Sunday, April 20, 2008

தொடர்ச்சி -4

இந்தக் கதையை எழுதலாமா என்று அதிசயாவிடம் கேட்டபோதும் சிரித்தாள். (எப்படி எல்லாவற்றுக்கும் சிரிக்க முடிகிறது?). ஆக மொத்தம் நீ வாசகனையும் ஏமாற்றிவிட்டாய், விசித்திரனையும் பாஸ்கரையும் ஏமாற்றிக் கடைசிவரை ஹோமோசெக்சே கதையில் வராமல் பின்நவீனத்துவத்திற்கும் துரோகம் செய்துவிட்டாய்" என்றாள். விசித்திரன் ஒரு பின்நவீனத்துவவாதியா என்பதில் அவ்னுக்கே குழப்பமிருந்தது. இதை நன்கு பி.ந கற்ற எழுத்தாளர் மகோன்னதனிடம் கேட்டபோதோ, 'பின்நவீனச்சூழல்தான் உண்டு, பின்நவீனவாதி என்று யாருமில்லை' என்றார். விசித்திரனுக்கோ இன்னும் குழப்பம் அதிகரித்தது. தான் யார், இடதுசாரியா, பின்நவீனவாதியா, இல்லை மகோன்னதன் வாதத்தின்படி பார்த்தால் பின்நவீனச்சூழல்வாதியா, ஒரு இழவும் விளங்கவில்லை. ஆனால் இந்தக் குழப்பம் விசித்திரனுக்கு மட்டும் என்றில்லை, அவன் நன்கறிந்த பல பி.ந அறிஞர்களுக்குமிருந்தது. postmodern condition என்றால் என்ன? போதையின் முதல் ரவுண்டில் அறிஞர்கள் எல்லாம் பி.ந ஆதரவாளர்களாக இருப்பார்கள். இரண்டாம் ரவுண்டில் கொஞ்சம் பெரியார், மார்க்சியம், சிறுபான்மை, தலித் ஆதரவாளர்களாக இருப்பார்கள். மூன்றாம் ரவுண்டில் சினிமாப்பாட்டுப் பாடி இளையராஜா ஆதரவாளர்களாயிருப்பார்கள், நான்காம் ரவுண்டில் ஸ்ரேயாவின் முலையைச் சிலாகித்து ஸ்ரேயா ஆதரவாளர்களாயிருப்பார்கள், அய்ந்தாம் ரவுண்டில் தனிப்பட்ட பிரச்சினைகள், இலக்கியச் சர்ச்சைகள் வெடிக்க எல்லோரையும் திட்டித் 'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு நல்லவன் நான்மட்டுமே' என்று தன்முனைப்புப்போதைக்காலகட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்களாக மட்டுமேயிருப்பார்கள். ஒருவேளை இதுதான் - p.m condition ஆ? ஆனால் சமீபத்தில் அவன் எழுதும் வலையுலகில் நடந்த ஒரு சம்பவம் அவன் கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது. நறுமுகை என்னும் வலைத்திரட்டியில்தான் அவனின் வலைப்பூ சேர்க்கப்பட்டிருந்தது. அந்த திரட்டி போனவாரம் சிங்கப்பூரிலிருந்து எழுதும் ஒரு பெண்பதிவாளரை நீக்கியிருந்தது. அதற்குச் சொன்ன காரணம் அவர் யோனி என்கிற வார்த்தையை அதிகம் உபயோகித்திருந்தார் என்பது. ஆனால் எதிர்க்கலாச்சாரக்காவலர்களான பி.ந பதிவர்கள் இதுவிசயத்தில் கூட்டுமவுனத்தை அனுஷ்டித்தார்கள். பெண்பதிவர் நீக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம் அவர் தலைப்புகளை அதிரடியாய் வைத்து வாசகர்களை ஈர்த்து விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்பது. ஆனால் பித்தன் என்னும் பி.ந பதிவர் ஒருவரின் சமீபத்தியப் பதிவுகளின் தலைப்புகள் 'டெல்யூசும் முட்டைக்குழம்பும்', 'கவுண்டமணியும் காப்ரியேல் கார்சியா மார்க்யூசும்' 'வென்சலாயியுயாவது வெங்காயமாவது' இது விளம்பரமில்லையா என்று தெரியவில்லை. இந்தக் கூத்துக்களைப் பார்த்து மனமுடைந்த விசித்திரன், மறுபக்கம் தனக்குச் சுட்டுப்போட்டாலும் கதை எழுதவராது, கெட்டவார்த்தைக்கவிதைகள் மற்றும் வம்பளப்புக் கட்டுரைகளே சாத்தியம் என்று இறுதியாய்த் தீர்மானித்து 'பின்நவீனத்துவமாவது கூதியாவது' என்று ஒரு கட்டுரை எழுதத்தீர்மானித்தான். ஆனால் இப்போது அவன்முன்ன்னால் இருந்த கேள்விகளெல்லாம் இரண்டுதான் நறும்புகை வலைத்திரட்டியின் தணிக்கை யோனிக்கு மட்டும்தானா கூதிக்கும்சேர்த்தா, பின்நவீனச்சூழல்வாதிகளுக்கு யோனி பிடிக்குமா, கூதி பிடிக்குமா என்பதுதான்.

5 comments:

Anonymous said...

கதை எழுதறாமில்ல... கதை உங்களுகுக்கெல்லாம் யோனியையும், கூதியையும் வுட்டா வேற எழுது எதுவும் தெரியாதாக்கும்...

இந்த ரேஞ்சிலேயே உளறீக்குன்னு இருந்த தமிழ்மணத்தில் இருந்து நீயும் காலிதான்... போய் உருப்படற வேளையை பாருங்க...

லக்கிலுக் said...

//// நறும்புகை வலைத்திரட்டியின் தணிக்கை யோனிக்கு மட்டும்தானா கூதிக்கும்சேர்த்தா, பின்நவீனச்சூழல்வாதிகளுக்கு யோனி பிடிக்குமா, கூதி பிடிக்குமா என்பதுதான்.////

வழக்கம்போல சூப்பர்! :-)))))

Anonymous said...

ஏன்யா!

அந்தம்மா உங்கிட்ட இருந்து தான் யோணி என்ற வார்த்தையை கற்றுத்தேர்ந்து தமிழில் எழுதி கிழித்ததாக சொல்லுது. நீ என்னடான்னா கூதிக்கு மவுசு கூட்டவர்யா? அந்தம்மா பாக்கறதுக்குள்ள பதிவை தூக்கிடு இல்லாட்டி யோனிக்கு பதில் கூதிக்கு மாறிடும்.

Anonymous said...

// பின்நவீனச்சூழல்வாதிகளுக்கு யோனி பிடிக்குமா, கூதி பிடிக்குமா//


இரண்டும் வேறு வேறா?

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//நறும்புகை வலைத்திரட்டியின் தணிக்கை யோனிக்கு மட்டும்தானா கூதிக்கும்சேர்த்தா, பின்நவீனச்சூழல்வாதிகளுக்கு யோனி பிடிக்குமா, கூதி பிடிக்குமா என்பதுதான்.//
வழக்கம்போல சூப்பர்! :-)))))///

டேய் ராசா.. 'ஜால்ரா'வைக் கொஞ்சமா தட்டுறா..

உன் 'ஜால்ரா' பாரீஸ்வரைக்கும் கேட்டு.. அப்புறம் எனக்கு அனர்த்தம் ஆரம்பிச்சுறப் போகுது..