Sunday, April 20, 2008

தொடர்ச்சி -2

விசித்திரன் அய்ந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஊதுபத்திக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஈரோடு வரை சென்று பணம் வசூல் செய்து பேருந்தில் மதுரை திரும்பிக்கொண்டிருந்தான். அவன் பையில் 60 லட்சம் பணமிருந்தது. அடிக்கடி பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அப்படித்தான் ஒருமுறை அவன் கரூர் சென்று பஸ்ஸில் திரும்பிய நேரம்தான் ஊத்தாங்கரையில் நக்சலைட்டுகளைப் போலிஸ் கைது செய்திருந்த நேரம். பைபாஸில் வண்டியை நிறுத்திப் போலிஸ் பேருந்திற்குள் சோதனை போட்டுக்கொண்டிருந்தது. பையில் 45 லட்சம் இருந்தது மட்டுமில்லாது (எல்லாம் கணக்கில் வராத பணம்) பயணத்தின்போது படிப்பதற்காகச் சில தடை செய்யப்பட்ட மா.லெ புத்தகங்களையும் வைத்திருந்தான். ஒவ்வொரு சீட்டாக சோதனை தொடர இரைப்பைகளுக்குள் நடுக்கம். ஆனால் நல்லவேளையாக இவன் பையைச் சோதனை போடவில்லை. அப்போது சோதனை போடவந்தவர்களில் ஒரு போலிஸ்காரி ஒல்லியாகப் பார்ப்பதற்கு அழகாயிருந்தாள். (இப்போதுதான் பெண் போலிஸ்கள் பார்ப்பதற்கு அழகாயிருக்கிறாள்கள். முன்பெல்லாம் பார்க்கச் சகிக்காது பீரோ போல இருப்பார்கள்). அவள் இவன் தெருவிற்கே குடிவந்தாள் பிறகு. பெயர் சோபனா. சோபனாவையும் வடக்குக் காவல்நிலையம் உதவி ஆய்வாளர் மோகன்ராஜையும் மிக மிக அந்தரங்கமாக பார்க்க நேரிட்டது.

(கதையின் தொடர்ச்சியை thuroki.blogspot.comல் காண்க)

No comments: