியா என்னும் பொருள்பட ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக நானும் தமிழச்சி உள்ளிட்ட பல பதிவர்கள் வெகுஜன அபிப்பிராயத்தின் அடிப்படையில் மட்டுமே நீக்கப்படுவது என்பது எப்படிச் சரியாகும், உதாரணமாகப் பார்ப்பனியம் குறித்து ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார் என்றால், பல பார்ப்பனர்கள் அவர் குறித்து அதிகப் புகார்களை அனுப்பினால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது எப்படிச் சரியானதாக இருக்கும் என்று கேட்டேன். ஆனால் சங்கரப்பாண்டி 'தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் அந்தப் பதிவுகளைத் தான் படிப்பதாக'த் தெரிவித்தாரே தவிர, அவரளித்த பதில்கள் திருப்தியளிப்பதாயில்லை.

இப்போது சுந்தர் விவகாரத்திற்கு வருவோம். சங்கரப்பாண்டி சந்திப்பில் தெரிவித்ததைப் போல குறைந்தபட்சம் எச்சரிக்கைகளாவது சுந்தருக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும். எந்த முன்னறிவிப்புமின்றி பதிவர் நீக்கப்படுவது ஜனநாயகத்தின்பாற்பட்டதல்ல.

மேலும் வெகுஜனத்தளங்களில் எழுத விருப்பமில்லாதவர்கள்/ வாய்ப்பற்றவர்களே பெரும்பாலும் வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இது தணிக்கைமுறையினின்று தப்பிக்கும் சுதந்திரம். ஆனால் மீண்டும் அதே வலைப்பூக்களை வழக்கமான தணிக்கைமுறைகளைக் கொண்டே கழுத்தை நெறிப்பது எவ்வகையில் நீதி?

தமிழ்மணம் இதுகுறித்து தெரிவித்துள்ள விளக்கத்தில் 'தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.
'என்றும் 'தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.' என்றும் தெரிவித்துள்ளது. அப்படியானால் 'பக்தி' என்று தலைப்பிட்டு பதிவின் உள்ளே காமக்கதைகள் எழுதினால் பிரச்சினையில்லையா?

பொதுவாகவே கலைஞர்களும் எழுத்தாளர்களும் வெகுஜன அபிப்பிராயங்களுக்கும் பொதுப்புத்திக்கும் அப்பாற்பட்டவட்டவர்கள். பொதுப்புத்தியை அப்படியே பிரதிபலிக்க செய்தித்தாள் நிருபர் போதும், கலைஞர்களோ எழுத்தாளர்களோ தேவையில்லை. ஆனால் அத்தகைய எழுத்துக்களை மீண்டும் பொதுப்புத்தி அடிப்படையிலேயே மதிப்பிடுவதன் மூலம் தமிழ்மணம் 1, மாற்றுச்சிந்தனை எழுத்தாளர்களை உரையாடல் வெளியிலிருந்து அப்புறப்படுத்துகிறது அல்லது, மீண்டும் பொதுப்புத்திக்குத் தள்ளுகிறது. இது ஆரோக்கியமான எழுத்துக்களை வளர்க்காது. இங்கே இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். சுந்தர் நீக்கப்படும்போது படித்த அறிவுஜீவிகளிடமிருந்து வருகின்ற இக்கண்டனங்கள் தமிழச்சியை நீக்கப்படும்போது வராததையும் தொடர்ச்சியான கள்ளமவுனம் கடைப்பிடிக்கப்பட்டதையும் நாமறிவோம். குறிப்பாக பைத்தியக்காரன் போன்ற மாற்றுச்சிந்தனைகளை அறிமுகப்படுத்தி எம்போன்றவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பதிவர்களும் மவுனம் சாதித்தபோது அதிர்ந்த நான் நேரடியாகவும் பகிடியாகவும் ஒருமுறைக்குமேல் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால் பதிவர் சந்திப்பின்போதாவது பைத்தியக்காரன் தமிழச்சி நீக்கம் குறித்துக் கேள்வியெழுப்பினார். ஆனால் கருத்துரிமை, பன்மைத்துவம், பெண்ணெழுத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நான் நம்பும் அய்யனார், சுந்தர், ஆடுமாடு போன்ற பதிவர்கள் இதுகுறித்துச் சின்னஞ்சிறு கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாதது வருத்தத்திற்குரியதே.

நானறிந்தவரை பின்நவீனம், மாற்றுச்சிந்தனைகளை முன்னிறுத்தும்/ ஆதரிக்கும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் பொதுவெளியில் திணிக்கப்படும் கருத்தியல் மற்றும் நேரடியான வன்முறைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றியே வந்திருக்கிறார்கள்.

மொழிவிளையாட்டு என்பது, மொழியின் அதிகாரத்தைக் கேள்விகேட்கும், அதிகாரத்தை உடைக்கும் நுண்ணரசியல் செயல்பாடு என்றே நான் நம்புகிறேன். அல்லாது அது வெறுமனே வடிவம் மற்றும் உத்தி சார்ந்த எழுத்துமுறையாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுமெனில் நாம் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் வாரிசாவோமேயல்லாது வேறொன்றில்லை. அது மீண்டும் விளையாட்டுகளைப் பார்த்து ரசித்து 'பலே' போடும் மேட்டுக்குடி அழகியல் பார்வைகளையே உற்பத்தி செய்யும்.

மாற்று அரசியல்/ இலக்கியம்/ சிந்தனை, அதிகாரமறுப்பு, பன்மைத்துவம் ஆகியவற்றை முன்வைக்கும் பதிவர்தோழர்கள் இனியாவது குறைந்தபட்சம் தாமியங்கும் வெளியாகிய வலைப்புலத்தில் அமுல்படுத்தப்படும் தணிக்கைக்கு எதிராகவாவது, (தணிக்கைக்கு உட்படுத்தப்படும் பதிவர் மற்றும் அவரது எழுத்துக்கள் தனக்கு உடன்பாடில்லையென்றபோதும்)குரல் கொடுக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய கேள்வி.

தணிக்கையை மறுப்போம். கருத்துரிமைக்காய் நிற்போம். கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!

Monday, June 30, 2008

சிந்தாநதி?

முதலவதாக சுஜிபாலா புகைப்படம் தொடர்பான செய்தி சினிமநிருபர் வலைப்பூவில் இடம்பெறவில்லை, தமிழ்சினிமா வலைப்பூவில்தான் இடம்பெற்றது என்பதைப் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். தவறுக்கு வருந்தி வாசகர்களும் சினிமா நிருபரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தமிழ்சினிமா வலைப்பூவில் வெளியான செய்தி இங்கே.

http://tamilcineema.blogspot.com/2008/06/blog-post_9128.html



ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா என்னும் தலைப்பு ஆபாசமாக இருப்பதால் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்சினிமா பதிவர் தெரிவிக்கிறார். ஆனாலும் எனது முந்தைய பதிவின் கேள்விகள் இன்னமும் அப்படியே மிச்சமுள்ளன. 'ஆபாசம்' பற்றியல்ல, நமது வரலாற்றுப் பிரக்ஞை குறித்தவையே அக்கேள்விகள்.

ஆங்கிலேய ராணுவத்தால் தமிழ்ப்பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகவும் சில பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. நான் அச்செய்தியைப் படித்ததில்லை. வாய்ப்பிருந்தால் அதை வலையிலேற்றி நண்பர்கள் உதவலாம்.

ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை நியாயப்படுத்துவதல்ல எனது நோக்கம். மாறாக தேசபக்தி, தேஅச ஒற்றுமை, கலாச்சாரத் தேசியம், மதப்பெருமிதம் போன்ற பெருங்கதையாடல்களின் வழியாக வரலாற்றைத் திரிக்கும் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே அஃது. ஆனால் பெருமளவில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைகளைச் செய்ததாக பேரளவில் ஆதாரங்களில்லை. அப்படியே இருந்தாலும் கூட அது நமது ஆதிக்கச்சாதி வெறியர்கள், இந்தியப் போலீசு மற்றும் ராணுவ 'வீரர்கள்' ஆகியோரோடு ஒப்பிட்டால் சுஜுபியாகத்தானிருக்கும்.

முந்தைய பதிவு தொடர்பாக நண்பர் சிந்தாநதி சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அது தொடர்பாக சில விளக்கங்கள்.

/
அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?/

இயக்குனரும் தயாரிப்பாளர்களும் கருத்தியல் ரீதியாக மாற்றுச்சிந்தனை உடையவர்கள் என்றோ அதற்காகத்தான் வைகுண்டர் பற்றித் திரைப்படம் எடுத்தார்கள் என்றோ அவர்களுக்கு 'கவர்ச்சி', உள்ளிட்ட வியாபார நோக்கங்கள் இல்லை என்றோ நான் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. மேலும் அத்திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் பின்னணி, கருத்தியல் பின்புலம் குறித்தும் கூட எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை வைகுண்டரை நாடார் சமூகத்தைச் சேர்ந்த 'மகானாக'ச் சுருக்கிச் சித்தரிக்கும் நோக்கமும் கூட அதற்கு இருக்கலாம். ஆனால் எனது அக்கறை அதன்பாற்பட்டதல்ல.

/ நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்./

பதிவெழுதும் இந்த நிமிடம் வரை அந்தப் படத்தையே பார்க்காத நான் அதை புரட்சிகரப்படம் என்று எப்படிக் கூற முடியும்? மேலும் எங்கே நான் அப்படிக் கூறியிருக்கிறேன்?

/வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. /

வைகுண்டர் 'பக்தர்கள்' மீது உங்களுக்கு இருப்பதைப் போலவே எனக்கும் விமர்சனங்களிருக்கின்றன. நான் எனது பதிவில் எங்கே அவரை மகானாகத் திருவுருவாக்கியிருக்கிறேன் என்பதைக் குறிப்பிடாமல் போகிறபோக்கில் அவதூறுகளைத் தெளித்துப் போவது நீதியல்ல.

மேலும் குஷ்பு விவகாரம் தொடர்பான உங்களின் ஒப்பீடு ஆகப்பெரிய அபத்தமாகத்தானிருக்கிறது. 'சுஜிபாலா வைகுண்டரின் மனைவியாக நடிக்கக்கூடாது' என்றெல்லாம் நான் உளறவில்லையே, ஒருவேளை ஒப்பீட்டின் பொருத்தப்பாடு என் சிற்றறிவிற்குத்தான் எட்டவில்லையோ, என்னவோ!

Saturday, June 28, 2008

சினிமா நிருபருக்கு ஒரு கவனக்குறிப்பு

சமீபத்தில் 'சினிமாநிருபர்' என்னும் வலைப்பூவில் 'ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா படம்' என்னும் ஒரு கவர்ச்சிப்(?) படம் வெளியாகியிருந்தது. உண்மையில் அது 'அய்யாவழி' என்னும் வைகுண்டத்தோப்பு சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் காட்சி. வைகுண்டர் ஒருகாலத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட நாடார்சமூகத்தில் பிறந்தவர். பார்ப்பன - இந்துப்பெருமத மரபிற்கெதிராக மாற்றுவழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர். அக்காலகட்டத்தில் நாடார் இனப்பெண்களுக்குத் தோள்சீலை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதும் அதற்கெதிராகத் தோள்சீலைப் போராட்டம் நடந்ததும் வரலாறு. எனவே வைகுண்டர் காலத்துப் பெண்ணாய் நடிக்கும் நடிகை திரு. சுஜிபாலா ஜாக்கெட் அணியாமல்தான் நடிக்கமுடியும். ஆனால் இத்தகைய வரலாற்று அவலத்தைக் கூட 'கவர்ச்சி விருந்து' படைக்க பயன்படுத்திக்கொள்வது அவமானகரமான விசயம்.

பொதுவாகவே வரலாற்றைத் தவறாகவோ அரைகுறையாகவோ சித்தரிப்பதாகவே தமிழ்ச்சினிமாக்கள் இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தொடங்கி பெரியார் வரை இதில் அடங்கும். இந்தியன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தியதாக ஒரு காட்சி வரும். ஆனால் இந்திய வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ ஆங்கிலேயர்கள் இந்தியப்பெண்களைப் பாலியல் சித்திரவதைகள் செய்ததாகவோ குறிப்புகள் இல்லை. ( இதுபற்றி ஒருமுறை பேசிய அருள்மொழி 'உண்மையில் வெள்ளைக்காரன் தன் பெண்டாட்டியை நேருவிடமிடமிருந்து காப்பாற்றத்தான் சுதந்திரம் கொடுத்து ஓடினான்' என்றார்.) ஆனால் மாறாக இத்தகைய - பெண்களைப் பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் கொடுமைகளை உள்ளூர் இந்திய ஆதிக்கச் சாதிக்காரர்களும் போலீசு ராணுவமும்தான் செய்தன, செய்துவருகின்றன.

வரலாற்றைக் கொலை செய்யும் திருப்பணியைத் திரைப்படங்களும் ஊடகங்களும் போட்டிபோட்டு செய்து வர, இதுகுறித்து எந்த உணர்வுமின்றி வெறுமனே நுகர்ச்சிக்கு அடிமையான நாம் எப்போது வரலாற்றுப் பிரக்ஞை உள்ளவர்களாய் மாறப்போகிறோம்?

Monday, June 16, 2008

தசாவாதாரம் < காமக்கதைகள் < டுபுக்கு

'நீலப் படங்களில் நிர்வானப் பெண்கள் ஏன் காலணிகளோடு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா ' என்று கேட்டேன் நான். 'காலனிநாடுகளில் தயாரிக்கப்பட்டு காலனியாதிக்கம் செய்யப்படும் மூன்றாம் உலகநாடுகளில் விற்பனையும் வினியோகமும் செய்யப்படுவதால்தான்' என்றான் அதீதன்.

மொழமொழன்னு யம்மா யம்மா மொழமொழன்னு யம்மா யம்மா என்றிருக்கும் முத்துராமலிங்கத்தைப் பார்த்தாலே கையடிக்கத்தோன்றுகிறது என்றும் சொன்னான் அதீதன். இந்தக் கதையில் ஏன் அதீதன் வந்தான் என்று நீங்கள் கேட்பதில் நியாயமில்லை. வெர்ஜினாவின் அறுபத்து மூன்றாம் உள்ளாடை தொலைந்துபோனதைப் போல இதுவும் ஒரு புதிரானதுதான். அப்போது வெர்ஜினாவிற்கு பதினெட்டு வயது தொடங்கியிருக்கும். ஷாப்ப்பிங்கிற்காக வெளிசென்றுவிட்டு உள்நுழைந்தபோதுதான் அறுபத்து மூன்றாவது தடவையாக தன் உள்ளாடை காணாமல் போனதைக் கவனித்தாள். அறையெங்கும் அவளது பொருட்கள் கலைத்துப் போடப்பட்டிருந்தன. முக்கியமாய் அவளது ஆடைகள். அவளது மேசையின்மேல் வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் வெர்ஜினாவின் சிகப்பு லிப்ஸ்டிக்கால் இப்படி எழுதப்பட்டிருந்தது.


















அவளுக்கு அப்போதைக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் பின்னாளில் பக்கத்து அபார்ட்மெண்டில் குடியிருந்த இருபத்தாறு வயது இளைஞனும் மொழமொழன்னு ஷேவ் செய்து தினமும் மழித்துக்கொள்பவனும் சாப்ட்வேர் பொறியாளனுமான ராம் அய்யரோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்ட ஒருநாளில்தான் அந்த குறியீட்டின் பின்னுள்ள ரகசியத்தைக் கண்டுபிடித்தாள்.

வெர்ஜினா தன் ஆடைகள் அனைத்தையும் களைந்திருந்தாள். படுக்கையில் அவள் படுக்கச் செல்வதற்குமுன் ராம் அய்யர் ஏசியை முழுவதுமாக நிறுத்தியிருந்தான். அவளுக்கோ வியர்த்துக்கொட்டியது. 'உன்னை உன் வாசனையோடேயே முகரவும் நுகரவும் வேண்டும் என்றான் ராம்.

அவளது உடலெங்கும் பிசுபிசுத்து மினுமினுத்த வியர்வைத்துளிகளை நாவால் சுவைத்துக்கொண்டே வந்த ராம் இறுதியில் வெர்ஜினாவின் கக்கங்களில் நிலைகொண்டான். அவளது கக்கங்களை நுகர்ந்தபடியே அவளைப் புணரத்தொடங்கினான். குறையொளிக்குகையாய்க் கக்கங்கள் திகழ அக்குள் அல்குலாய் முயங்கி மயங்க ராம் தன்னை இழந்துமீட்டபொழுதுகளின்பின் அவன் பாத்ரூமில் இருந்தபோது அதே அடையாளம் அவனது மேசைவிரிப்புகளில் இருந்ததைக் கண்டாள் வெர்ஜினா.

பாத்ரூமிலிருந்து வெளிவந்த ராமும் அவளது உள்ளாடைகளைக் கவர்ந்துவந்தவன் தான் தான் என்று ஒத்துக்கொண்டான். முக்கியமாக அவளது வட்டுடையின் அக்குள் பகுதியை முகர்ந்தபடியேதான் தன் சுயமைதுனம் உச்சத்தை அடையுமென்றான் ராம் அய்யர். அந்த ஓம் போலத் தோற்றமளிக்கும் சின்னத்தை உற்றுக்கவனித்தால் ஒருசமயத்தில் கக்கங்களைப் போலவும் மற்றொரு சமயத்தில் யோனியை நினைவூட்டுவதைப் போலவும் இருப்பதைக் காணமுடியும். தான் அறுபத்துமூன்று உள்ளாடைகளைக் கவர்ந்ததன் மூலம் தனது பித்ருக்களான அறுபத்துமூன்று நாயன்மார்களின் ஆன்மாக்களை சாந்திப்படுத்தியதாகவும் லிங்கத்தின் அடிப்பகுதியை நன்கு உற்றுக்கவனித்தால் அது பிரேசியரின் வடிவத்தை ஒத்ததாய் இருப்பதை உணர்ந்துகொள்ள முடியுமென்றும் சொன்ன ராம் அய்யர் கலவியின் மூலமாக ஆன்மீக அனுபவத்தை உய்த்துணரமுடியுமென்றான். காமம் மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் பார்த்தால் காமம் தெரியாது. அப்போது அவனது இன்னொரு நெருங்கிய நண்பனான கோபால் அய்யங்காரின் பூர்வீகக் கதையையும் வெர்ஜினா அறிய நேரிட்டது.

கோபால் அய்யங்காரின் முந்தைய பல்பிறவிகளிலொன்றாய் 12ம் நூற்றாண்டில் குலோத்துங்கச்சோழனின் ஆட்சிக்காலத்தில் கடும் பெருமாள் பித்தனாய் வாழ்ந்திருக்கிறான். நம்பியாழ்வார் என்னும் பெயர்கொண்ட அவனுக்கு சைவச்சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கச் சோழனின் மூலமாகவும் அவன்பின்னிருந்து இயக்கிய பரச்சமயமாகிய சைவச்சமயத்தைச் சேர்ந்த சைவர்கள் மூலமாகவும் பல சோதனைகள் நிகழ்ந்தன.

அந்த சோதனைகளின் உச்சகட்டமாக ஒரு கொடுமை அரங்கேறியது. யாருக்கும் தெரியாமல் உள்ளங்கையளவே இருக்கும் ஒரு பெருமாள் சிலையைத் தானே பிரதிஷ்டை செய்து அந்த சைவ இருள் சூழ்ந்த நாட்டில் வணங்கிவந்தான் நம்பியாழ்வார். ஒருநாள் இவ்விசயம் எப்படியோ சைவக்குரவர்கள் வழியாக மன்னனுக்குத் தெரியவர அரசுக்காவலர்கள் நம்பியின் வீட்டைச் சோதனையிட வந்தனர். அப்போது பெருமாளை எங்கே ஒளித்து வைப்பது என்று தெரியாது கலங்கி நின்ற நம்பி கடைசியாய் அதற்கொரு உபாயம் கண்டுபிடித்தான்.

தனது குதப்பகுதிக்குள் கஷ்டப்பட்டுப் பெருமாள் விக்கிரகத்தை நுழைத்துத் தன்னையும் பெருமாளையும் காப்பாற்றிக்கொண்டான். ஆனாலும் நம்பி தன் உயிர்துறக்கும் வரை பெருமாள் விக்கிரகத்தை வெளியே எடுக்கமுடியவிலையென்றும், குதம்வழியாக குடலில் வாழ்ந்ததால் அவர் குதம்நுழைபெருமாள் என்று பெயர் பெற்றார் என்பதும் அய்தீகம்.

இத்தனை நூறாண்டுகளையும் யுகங்களையும் ஜென்மங்களையும் தாண்டி இந்தப் பிறவியில்தான் அமெரிக்காவில் வசித்துவந்த கோபால் அய்யங்கார் சரியாக சென்ற வைகுண்ட ஏகாதசியன்று, அதாவது செப்டம்பர் 11ம் தேதி, முக்கி முக்கி வெளிக்குப் போகும்போதுதான் அந்த பெருமாள் சிலை வெளிவந்ததாகவும் சொல்லிமுடித்தபோது வெர்ஜினவின் அக்குள் முதல் அல்குள் வரையிலான ரோமங்கள் சிலிர்த்தன.

குறுக்கெழுத்துப்போட்டி




















இடமிருந்துவலம்


1. டூ + புடுக்கு =

2. இந்தக் கதையின் முதல்வரி யாருடையது?


3.

4.


5.

வலமிருந்து இடம்

4. இக்கதையின் இரண்டாம் பத்தியில் கிண்டலடிக்கப்படும் தேசியத்தலைவர்

5. நீலப்படங்களில் பெண்கள் காலணி மட்டும் அணிந்திருக்கும்போது ஆண்கள் இதை அணிந்திருப்பார்கள்.

8.

2.


மேலிருந்து கீழ்

1. நம்பி தற்காலப்பிறவியில் செல்லமாக அழைக்கப்படும் பெயர்.

2. பூணூல் - இந்த வார்த்தையில் இடையிலிருக்கும் ணூஎன்ற எழுத்தை எடுத்துவிட்டால் மிச்சமிருக்கும் சொல்

கீழிருந்துமேல்.

1. 'இந்தக் கதை காமத்தின் அதிகாரக் கட்டமைப்பை உடைக்கிறது. இப்படித்தான் அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று பின்னூட்டம் இடப்போகும் பதிவரின் பெயர்.

2. பூலளந்தப்பெருமாள் கோயில் உள்ள இடம்.

Monday, May 12, 2008

நன்றி!

ஒருவழியாக அந்த 'திருமணம் என்கிற கிரிமினல் குற்றம்' நடந்துமுடிந்துவிட்டது. நேற்று ( 11.05.2008 அன்று ) திண்டுக்கல்லில் எனக்கும் ஜெயந்திக்கும் திருமண நிகழ்வு அரங்கேறியது. பறையொலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது (ஒலிநாடாதான்). வருவதாய்ச் சொன்ன ஆதித்தமிழர்பேரவைத் தலைவர் அதியமானும் கவிஞர்கள் விஜயபத்மாவும் தய்.கந்தசாமியும் வெவ்வேறு காரணங்களால் வரமுடியவில்லை. தமிழ்ச்சூழலில் புதிய சிந்தனைகளைத் தொடங்கி வைத்தவரும் எத்தனையோ சண்டைகளுக்கு மத்தியிலும் கண்ணியமான நட்பைத் தொடர்பவனுமாகிய கிழட்டுப் போக்கிரி அ.மார்க்ஸ் தலைமையேற்றார். மணமக்களாகிய நாங்களிருவரும் மாலைமாற்றிக்கொண்டு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றோம். தாலி கட்டுவது என்கிற அதி ஆபத்தான பார்ப்பனீயச் சடங்கு பறையிசையின் பின்னணியோடு நடந்தது ஒரு வரலாற்று முரண்நகைதான். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.பாலபாரதி, பெரியாரியல் முன்னணி அமைப்பாளர் தோழர்.தமிழ்முத்து, புதியதடம் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் மேகவண்ணன், திண்டுக்கல் கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாவட்ட அமைப்பாளரும் அவ்வப்போது சித்தாந்த ரீதியாக மோதிக்கொள்பவருமான தோழர்.விச்சலன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் இலக்கியம், அரசியல், தொழிற்சங்கம் எனப் பரந்துபட்ட களங்களில் ஆர்வங்கொண்டவரும் இளைஞர்களுடனான நட்பை எப்போதும் விரும்பக்கூடியவருமான தோழர். சந்தானம், ஆரம்பகாலத்தில் நான் முரட்டுத்தனமாகக் கவிதைகள் எழுதியபோது அந்தக் கவிதைகளின் அரசியலுக்காய் என்னை ஊக்குவித்தவரும் என்னை நவீனத் தமிழிலக்கியக் களத்திற்கு அழைத்து வந்த இரட்டையர்களான யவனிகாவின் இன்னொருவருமான நண்பன் செல்மா பிரியதர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாகப் பெரியாரின் குடியரசுத் தொகுப்பைக் கொண்டுவருகிற பணியில் தன் நாளைக் கழித்துக்கொண்டிருக்கும்பொழுதும் எனது அழைப்பினைத் தட்டாமல் வந்திருந்து சிறப்புரை வழங்கினார் பெரியார்திராவிடர்கழகத்தின் தலைவர் கொளத்தூர்மணி. உறவினர்களின் கூட்டத்தைவிடவும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையாலாயே அரங்கம் நிரம்பி வழிந்தது. எல்லாத் திருமண விழாக்களையும் போலவே இந்த மணவிழாவிலும் பேசப்பட்ட கருத்துக்கள் எவ்வளவுதூரம் முன்னிருந்த மக்களைச் சென்றடைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் வாழ்வு என்பது எத்தனமின்றி வேறென்ன?. வலையுலகத்தினின்று பிரிய நண்பன் வரவணையான்(எ) செந்தில் 'வயிற்றெரிச்சலுடன்' வாழ்த்துக்களை வழங்கினான். உடனிருந்த நண்பர் நமது வலைச்சுனாமி லக்கிலுக். செந்தழல் ரவி மனைவியோடு வந்திருந்தார். அய்யனார் உள்ளிட்ட ஒருசில வலையுலக நண்பர்கள் தொலைபேசி அழைப்பின் வழியாகவும் குறுஞ்செய்திகளின் வழியாகவும் வாழ்த்துக்களை அனுப்பினர். எல்லோருக்கும் நன்றிகளைச் சொல்லிக்கொள்வதைத் தவிர வேறென்ன? நன்றி.

Wednesday, April 23, 2008

கல்யாணத்துக்கு வாங்க!





அன்புநண்பர்களுக்கு

சென்னை மாநகரத்திலே, அதுவும் இந்தக் கொடூர வெயிலிலே தேடித்தேடி நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைப்பது இயலாத காரியம். எனவே வரமுடிந்த நண்பர்கள் ஞாயிறு (27.04.2008) மாலை 4.00 மணிக்கு நடேசன் பூங்கா வந்தால் சந்தித்து உரையாடி அழைப்பிதழைத் தர வசதியாக இருக்கும். வரவியலாத நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று அவசியம் திருமணத்திற்கு வரவும்.

நன்றி
பிரியங்களுடன்
சுகுணாதிவாகர்

Sunday, April 20, 2008

அலை - ஒரு ஆ-கதை முயற்சி

விசித்திரன் ஒரு கதை எழுதுவதென்று தீர்மானித்தான். டத்தோ நாகராஜ் என்னும் சகபதிவர் அ கவிதை, அ கதை என்றெல்லாம் எழுதிப் பிரபலமானதைத் தொடர்ந்தே அவன் இந்த முடிவிற்கு வந்தான். ஆனால் அ கதை எழுதினால் அது வழக்கம்போல இருக்கும் என்பதால் ஆ கதை எழுதித் தமிழை வளர்த்தே தீருவதென்று கொள்கைமுடிவெடுத்தான். ஆனால் அவனுக்கோ கவிதை எழுத வருமேயொழிய கதை எழுத வராது. (அதுவும்கூடப் பொய், யோனி, முலை, மூத்திரம், குசு, குண்டி, குறி என்றெல்லாம் கெட்டவார்த்தைகளை எழுதி நிரப்பி அவை பின்நவீனத்துவக்கவிதைகள் என்று ஊரை ஏமாற்றி வந்த ஒண்ணாம்நம்பர் கிரிமினல் அவன்.)

இதற்குமுன்பு ஒருமுறை இப்படித்தான் கதை எழுதுவதென்று முடிவெடுத்து நூலகமொன்றிற்குச் சென்று மாலை ஆறுமணிவரை தமிழ்க்கதைப்புத்தகங்களையெல்லாம் புரட்டிப் புரட்டிப் படித்து பிறகு இருட்டத்தொடங்கியபோது வீடுநோக்கி நடந்தான். ஆனால் வரும்வழியில் இயற்கை உபாதை அவனை நெட்டித்தள்ளியதால் ஒரு அரசுக்கட்டணக்கழிப்பறைகுள் நுழைந்து மலங்கழித்துக்கொண்டே தான் ஆற்றப்போகும் இலக்கியச்சேவையை எண்ணிப்பூரித்தபடி ஒரு சிகரெட்டையும் முடித்திருந்தான். ஆனால் கழிப்பறைக் காவலாளியோ இவன் உள்ளேயிருப்பது தெரியாமல் கழிப்பறையைப் பூட்டிவிட்டுப்போய்விட்டார். ஒரு இரவுமுழுக்கக் கழிப்பறையிலேயே கழித்ததையே ஒரு சிறுகதையாக எழுதலாம். ஆனால் ஏனோ அவனுக்கு அதில் விருப்பமில்லை.

(கதையின் தொடர்ச்சியை thuroki.blogspot.comல் காண்க)

தொடர்ச்சி -2

விசித்திரன் அய்ந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஊதுபத்திக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஈரோடு வரை சென்று பணம் வசூல் செய்து பேருந்தில் மதுரை திரும்பிக்கொண்டிருந்தான். அவன் பையில் 60 லட்சம் பணமிருந்தது. அடிக்கடி பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அப்படித்தான் ஒருமுறை அவன் கரூர் சென்று பஸ்ஸில் திரும்பிய நேரம்தான் ஊத்தாங்கரையில் நக்சலைட்டுகளைப் போலிஸ் கைது செய்திருந்த நேரம். பைபாஸில் வண்டியை நிறுத்திப் போலிஸ் பேருந்திற்குள் சோதனை போட்டுக்கொண்டிருந்தது. பையில் 45 லட்சம் இருந்தது மட்டுமில்லாது (எல்லாம் கணக்கில் வராத பணம்) பயணத்தின்போது படிப்பதற்காகச் சில தடை செய்யப்பட்ட மா.லெ புத்தகங்களையும் வைத்திருந்தான். ஒவ்வொரு சீட்டாக சோதனை தொடர இரைப்பைகளுக்குள் நடுக்கம். ஆனால் நல்லவேளையாக இவன் பையைச் சோதனை போடவில்லை. அப்போது சோதனை போடவந்தவர்களில் ஒரு போலிஸ்காரி ஒல்லியாகப் பார்ப்பதற்கு அழகாயிருந்தாள். (இப்போதுதான் பெண் போலிஸ்கள் பார்ப்பதற்கு அழகாயிருக்கிறாள்கள். முன்பெல்லாம் பார்க்கச் சகிக்காது பீரோ போல இருப்பார்கள்). அவள் இவன் தெருவிற்கே குடிவந்தாள் பிறகு. பெயர் சோபனா. சோபனாவையும் வடக்குக் காவல்நிலையம் உதவி ஆய்வாளர் மோகன்ராஜையும் மிக மிக அந்தரங்கமாக பார்க்க நேரிட்டது.

(கதையின் தொடர்ச்சியை thuroki.blogspot.comல் காண்க)