Friday, July 27, 2007

ஒரு புரட்சிகர திராவிடச் சந்திப்பு

எச்சரிக்கை : இது செந்தழல் ரவிக்கு நேற்று இரவு வந்த கனவு. அடுத்தவர் அந்தரங்களைப் படிக்கக்கூடாது என்னும் நாகரீகம் உள்ளவர்கள் வேறு பக்கங்களுக்குச் சென்றுவிடலாம்.
( ஒரு காரில் வரவணையான் (எ) செந்தில், லக்கிலுக், பொட்டிக்கடை சத்யா ஆகியோர் டீக்கடை முன் இறங்குகிறார்கள்)
லக்கி : என்ன வரவணை, அசுரனைச் சந்திக்கப்போலாம்னு சொல்லிட்டு பெரியார்திடல் போகாமல் டீக்கடைக்கு வந்திருக்கீங்க?
வரவணை : ஓ, நீங்க ஆசியர் அய்யாவைச் சொல்றீங்களா? இப்ப நாம உண்மையான அசுரனைச் சந்திக்கப்போகிறோம்.
லக்கி : உண்மையான அசுரனா? அப்ப ஆசிரியர் போலியா?
வரவணை : எப்பய்யா நீ இந்த போலிப் பஞ்சாயத்திலிருந்து வரப்போறே? உன்னோட தாவு தீருது.
லக்கி : இந்த டயலாக்கை நான்தானே சொல்லணும்.
வரவணை : சரி, நீயே சொல்லித்தொலை. இப்ப நாம பதிவர் ம.க.இ.க அசுரனைச் சந்திக்கப்போகிறோம்.
(டீக்கடை வாசலில் அசுரன் அனைவரையும் செவ்வணக்கம் தெரிவித்து வரவேற்கிறார். டீக்கடைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக...)
லக்கி : தோழர், புரட்சி எப்ப வரும்?
அசுரன் : எப்ப வரும், எப்படி வரும்ன்னெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்திற்குக் கண்டிப்பா வரும்.
வரவணை : ஏன் நீங்க மட்டும் தனியாக வந்திருக்கீங்க? தோழர்கள் பாவெல், தியாகு இவங்கல்லாம் வரலையா?
அசுரன் : சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் வரும்.
வரவணை : அப்ப கூட்டமா வந்திருக்கிற எங்களைப் பன்னிங்கிறீங்களா? (டென்சனாகிறார்)
லக்கி : வரவணை, கூல். போனவாரம்தான் தோழர் அசுரன் 'நான் சிகப்பு மனிதன்' படம் பார்த்திருக்கிறார். அதனால் ரஜினி மேல கொஞ்சம் கிரேசா இருக்கிறார். இது ஒரு பிரச்சினையா, நீங்க சொல்லுங்க தோழர், புரட்சி எப்ப வரும்?
அசுரன் : வரும், வரும், இன்னும் கொஞ்ச சேரத்தில டீ வரும் அதை முதல்ல சாப்பிடுவோம்.
(டீ வருகிறது. டீ சாப்பிடும்போதே...)
லக்கி : தோழர், தமிழ்நாட்டிற்கு எப்ப புரட்சி வரும்?
அசுரன் : ஓ நீங்க தமிழ்த்தேசியப்புரட்சியைக் கேக்கிறீங்களா?.....................................................
லக்கி : தாவுதீருது, டவுசர் கிழியுது. ஒண்ணும் விளங்கலை. சரி, இந்தியா, தமிழ்நாடெல்லாம் பெரிய விஷயம்.. மடிப்பாக்கம் மூன்றாவது குறுக்குத்தெருவுக்கு புரட்சி எப்ப வரும்?
அசுரன் : (குழப்பத்துடன்) அங்க என்ன இருக்குது?
லக்கி : எங்க வீடு.
அசுரன் : (கோபத்துடன்) இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையா? புரட்சி என்ன கேஸ்கனெக்சனா, கேபிள் கனெக்சனா, உங்கவீட்டுக்கு வர? விட்டா எங்க கிச்சனுக்கு எப்ப புரட்சி வரும்ன்னு கேப்பீங்க போல...
லக்கி : சும்மா மழுப்பாதீங்க தோழர், உலகத்துல முதன்முதல்ல கோவை சாய்பாபா காலனியில்தான் புரட்சி வரும்ன்னு மார்க்சே எழுதிருக்கிறாராம்ல. நம்ம ஓசை செல்லா நேற்றுத்தான் 'நக்சல்களுக்கு நச்சுன்னு அஞ்சு கேள்விகள்ன்னு பதிவு போட்டிருந்தாரே?
அசுரன் : சாய்பாபா காலனியில புரட்சியா? (குழம்பிப்போகிறார்). மார்க்ஸ் எழுதியிருக்கிறாரா, எந்த மார்க்ஸ், அ.மார்க்சா?
வரவணை : அவர் சாய்பாபா காலனின்னு எழுதமாட்டாரே, காந்திபுரத்திலதானே புரட்சிவரும்ன்னு எழுதுவார்?
அசுரன் : சரியாச் சொன்னீங்க தோழர். நம்ம தோழர் பாவெல்கூட பதிவு போட்டிருந்தாரே, அவர் அ.மார்க்ஸ் அல்ல, அ.காந்தின்னு.
வரவணை : வந்ததிலேயிருந்து ரொம்ப சீரியசா பேசிட்டோம். சரக்கடிப்போமா தோழர், உங்களுக்கு வோட்கா ஓகேவா? காசு பத்தலைன்னா கவலைப்படவேண்டாம், ஓகை நடராஜனுக்குப் போன்பண்ணினா வந்திருவாரு.
அசுரன் : தோழர், நான் குடிப்பதில்லை, மக்களை நேசிப்பவன் தனிப்பட்ட போதைகளில் மூழ்கிக்கிடக்கலாமா? நாம் குடித்துவிட்டு மக்களிடம் போகமுடியுமா தோழர், மகிழ்ச்சி என்பது போராட்டம், போதையில்லை.லக்கி : அப்ப புரட்சி வந்தா டாஸ்மார்க்கெல்லாம் மூடிடுவீங்களா தோழர்?
வரவணை : இந்தாள் டார்ச்சர் தாங்கமுடியலையே!
அசுரன் : இந்த மாதிரிக் குடித்துக் கூத்தடிப்பதற்குத்தான் உங்கள் பின்நவீனத்துவ நாதாறி நண்பர் வெளியே மிதக்கும் அய்யா இருக்கிறாரே, அவரைக் கூப்பிட வேண்டியதுதானே!
வரவணை : கூப்பிட்டேனே, காலையிலே 7.30க்குப் போன் பண்ணினா நிவேதனா குட்நைட் சொல்லலைன்னு புலம்புறார். 7.30க்கு எப்படிய்யா குட்நைட் சொல்லுவாங்கன்னு சொன்னாலும் கேக்கமாட்டேங்கிறார். அவர் கொஞ்சகாலமா என்னோடு பேசுவதில்லை தோழர். என்னோடு மட்டுமில்லை, மனுசஜீவராசிகளோடேயே பேசுறதில்லை. தயாள், நிவேதனா, சௌகத்ன்னு அமானுஷ்யங்களோடேயே பேசிக்கிட்டிருக்கிறாரு, கிட்டத்தட்ட ஆவி அமுதா மாதிரி ஆயிட்டார்.
அசுரன் : நானும் கவனித்தேன். பின்நவீனத்துவம் மாதிரியான கழிசடைச் சீரழிவுத்தத்துவம் தனிநபர்வாதத்திற்குத்தான் கொண்டுபோகும். அமைப்பாக்காது. அவர் சமீபமா அரசியல் கவிதையே எழுதலை பார்த்தீங்களா, நேற்று என்னடான்னா குஞ்சம்மா குச்சி ஐஸ் வாங்கித்தரலைன்னு வருத்தப்பட்டுக் கவிதை எழுதிவச்சிருக்காரு. அவர் அய்யனார் மாதிரியான நவீன இலக்கிய வியாதிகளோடு சேர்ந்து 'கலை கலைக்காக'ன்னும் சொன்னாலும் சொல்லுவாரு. (சற்று உரக்க) கலை கலைக்காக அல்ல (அல்ல, அல்ல என்று டீக்கடைச்சுவர்களில் எதிரொலிக்கிறது. டீக்கடைக்காரர் ஜெர்க் ஆகிறார். அசுரனோ இன்னும் உரக்க) கலை மக்களுக்காக.
(அதுவரை பேசாமல் இருந்த பொட்டிக்கடை சத்யா ஆர்வமாக..) கலைன்னா யாரு கலைச்செல்வியா?
( அசுரன் டென்சனாகிறார். ஆனால் அப்போது புதிதாக டீக்கடைக்குள் நுழைந்த கருப்புச்சட்டை போட்ட நபர் அசுரனிடம் கைகுலுக்கிவிட்டு அவர் பக்கத்தில் அமர்கிறார். அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்புகிறது.)
வரவணை : யார் இவர்?
அசுரன் : இவர்தான் ...மாமா.
வரவணை : மாமா,,,வா? தோழர் நீங்கள் உங்கள் புத்தியைக் காட்டிவிட்டீர்களே, ஒரு திராவிடக் குலக்கொழுந்தை அவமானப்படுத்திவிட்டீர்களே, கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.
பொட்டிக்கடை : என்னது இது, கோத்ரேஜ் பூட்டு விளம்பரமா?
வரவணை : இனத்துரோகி, இது நமது ஆசிரியர் அய்யா அடிக்கடி சொல்வது. எனக்குத் தெரியும் தோழர். நீங்கள் சந்தேகத்துக்குரிய பார்ப்பனத்தலைமை... (சொல்லிக்கொண்டிருக்கும்போதே வரவணையின் செல்போன் ஒலிக்கிறது) பார்த்தீங்களா, பார்ப்பனத்தலைமைன்னு சொன்னவுடனே உங்கள் தோழர்கள் போன் பண்ணி மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. (ஆனால் அதற்குள் செல் ஒரு ரிங்கோடு கட்டாகிவிடுகிறது.) மிஸ்ட்கால். இந்த மிஸ்ட்காலுக்குப் போன் பண்ணி நான் மிரட்டலை வாங்கணுமா? இது உங்களுக்கே ஓவராத் தெரியலை?
அசுரன் : இல்லை தோழர் வந்து...
லக்கிலுக் : (ஆவேசமாக) இருந்தாலும் தமிழர்தலைவர் மானமிகு அய்யாவை நீங்க அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. வீரமணி அய்யா நல்லவர்.
அசுரன் : அப்படியா?
லக்கி : தினமலர் ரமேஷ் சார், ரொம்ப நல்லவர்
அசுரன் : அப்ப சங்கராச்சாரியாரும் நல்லவரா? அப்ப யார்தான் கெட்டவர்?
லக்கி : டோண்டுராகவன்
வரவணை : அதை விடுங்க, சந்தேகத்துக்குரிய... (மீண்டும் போன் அடிக்கிறது), வார்த்தையையே முடிக்கலை, போன் பண்ணி மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க பார்த்தீங்களா, (எதிர்முனையில் இருப்பதோ பாலபாரதி)
வரவணை : (மிகவும் பவ்யமாக) வணக்கம் தோழர்.
பாலபாரதி : ஹாஹாஹா, இன்னும் உனக்கு பீதி தெளியலையா? நான்தான் பாலபாரதி பேசறேன்.
வரவணை ((தனக்குள்)இந்தாள் வேறயா...) சொல்லுங்க.
பாலா : புதுசா அரைவிளையாட்டுனு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன். கடைசியா நடந்த ஜாக்பாட் நிகழ்ச்சியில குஷ்பு போட்ட ஜாக்கெட் கலர் என்னான்னு உங்களுக்குக் கேள்வி கேட்டிருக்கேன். நான் கேள்வி கேட்ட அரைமணி நேரத்தில நீங்கள் பதில் பதிவு போடணும். அப்புறம் நீங்க லக்கிலுக்கிட்ட மொக்கையா ஏதாவது கேள்வி கேட்கணும். லக்கிலுக் அசுரன்கிட்ட 'கிழக்குப்பதிப்பகத்தில் எப்பப் புரட்சி வரும்?'ன்னு கேட்பார். அசுரன் நம்ம சுகுணாகிட்ட ஏதாச்சும் கேள்விகேட்பார். அந்தாள் வழக்கம்போல பதில் சொல்லமாட்டான், அப்புறம் விளையாட்டு முடிஞ்சுடும்.
வரவணை : என்னாது அரைமணி நேரத்தில பதிவு போடணுமா? ஏங்க நீங்கதான் கிழக்குப் பதிப்பகத்துல சும்மா இருக்கீங்க, போரடிச்சுதுன்னா எவனுக்காவது போன் பண்ணி மொக்கை போடறீங்க, இல்லன்னா உண்மைத்தமிழன் பேரில அஞ்சு கமெண்ட் போடுறீங்க. அதுவுமில்லாம லேப்டாப் வச்சிருக்கீங்க. இங்க நான் பிரௌசிங் சென்டர்தான் போகணும். போனமாசம் பண்ணின பிரௌசிங்கிற்கே காசெல்லாம் தீர்ந்து இந்தமாசம் வீட்டிலிருந்து கலர்டிவியை வித்துக் காசு அனுப்பியிருக்காங்க.
பாலா : அப்ப என்ன பண்ணலாம்? பேசாம ஒருமணி நேரமா எக்ஸ்டெண்ட் பண்ணிடலாமா? என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்?
வரவணை : ம்..? போனைக் கட்பண்ணலாம். (கட்செய்கிறார்)
அசுரன் : நான்தான் சொன்னேனே எங்கள் தோழர்கள் ராணுவக்கட்டுப்பாடு உள்ளவங்கன்னு.
( இப்போது மீண்டும் வரவணையின் போன் ஒலிக்கிறது)
வரவணை : பார்த்தீங்களா, இப்ப சந்தேகமே இல்லாமல் உங்க தோழர்கள்தான், (ஆனால் எதிர்முனையிலோ முத்துதமிழினி)
முத்துதமிழினி : பிரீயாத்தான் இருக்கேன். எதுவும் பிரச்சினை இருக்கா?
வரவணை : நீங்க எப்ப ரிட்டயர்ட் ஆவீங்க?
முத்து : ஏன்?
வரவணை : இல்ல, தலைவர்கிட்ட சொல்லி விசாரணைக் கமிஷனுக்கு தலைவராப் போடச்சொல்லலாம்னுதான். எப்ப பார்த்தாலும் என்ன பிரச்சினை, என்ன பிரச்சினைன்னு. இப்பதான் மாமா போன் பண்ணி கழுத்தறுத்தார்.
முத்து : நீங்களும் அசுரன் பக்கத்துல இருக்கிறதனால ஆசிரியரை அப்படியே சொல்ல ஆரம்பிச்சீட்டீங்களா? ஆசிரியர் உங்களுக்குப் போன் பண்ணியெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாரா, அவ்வளவு நெருக்கமா, போனமுறை திடலுக்குப் போட்டோ எடுக்கப் போனபோதுதான் என்னைக் கூட்டிட்டுப் போகலை (குரல் தழுதழுக்கிறது)
வரவணை : ஒண்ணும் கவலைப்படாதீங்க. திருப்பிப் பிரச்சினை வரும்போலிருக்கு. கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன். கண்ணைத் துடைச்சுக்கங்க.
முத்து : ஆமா, ஆசிரியர் பிளாக்கெல்லாம் ரெகுலரா படிக்கிறதாச் சொன்னீங்களே?
வரவணை : ஆமாமா, போன வாரம்கூட செந்தழல்ரவி பதிவுக்கு மூணு அனானி கமெண்ட் போட்டிருந்தாரு. ஆனா இப்ப என்கிட்ட போன்ல பேசினது ஆசிரியர் இல்லை. பாலபாரதி மாம்ஸ்.
முத்து : என்ன பாலபாரதி மாமாவா? வரவணை நீங்க கொள்கைக்கு நேர்மையா இல்ல. நீங்கதானே சொன்னீங்க இயக்கத்தில் முக்கியப்பொறுப்பில இருக்கிறவங்களை மாமான்னு சொல்லக்கூடாதுன்னு. அமுக, பாகச மாதிரி இயக்கங்களில முக்கியப்பொறுப்பில இருக்கிற பாலாவை மாமான்னு எப்படிச் சொல்லலாம்? இதை உடனே கண்டிச்சு பதிவு எழுதணுமே, நான் பிளாக்கில எழுதறது கிடையாது. சரி சுகுணாதிவாகர் பாஸ்வேர்ட் தெரியும் எனக்கு. அதிலபோய் 'பிறப்பால் மாமாவா?' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டிடறேன். அப்படியே ம.க.இ.க.காரங்க எல்லோரையும் ஓவராத்திட்டுறாங்க, அவங்க முதல்ல திமுக பாமக் அரசியலைப் பண்ணட்டும்னு சொல்லி எழுதறேன். அசுரனை லக்கிகிட்ட சொல்லி திமுகவிலே சேர்த்துடலாம், பாவெலை குழலிகிட்ட சொல்லி பாமகவில சேர்த்துடலாம். ஆமாம், பிரீயாத்தான் இருக்கேன், பிளாக்கர்மீட்டிங் ஏதாவது இருக்கா?
(அதற்குள் கிராஸ்டாக்கில் கிராஸாகும் பாலபாரதி) இருக்கு இருக்கு 32ந்தேதி மதியம் நடேசன்பார்க்கில.
முத்து : எத்தனை மணிக்கு?
பாலா : 4 மணிக்கு
முத்து : அப்ப 3 மணிக்கே பார்க் வாசல்ல வந்துடறேன்.
(வரவணை கடுப்புடன் போனைக் கட்பண்ணுகிறார். திரும்பிப்பார்த்தால் லக்கிலுக், டீக்கடைக்காரரிடம், 'வீரமணி அய்யா நல்லவர், ரமேஷ் சார் ரொம்ப நல்லவர், ருக்மாங்கதன் அய்யர் நல்லவரா, கெட்டவரா' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார், 'பக்கத்துல தினகரன் ஆபிஸ் எங்க இருக்கு?' என்றும் விசாரிக்கிறார். இவ்வளவு களேபரங்களுக்கும் நடுவில் பொட்டிக்கடை சத்யா மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாரிடமோ சிரித்துச் சிரித்து கடலைபோட்டுக்கொண்டிருக்கிறார்.)
பொட்டிக்கடை : நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க, நேற்று நீங்க போட்டிருந்த கிரீன் டி-ஷர்ட் சூப்பர், உங்க சிரிப்பு எனக்குப் பிடிக்கும், நான் என்ன பண்றேன்னா கேட்டீங்க, இப்ப உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன், ஹாஹாஹா, என்ன இந்த மாதிரி ஜோக்கை நீங்க எங்கேயும் கேட்டதில்லையா? ஹாஹாஹா
வரவணை : (கடுப்புடன்) யோவ், இங்க என்னா பஞ்சாயத்து ஓடிக்கிட்டிருக்கு, நீ என்னடான்னா கடலை போட்டுகிட்டு இருக்கே?
பொட்டி : வரவணை, எனக்கும் பிரச்சினை மேல அக்கறை இருக்கு. பிரச்சினையைத் தீர்க்கத்தான் போன்ல பேசிக்கிட்டிருக்கேன்,
வரவணை : யார்கூட பேசறே?
பொட்டிக்கடை : மாமாகூட ச்சே, மகாலெட்சுமிகூட
வரவணை : எந்த மகாலெட்சுமி?
பொட்டி : சன்மியூசிக் மகாலெட்சுமி.
வரவணை : அவங்ககிட்ட என்ன பேசறே?
பொட்டி : இங்க ஒரே பிரச்சினையா இருக்கு, எல்லாரையும் கூல் பண்ண 'அழகிய அசுரா' பாட்டு பாடச்சொல்லிக் கேட்கறேன், (போனில்) என்னாது, பழைய பாட்டுதான் போடுவீங்களா, அப்ப அந்த 'மாமா, மாமா' பாட்டைப் போட்டுடுங்க.
அசுரன் (தாங்கமுடியாமல்) தோழர்............ (என்று அலறுகிறார்). ஒருநிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க. இவர் உண்மையிலேயே எனக்கு மாமாதான். எங்க அக்காவீட்டுக்காரர். பேரு திராவிடமாமன், ச்சே, திராவிடமாறன். தஞ்சாவூர்ல திகவில கோட்டச்செயலாளரா இருக்காரு.
வரவணை : இதை நீங்க முதல்லேயே சொல்லியிருக்கலாமே தோழர்.
அசுரன் : நீங்க எங்க சொல்லவிட்டீங்க? பீஸ்கட்டணும், கலெக்ஷன் காசு என்னாச்சுன்னு கௌதம் போன்பண்ணினாக்கூட 'ம.க.'இ..ககாரங்க போன்பண்ணி மிரட்டுறாங்க'ன்னு பீதியைக் கிளப்புனீங்க. பொதுவாக நக்சலைட்டுகளிடம் அரசாங்கம் ஆயுதங்களைத்தான் ஒப்படைக்கச்சொல்லும். ஆனா, எங்களைச் செல்போன், லேண்ட்லைன் இதெல்லாம் ஒப்படைக்கச் சொல்லி அரசு உத்தரவு போடப்போறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு.
வரவணை: சாரி தோழர், மன்னிச்சுக்கங்க தோழர்.
லக்கி : என்னையும் மன்னிச்சுக்கங்க தோழர், ஆமா நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவேயில்லையே, மடிப்பாக்கம் மூன்றாவது குறுக்குத்தெருவுக்கு புரட்சி எப்ப வரும்?
அசுரன் : (கடுப்புடன்) அங்க ஒரு எதிர்ப்புரட்சிகரச்சக்தி ஒண்ணு இருக்கு. அதைப் போட்டுத்தள்ளிட்டா புரட்சி வந்துடும்.
( இப்போது லக்கிலுக்கின் முகத்தில் பயரேகை)
-------------------------------------------------------------------
செந்தழல் ரவி வியர்த்து, விறுவிறுத்து கனவுகலைந்து எழுகிறார், 'ச்சே, தூங்குறதுக்கு முன்னாடி இந்த வீணாப்போன சுகுணாதிவாகர் கவிதையைப் படிக்காமல் தூங்கணும். ஒண்ணு கனவுல யாராவது கெட்டவார்த்தை சொல்லித்திட்டுறாங்க, இல்லன்னா யாராவது யாரையாவது கொலை செய்யப்போறேன்னு மிரட்டுறாங்க" என்றபடியே பாட்டிலிலிருந்து தண்ணீரை மடக் மடக்கென்று குடிக்கிறார். 'தூக்கத்துலகூட இந்தப் பன்னாடைங்க நம்மளை விடமாட்டேங்கிறாங்களே' என்று புலம்பியவர், படுத்ததும் கண்களை மூடித்தன் அருகிலிருந்த ரிமோட்டை எடுத்து பட்டனை அழுத்துகிறார்.
கனவு மாறுகிறது.. ரவியின் முகத்தில் இனம் தெரியாத பரவசம்.
இப்போது கனவில் ரவி வெள்ளை விக் வைத்து ஆளே பயங்கர சிகப்பாக மாறிவிட பக்கத்தில் கொரியபிகர் தன் உதடுகளைக் குவிக்கிறது. ரவி ஆட ஆரம்பிக்கிறார்,
"ஒருகூடை சன்லைட்...ஒருகூடை மூன்லைட்...'

4 comments:

Boston Bala said...

:))

TBCD said...

ஆபிஸ்ல படிச்சிட்டு தனியா சிரிக்கிறேன்...எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க..இது புரிய கொஞ்சம் வரலாறு தெரிஞ்சிருக்கனும் போல...அதுக்கு தோடர்பான் லிங்கையும் சேர்த்து போட்ட.. நல்லா இருக்கும்

Anonymous said...

ஆரம்பிச்சிட்டாங்கையா... ஆரம்பிச்சிட்டாங்க

சென்ஷி said...

ivlo naal nee engeyya irunthe...

sathiyama kalakkitta poo..
semma super pathivu

sathiyama ellorume ippadithan nadanthuppangannu nenaikkirane

naan athula rendu perai parthathillai

:))

super pathivu.... ippadiye kalaiychala continue pannunga

:))

senshe
from sharjah